அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி 2026 சட்டமன்றத் தேர்தலை அடிப்படையாக்கொண்டு “மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்” என்ற தலைப்பில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், அவர் மதுரை மண்ணில் தீவிர பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். விவசாயிகள், மீனவர்கள், நெசவாளர்கள் உட்பட பல்வேறு தரப்பினரிடம் கலந்துரையாடி, அவர்களின் குறைகளை கேட்டு அறிந்து வருகிற இவர், அதிமுகவின் சாதனைகள் மற்றும் திமுக ஆட்சியில் நடக்கும் அவலங்களை தெளிவாக எடுத்துரைக்கிறார்.
அதிமுகவின் புதிய பிரச்சாரத் திட்டமான “திமுகவின் உருட்டுகளும் திருட்டுகளும்” மற்றும் “உண்மைக்காக உரிமைக்காக” ஆகிய பிரச்சார திட்டங்களையும் எடப்பாடி பழனிச்சாமி புதுக்கோட்டையில் தொடங்கி வைத்தார். இந்தச் சுற்றுப்பயணம் கோவை மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையம் மற்றும் கவுண்டம்பாளையம் தொகுதிகளிலிருந்து துவங்கிய நிலையில், தமிழ்நாட்டின் 234 சட்டமன்றத் தொகுதிகளையும் சென்றடைத்து, மக்கள் தொடர்பில் அமைய, திமுக அரசின் தோல்விகளையும், அதிமுக வாக்குறுதிகளையும் மக்களுக்கு வெளிப்படுத்துவதே இதன் நோக்கம் ஆகும்.
மாநில உரிமைகள், அமைதி, வளர்ச்சி மற்றும் செழிப்பை மீட்டெடுப்பதில் அவரால் உறுதி தெரிவிக்கப்பட்டு உள்ளது. அடுத்த கட்டமாக மதுரை மாவட்டத்தில் திருப்பரங்குன்றம், திருமங்கலம் மற்றும் திருச்சுழி சட்டமன்றத் தொகுதிகளில் தீவிர பிரச்சாரம் நடைபெறும். அடுத்து நான்கு நாட்கள் முழுவதும் மதுரை மாவட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் பிரச்சாரம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளார். விமான நிலையத்தில் அதிமுக தொண்டர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பூட்டினர்.
