தமிழகம் – கேரளா மாநிலங்களை இணைக்கும் முக்கிய நெடுஞ்சாலைத் திட்டமான மதுரை-கொல்லம் நான்கு வழிச்சாலை பணிகளில், முதல் கட்டமாக திருமங்கலம் முதல் வடுகப்பட்டி வரை அமைக்கப்பட்டுள்ள சாலைப்பணி வரும் டிசம்பர் 25-ம் தேதி திறக்கப்படவுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி இதனை மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்க உள்ளார் என தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
கிட்டத்தட்ட ரூ.541 கோடி மதிப்பீட்டில், 36 கிலோமீட்டர் தூரம் கொண்ட சாலைத் திட்டம் கடந்த 2023 பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டது. இதுவரை 92 சதவீதம் பணி நிறைவு பெற்ற நிலையில், மீதமுள்ள பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இத்திட்டத்தின் கீழ், ஏற்கெனவே இருந்த சாலையை நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்ததுடன், வளைவான பகுதிகள் நேர்த்தியுடன் சீரமைக்கப்பட்டுள்ளன.
மொத்தமாக 16 சுரங்கப் பாதைகள் (underpasses) அமைக்கப்படுகின்றன. இதில், ஆலம்பட்டி மற்றும் சுப்புலாபுரம் பகுதிகளில் மக்கள் எதிர்ப்பு காரணமாக சில பகுதிகளில் பணி தாமதமானது. தற்போது, அப்பகுதிகளிலும் 2 சுரங்கப் பாதைகள் உருவாக்கப்பட்டு வருகின்றன.
மொத்தமாக, இந்த நான்கு வழிச்சாலை திட்டம் தமிழ்நாட்டில் மட்டும் 129.92 கி.மீ தூரம் கொண்டதாகும். இதன் மூலம், பொருளாதார மையங்கள் இடையே இணைப்பு மேம்படுவதுடன், தமிழகம் மற்றும் கேரளா மாநிலங்களுக்கு இடையிலான சரக்கு போக்குவரத்து மற்றும் சுற்றுலா என்பனவும் மேம்படவுள்ளன.
முதல் கட்டமாக திருமங்கலம் – வடுகப்பட்டி சாலை டிசம்பர் 25ம் தேதி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில் மகா கும்பாபிஷேக விழாவுக்கான பூர்வாங்க பூஜைகள் நாளை தொடங்கி செப்டம்பர் 11…
மதுரை திருப்பாலை பகுதியில் உள்ள இஸ்கான் ஸ்ரீ ஸ்ரீ கிருஷ்ண பலராமர் திருக்கோவிலில் இன்று, செப்டம்பர் 4, 2026 அன்று,…
மதுரை, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள அரசு கள்ளர் பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், காப்பாளர்கள் மற்றும்…
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில், மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர், கோவில் நிர்வாகம்செப்டம்பர் 11 முதல் 16 வரை மூலவர் தரிசனம்…
ஜல்லிக்கட்டு குறித்து தவெக சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா சட்டப்பேரவையில் தெரிவித்த கருத்துகளைக் கண்டித்தும், தவெக அரசைக் கண்டித்தும் செப்டம்பர் 3-ஆம்…
1995 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சோலமலை பொறியியல் கல்லூரி, தரமான தொழில்நுட்ப மற்றும் மேலாண்மைக் கல்வியை வழங்குவதுடன், மாணவர்களின் திறன்…