வைகை, குருவாயூர் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்களில் மாற்றம் – ரயில்வே புதிய அறிவிப்பு!

railway.jpg

வைகை எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு செல்லும் பல முக்கிய ரயில்களின் சேவைகள், பராமரிப்பு பணிகளுக்காக மாற்றப்படுவதாக திருச்சி ரெயில்வே கோட்ட அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இந்த பணிகள் அக்டோபர் 28ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

மாற்றப்பட்ட ரயில் சேவைகள் விவரம்:

  • செங்கோட்டை – மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ்
    பராமரிப்பு காரணமாக அக். 16, 17, 18, 22 ஆகிய தேதிகளில், இந்த ரயில் செங்கோட்டை (06:55 காலை) முதல் விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக இயக்கப்படும்.
  • நாகர்கோவில் – மும்பை எக்ஸ்பிரஸ்
    அக். 23 மற்றும் 26 தேதிகளில், விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி வழியாக இயக்கம்.
  • கன்னியாகுமரி – ஹவுரா எக்ஸ்பிரஸ்
    இதுவும் மேலே கூறிய தேதிகளில் மாற்று வழியாக இயக்கப்படும்.
  • குருவாயூர் – சென்னை எக்ஸ்பிரஸ்
    அக். 15, 16, 17, 21, 22 ஆகிய தேதிகளில், விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக இயக்கப்படும்.
  • வைகை எக்ஸ்பிரஸ் (சென்னை எழும்பூர் – மதுரை)
    • அக். 25: சென்னை புறப்பாடு 1:45 PM; வழியில் 40 நிமிடங்கள் நிறுத்தம்.
    • அக். 28: வழியில் 30 நிமிடங்கள் நிறுத்தம்.
  • சென்னை எழும்பூர் – தூத்துக்குடி சிறப்பு விரைவு ரயில்
    • அக். 28: சென்னை புறப்பாடு 12:30 PM; வழியில் 110 நிமிடங்கள் நிறுத்தம்.

பயணிகள் கவனிக்க:

பராமரிப்பு பணிகள் காரணமாக, ரயில்கள் மாற்று வழிகள், நேரம் மற்றும் நிறுத்தங்களில் மாற்றத்துடன் இயக்கப்படுகின்றன. எனவே பயணிகள், பயண திட்டங்களை முன்கூட்டியே திட்டமிட்டு பயணிக்க வேண்டும்.