அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி 2026 சட்டமன்றத் தேர்தலை அடிப்படையாக்கொண்டு “மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்” என்ற தலைப்பில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், அவர் மதுரை மண்ணில் தீவிர பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். விவசாயிகள், மீனவர்கள், நெசவாளர்கள் உட்பட பல்வேறு தரப்பினரிடம் கலந்துரையாடி, அவர்களின் குறைகளை கேட்டு அறிந்து வருகிற இவர், அதிமுகவின் சாதனைகள் மற்றும் திமுக ஆட்சியில் நடக்கும் அவலங்களை தெளிவாக எடுத்துரைக்கிறார்.
அதிமுகவின் புதிய பிரச்சாரத் திட்டமான “திமுகவின் உருட்டுகளும் திருட்டுகளும்” மற்றும் “உண்மைக்காக உரிமைக்காக” ஆகிய பிரச்சார திட்டங்களையும் எடப்பாடி பழனிச்சாமி புதுக்கோட்டையில் தொடங்கி வைத்தார். இந்தச் சுற்றுப்பயணம் கோவை மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையம் மற்றும் கவுண்டம்பாளையம் தொகுதிகளிலிருந்து துவங்கிய நிலையில், தமிழ்நாட்டின் 234 சட்டமன்றத் தொகுதிகளையும் சென்றடைத்து, மக்கள் தொடர்பில் அமைய, திமுக அரசின் தோல்விகளையும், அதிமுக வாக்குறுதிகளையும் மக்களுக்கு வெளிப்படுத்துவதே இதன் நோக்கம் ஆகும்.
மாநில உரிமைகள், அமைதி, வளர்ச்சி மற்றும் செழிப்பை மீட்டெடுப்பதில் அவரால் உறுதி தெரிவிக்கப்பட்டு உள்ளது. அடுத்த கட்டமாக மதுரை மாவட்டத்தில் திருப்பரங்குன்றம், திருமங்கலம் மற்றும் திருச்சுழி சட்டமன்றத் தொகுதிகளில் தீவிர பிரச்சாரம் நடைபெறும். அடுத்து நான்கு நாட்கள் முழுவதும் மதுரை மாவட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் பிரச்சாரம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளார். விமான நிலையத்தில் அதிமுக தொண்டர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பூட்டினர்.
மதுரை மாவட்டத்தில் உள்ள அருள்மிகு ஶ்ரீ கள்ளழகர் சுந்தர்ராஜ பெருமாள் திருக்கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் ஆடித் திருவிழா, இன்று (ஜூலை…
மதுரை மாவட்டம் பேரையூர் வட்டத்திற்குட்பட்ட பாப்பி நாயக்கன்பட்டி–சங்கரலிங்கபுரம் பகுதியில் உள்ள சல்லுப்பன் கரடு அடிவாரத்தில் சுமார் 2,000 ஆண்டுகள் பழமையானதாகக்…
மதுரை மாவட்ட விவசாயிகளின் கோரிக்கைகள் மற்றும் விவசாயம் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில், மாவட்ட நிர்வாகம் நடத்தும் மாதாந்திர…
மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மின் பாதை பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளும் நோக்கில் நாளை (ஜூலை 18) திட்டமிட்ட மின்தடை…
தமிழகத்தின் சேலம் மற்றும் மதுரை ரயில்வே கோட்டங்களுக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் தண்டவாள பராமரிப்பு மற்றும் பொறியியல் பணிகள் மேற்கொள்ளப்பட…
மதுரை மாவட்டத்தில் உள்ள அருள்மிகு ஶ்ரீ கள்ளழகர் சுந்தர்ராஜ பெருமாள் திருக்கோவிலில் நடைபெறும் ஆண்டு தோறும் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஆடித்…