சமீபத்திய

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி 2026 சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில் மதுரை மாவட்டத்தில் தீவிர நடவடிக்கை

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி 2026 சட்டமன்றத் தேர்தலை அடிப்படையாக்கொண்டு “மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்” என்ற தலைப்பில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், அவர் மதுரை மண்ணில் தீவிர பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். விவசாயிகள், மீனவர்கள், நெசவாளர்கள் உட்பட பல்வேறு தரப்பினரிடம் கலந்துரையாடி, அவர்களின் குறைகளை கேட்டு அறிந்து வருகிற இவர், அதிமுகவின் சாதனைகள் மற்றும் திமுக ஆட்சியில் நடக்கும் அவலங்களை தெளிவாக எடுத்துரைக்கிறார்.

அதிமுகவின் புதிய பிரச்சாரத் திட்டமான “திமுகவின் உருட்டுகளும் திருட்டுகளும்” மற்றும் “உண்மைக்காக உரிமைக்காக” ஆகிய பிரச்சார திட்டங்களையும் எடப்பாடி பழனிச்சாமி புதுக்கோட்டையில் தொடங்கி வைத்தார். இந்தச் சுற்றுப்பயணம் கோவை மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையம் மற்றும் கவுண்டம்பாளையம் தொகுதிகளிலிருந்து துவங்கிய நிலையில், தமிழ்நாட்டின் 234 சட்டமன்றத் தொகுதிகளையும் சென்றடைத்து, மக்கள் தொடர்பில் அமைய, திமுக அரசின் தோல்விகளையும், அதிமுக வாக்குறுதிகளையும் மக்களுக்கு வெளிப்படுத்துவதே இதன் நோக்கம் ஆகும்.

மாநில உரிமைகள், அமைதி, வளர்ச்சி மற்றும் செழிப்பை மீட்டெடுப்பதில் அவரால் உறுதி தெரிவிக்கப்பட்டு உள்ளது. அடுத்த கட்டமாக மதுரை மாவட்டத்தில் திருப்பரங்குன்றம், திருமங்கலம் மற்றும் திருச்சுழி சட்டமன்றத் தொகுதிகளில் தீவிர பிரச்சாரம் நடைபெறும். அடுத்து நான்கு நாட்கள் முழுவதும் மதுரை மாவட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் பிரச்சாரம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளார். விமான நிலையத்தில் அதிமுக தொண்டர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பூட்டினர்.

Thoonganagaram Admin

Recent Posts

மதுரை மீனாட்சி கோவிலில் நாளை முதல் சிறப்பு பூஜைகள்!

உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில் மகா கும்பாபிஷேக விழாவுக்கான பூர்வாங்க பூஜைகள் நாளை தொடங்கி செப்டம்பர் 11…

4 மணி நேரங்கள் ago

இன்று மதுரையில் கிருஷ்ண ஜெயந்தி கோலாகலம்!

மதுரை திருப்பாலை பகுதியில் உள்ள இஸ்கான் ஸ்ரீ ஸ்ரீ கிருஷ்ண பலராமர் திருக்கோவிலில் இன்று, செப்டம்பர் 4, 2026 அன்று,…

1 நாள் ago

ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு தேதி வெளியானது

மதுரை, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள அரசு கள்ளர் பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், காப்பாளர்கள் மற்றும்…

3 நாட்கள் ago

கும்பாபிஷேக ஏற்பாடு செப்.11 முதல் மூலவர் தரிசனம் இல்லை!

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில், மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர், கோவில் நிர்வாகம்செப்டம்பர் 11 முதல் 16 வரை மூலவர் தரிசனம்…

4 நாட்கள் ago

செப்.3 காலை 9.30 மணிக்கு அலங்காநல்லூரில் ஆர்ப்பாட்டம்

ஜல்லிக்கட்டு குறித்து தவெக சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா சட்டப்பேரவையில் தெரிவித்த கருத்துகளைக் கண்டித்தும், தவெக அரசைக் கண்டித்தும் செப்டம்பர் 3-ஆம்…

5 நாட்கள் ago

சோலமலை பொறியியல் கல்லூரி (தன்னாட்சி), மதுரை

1995 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சோலமலை பொறியியல் கல்லூரி, தரமான தொழில்நுட்ப மற்றும் மேலாண்மைக் கல்வியை வழங்குவதுடன், மாணவர்களின் திறன்…

1 வாரம் ago