சமீபத்திய

மதுரை வண்டியூரில் பல திட்டங்கள் தொடங்கும் முதல்வர் ஸ்டாலின்

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நாளை (பிப்.21) மதுரைக்கு ஒரு நாள் பயணம் மேற்கொண்டு, பல்வேறு அரசு வளர்ச்சி திட்டங்களை திறந்து வைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்க உள்ளார். காலை 9.30 மணிக்கு சென்னை விமான நிலையத்திலிருந்து சிறப்பு விமானம் மூலம் புறப்படும் அவர், காலை 10.10 மணிக்கு மதுரை விமான நிலையம் சென்றடைகிறார். தொடர்ந்து வடயமஞ்சியில் அமைந்துள்ள எல்காட் தொழில்நுட்பப் பூங்காவிற்கு சென்று, காலை 11.35 மணிக்கு பின்னாகிள் நிறுவனத்தின் திறன் மேம்பாட்டு மையக் கட்டடத்தை திறந்து வைக்கிறார். இந்த பயணத்தை முன்னிட்டு மதுரையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதுடன், பல்வேறு துறைகள் சார்ந்த அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.

திறக்கப்படும் திட்டங்கள் மற்றும் நிகழ்வுகள்

மதுரை விமான நிலையம், வடயமஞ்சி எல்காட் தொழில்நுட்பப் பூங்கா, தமுக்கம்–நெல்பேட்டை அண்ணா சிலை பகுதி, சிவகங்கை, மதுரை ஸ்ரீ மீனாட்சி அரசு மகளிர் கல்லூரி, வண்டியூர் கண்மாய், உத்தங்குடி, காந்தி நினைவு அருங்காட்சியகம்.

பின்னாகிள் திறன் மேம்பாட்டு மையம், ரூ.190.4 கோடி மதிப்பிலான நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உயர்நிலைப் பாலம் (1.1 கி.மீ.), மருது சகோதரர்கள் உருவச் சிலைகள் (காணொலி மூலம்), மேம்படுத்தப்பட்ட கணினி ஆய்வகம், வண்டியூர் கண்மாய் பூங்கா, அங்குரன் அறிவியல் மையம், பேரூராட்சிகளின் புதிய அலுவலகக் கட்டடம், 867 ஊரக குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீர் திட்டம்.

பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தல், போக்குவரத்து மாற்று வழிகள் அறிவிப்பு, போலீஸ் கண்காணிப்பு, நிகழ்ச்சி தளங்களில் தடுப்புகள் அமைத்தல்.

மாலை 4 மணிக்கு மதுரை உத்தங்குடியில் திமுக தென் மண்டல வாக்குச்சாவடி குழு உறுப்பினர்கள் கலந்தாய்வு கூட்டம், காந்தி நினைவு அருங்காட்சியக நிகழ்ச்சி, இரவு 7.30 மணிக்கு சிறப்பு விமானம் மூலம் சென்னை திரும்புதல்.

முதல்வரின் பயணத்தை முன்னிட்டு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.


Thoonganagaram Admin

Recent Posts

கொடியேற்றத்துடன் தொடங்கிய கள்ளழகர் ஆடித் திருவிழா

மதுரை மாவட்டத்தில் உள்ள அருள்மிகு ஶ்ரீ கள்ளழகர் சுந்தர்ராஜ பெருமாள் திருக்கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் ஆடித் திருவிழா, இன்று (ஜூலை…

21 மணி நேரங்கள் ago

மதுரையில் 2,000 ஆண்டு தாழிப்பானை கண்டுபிடிப்பு

மதுரை மாவட்டம் பேரையூர் வட்டத்திற்குட்பட்ட பாப்பி நாயக்கன்பட்டி–சங்கரலிங்கபுரம் பகுதியில் உள்ள சல்லுப்பன் கரடு அடிவாரத்தில் சுமார் 2,000 ஆண்டுகள் பழமையானதாகக்…

2 நாட்கள் ago

மதுரையில் ஜூலை 24 விவசாயிகள் குறைதீர் கூட்டம்

மதுரை மாவட்ட விவசாயிகளின் கோரிக்கைகள் மற்றும் விவசாயம் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில், மாவட்ட நிர்வாகம் நடத்தும் மாதாந்திர…

4 நாட்கள் ago

மதுரையில் நாளை திட்டமிட்ட மின்தடை

மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மின் பாதை பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளும் நோக்கில் நாளை (ஜூலை 18) திட்டமிட்ட மின்தடை…

5 நாட்கள் ago

திண்டுக்கல் வழித்தடம் தவிர்த்து ரயில்கள் இயக்கம்

தமிழகத்தின் சேலம் மற்றும் மதுரை ரயில்வே கோட்டங்களுக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் தண்டவாள பராமரிப்பு மற்றும் பொறியியல் பணிகள் மேற்கொள்ளப்பட…

6 நாட்கள் ago

அழகர் கோவிலில் ஆடித் திருவிழா ஜூலை 21ல் தொடக்கம்

மதுரை மாவட்டத்தில் உள்ள அருள்மிகு ஶ்ரீ கள்ளழகர் சுந்தர்ராஜ பெருமாள் திருக்கோவிலில் நடைபெறும் ஆண்டு தோறும் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஆடித்…

7 நாட்கள் ago