மார்கழி மாதப் பிறப்பை முன்னிட்டு, மதுரை மாவட்டத்தில் உள்ள முக்கிய பெருமாள் கோயில்களில் நடை திறப்பு மற்றும் நடை அடைப்பு நேரங்களில் தற்காலிக மாற்றம் செய்யப்படுவதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த மாற்றங்கள் டிசம்பர் 16 முதல் 2026 ஜனவரி 13 வரை அமலில் இருக்கும்.
அழகர்கோவில் – நடை நேர மாற்றம்
- அதிகாலை 4.00 மணிக்கு நடை திறப்பு
- மதியம் 12.00 மணிக்கு நடை சாத்தப்படும்
- பிற்பகல் 3.30 மணிக்கு மீண்டும் நடை திறப்பு
- இரவு 7.00 மணிக்கு நடை அடைப்பு
தல்லாகுளம் & வண்டியூர் பெருமாள் கோயில்கள் – நடை நேர மாற்றம்
- அதிகாலை 5.00 மணிக்கு நடை திறப்பு
- காலை 11.30 மணிக்கு நடை சாத்தப்படும்
- மாலை 5.00 மணிக்கு மீண்டும் நடை திறப்பு
- இரவு 8.30 மணிக்கு நடை அடைப்பு
மார்கழி மாதத்தின் ஆன்மிக சிறப்பை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்ட இந்த நடை நேர மாற்றங்கள், பக்தர்கள் அதிகாலையிலேயே தரிசனம் செய்ய ஏதுவாக அமைக்கப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. பக்தர்கள் இதனை கவனத்தில் கொண்டு தங்களது தரிசனத்தை திட்டமிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
