சமீபத்திய

அழகர் கோவிலில் ஆடித் திருவிழா ஜூலை 21ல் தொடக்கம்

மதுரை மாவட்டத்தில் உள்ள அருள்மிகு ஶ்ரீ கள்ளழகர் சுந்தர்ராஜ பெருமாள் திருக்கோவிலில் நடைபெறும் ஆண்டு தோறும் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஆடித் திருவிழா, 2026 ஜூலை 21-ஆம் தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தொடர்ந்து ஒன்பது நாட்கள் பல்வேறு வாகன சேவைகள், சிறப்பு அலங்காரங்கள் மற்றும் ஆன்மிக நிகழ்வுகளுடன் விழா நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்வாக ஜூலை 28-ஆம் தேதி கள்ளழகர் குதிரை வாகனத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சியும், ஜூலை 29-ஆம் தேதி திருத்தேர் உற்சவமும் நடைபெற உள்ளன. இந்நிகழ்வுகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்ய உள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தேதிதிருவிழா நிகழ்ச்சி
21.07.2026காலை கொடியேற்றம்
21.07.2026மாலை அன்ன வாகனத்தில் புறப்பாடு
22.07.2026சிம்ம வாகனத்தில் நரசிம்ம அவதாரம்
23.07.2026அனுமந்த வாகனத்தில் புறப்பாடு
24.07.2026கருட வாகனத்தில் புறப்பாடு
25.07.2026காலை மறவர் மண்டபம் புறப்பாடு மற்றும் சுந்தரராஜன் பட்டியில் அழகர் திருமஞ்சனம்
25.07.2026இரவு சேஷ வாகனத்தில் புறப்பாடு
26.07.2026மோகினி அவதாரத்தில் புறப்பாடு
26.07.2026இரவு யானை வாகனத்தில் புறப்பாடு
27.07.2026காலை வெண்ணெய் தாழி சேவை
27.07.2026மாலை புஷ்ப சப்பரத்தில் புறப்பாடு
28.07.2026கள்ளழகர் குதிரை வாகனத்தில் புறப்பாடு
29.07.2026திருத்தேர்

திருவிழாவில் பங்கேற்கும் பக்தர்கள் கோவில் நிர்வாகம் அறிவிக்கும் வழிகாட்டுதல்களை பின்பற்றி ஒழுங்காக தரிசனம் செய்யுமாறு அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Thoonganagaram Admin

Recent Posts

மீனவர் நிவாரணம் உயர்வு அரசுக்கு நீதிமன்ற உத்தரவு

ராமநாதபுரத்தைச் சேர்ந்த தீரன் திருமுருகன் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில், மீன்பிடி தடை காலத்தில் மீனவர்களுக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகையை…

2 நாட்கள் ago

மதுரைக்கு வெப்ப அதிர்ச்சி! உலகில் 7-வது இடம்

பிரிட்டனின் University of Oxford மேற்கொண்ட உலகளாவிய நகர வெப்ப அபாய ஆய்வில், தமிழ்நாட்டின் மதுரை உலகின் தீவிர வெப்ப…

3 நாட்கள் ago

மதுரையில் 82 சுகாதாரத் துறை வேலைகள் அறிவிப்பு

மதுரை மாவட்ட சுகாதாரத் துறையின் கீழ் செயல்படும் மாவட்ட நலவாழ்வுச் சங்கம் மூலம் அரசு சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள…

5 நாட்கள் ago

நோயாளிகளுக்கு குட் நியூஸ்… OP பதிவு ஆன்லைனில்!

அரசு மருத்துவமனைகளில் வெளிநோயாளர் (OP) சேவையை பொதுமக்கள் எளிதாக பெறும் வகையில், தமிழ்நாடு அரசு ‘நலம்AI’ (NalamAI) என்ற வாட்ஸ்அப்…

6 நாட்கள் ago

ஜூலை 29ல் திறக்கும் அழகர்கோவில் 18ம் படி கருப்பசாமி கதவுகள்

மதுரை மாவட்டத்தில் உள்ள அழகர்மலையில் அமைந்துள்ள அழகர்கோவில் சுந்தரராஜ பெருமாள் திருக்கோவிலின் முன்புறத்தில் உள்ள 18ம் படி கருப்பசாமி சன்னதி,…

7 நாட்கள் ago

90% பணிகள் முடிந்தது… திறப்பை நோக்கி மதுரை எய்ம்ஸ்

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட தோப்பூர் அருகே உள்ள கோ.புதுப்பட்டியில் 220 ஏக்கர் பரப்பளவில் ரூ.2,021.51 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு…

1 வாரம் ago