blood_donation.jpg

மாணவர்கள் இல்லாத நேரத்தில் ரத்ததான முகாம்களுக்கு சங்கங்கள் தேவை

மதுரை அரசு மருத்துவமனையில் ரத்தவங்கி துறையின் தகவலின்படி, மே மற்றும் ஜூன் மாதங்களில் ரத்ததான பற்றாக்குறை ஏற்படும் வாய்ப்பு உள்ளது. இதனிடையே, கல்லூரிகளில் செமஸ்டர் விடுமுறை இருப்பதால் மாணவர்களிடமிருந்து ரத்தம் பெறும் வாய்ப்பு குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரத்தவங்கி துறைத்தலைவர் சிந்தா கூறியதாவது:

“2024 ஆம் ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் மாதம் வரையில், 208 ரத்ததான முகாம்கள் நடத்தப்பட்டு 30,047 யூனிட்கள் ரத்தம் பெறப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலானவை கல்லூரிகளில் நடத்தப்பட்ட முகாம்களே. தற்போது மட்டுமே 1050 யூனிட் ரத்தம் இருக்கின்றது. ஆனால், மருத்துவமனையில் தினமும் 150 யூனிட் ரத்தம் தேவைப்படுகிறது.”


தட்டணுக்களுக்கான தானம் – புதிய முயற்சி

மருத்துவமனையில் தட்டணுக்கள் மட்டும் பிரித்து பெறும் இயந்திரம் உள்ளது.

  • இதன் மூலம் அரைமணிநேரத்தில் 350 மில்லி அளவுக்கு தட்டணுக்கள் பெறலாம்.
  • தானம் செய்தவர்கள் உடல்நிலைக்கு பாதிப்பேதும் இல்லாமல் 48 மணி நேரத்தில் மீண்டும் தட்டணுக்கள் உருவாகும்.
  • இது ரத்தசோகை மற்றும் புற்றுநோய் நோயாளிகளுக்கு மிக முக்கியமான உதவியாகும்.

தொடர்பு கொள்ள வேண்டியவர்கள்:

தொண்டு நிறுவனங்கள், தொழிற்சாலைகள், ஜவுளிக்கடைகள், சிட்கோ, ஐ.டி. நிறுவனங்கள், ரசிகர் மன்றங்கள், குடியிருப்போர் நலச்சங்கங்கள் மற்றும் நண்பர்கள் குழுக்கள் – யாரும் ரத்ததான முகாம்களுக்கு ஏற்பாடு செய்ய முன்வரலாம்.

முகாம் ஏற்பாடு செய்ய அழைக்க வேண்டிய எண்கள்:
📞 82489 23925
📞 94438 30163