மலையத்துவஜன் பாண்டிய மன்னனுக்கும், காஞ்சனாமாலை அரசிக்கும் குழந்தை இல்லாமல் மிகவும் கவலையாக இருந்தது. இதனால், அவர்கள் சிவபெருமானிடம் குழந்தை பெற வேண்டி ஆராதனை செய்தனர். சிவபெருமானின் அருளால், மீனாட்சி யாகசாலையில் அக்னியில் தோன்றி அவதரித்தார். இதனால், “அங்கயர் கன்னி” என்ற பெயரும் பெற்றார்.
மீனாட்சி அம்மனுக்கு பிறப்பிலேயே மூன்று மார்புகள் காணப்பட்டன. மணம் முடிப்பவரை அவை மறைந்து விடுவதாக கூறப்படுகிறது. கயிலை மலையில் சிவபெருமானை பார்த்தவுடன், அந்த மத்திய மார்பு மறைந்து விடுகிறது. இதனை உணர்ந்த மீனாட்சி, சிவபெருமானுக்கு காதல் கொள்கிறார், இதன் பின்னர் சிவபெருமானும் சுந்தரேஸ்வரராக அவளை மணம் முடிக்கிறார்.
மீனாட்சி அம்மனின் திருமேனி சிலை மரகதக் கல்லால் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இக்கோவிலின் அமைப்பைத் தேவந்திரன் செய்ததாகவும், குலசேகர பாண்டியர் கட்டியதாகவும் கூறப்படுகிறது. இக்கோவிலில் முதலில் மீனாட்சி அம்மனுக்கு பூஜைகள் நடத்தப்படுகின்றன, அதன் பின்னர் சுந்தரேஸ்வரருக்கு பூஜைகள் நடைபெறுகின்றன.
மதுரையை ஆண்ட திருமலை நாயக்கர் ஆட்சிக் காலத்தில், கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபோகம் சித்திரை மாதத்தில் நடைபெற்றது. கள்ளழகர், மதுரையில் சோழவந்தான் அருகில் உள்ள தேனூர் பகுதியில் முதலில் ஆற்றில் இறங்கினார். அங்கு தவளை முனிவருக்கு சாபம் விமோசனம் வழங்கினார் என்பதுதான் வரலாற்றின் பகுதி.
பாண்டியர் ஆட்சிக் காலத்தில், மீனாட்சி கல்யாணமும், பட்டாபிஷேகமும் வெவ்வேறு மாதங்களில் நடந்ததாக கூறப்படுகிறது. மீனாட்சி திருக்கல்யாணம் தைப்பூசத்தில், பட்டாபிஷேகம் மற்றும் தேரோட்டம் மாசி மாதத்திலும் நடைபெற்றது.
சைவ சமயத்தினர், மீனாட்சி திருக்கல்யாணத்தை கொண்டாடினார்கள், அதேபோன்று வைணவ சமயத்தினரும் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபோகத்தை கொண்டாடினார்கள்.
திருமலை நாயக்கர், வைணவ சமயத்தை பின்பற்றினாலும், மீனாட்சி அம்மனின் மீது மிகுந்த பக்தி கொண்டவர். அவர் மதுரைக்கு பல திருப்பணிகளைச் செய்து கொடுத்தார், ஒரு பெரிய தேரை கொடுத்தார். இந்த தேரை இழுக்க மக்கள் சிரமப்பட்டனர், இதனால் அடுத்த ஊர்களில் இருந்து மக்கள் வரவேற்கப்பட்டனர்.
திருமலை நாயக்கர், மீனாட்சி திருக்கல்யாணம், பட்டாபிஷேகம், தேரோட்டம் மற்றும் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபோகத்தை ஒன்றிணைத்து சித்திரை திருவிழாவை மிகுந்த பெருமையுடன் கொண்டாடினார். இவ்வாறு, அவர் சமய வேறுபாடுகளை கண்டு மக்களை ஒன்று சேர்க்கும் வழி முறைகளை உருவாக்கினார்.
ராமநாதபுரத்தைச் சேர்ந்த தீரன் திருமுருகன் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில், மீன்பிடி தடை காலத்தில் மீனவர்களுக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகையை…
பிரிட்டனின் University of Oxford மேற்கொண்ட உலகளாவிய நகர வெப்ப அபாய ஆய்வில், தமிழ்நாட்டின் மதுரை உலகின் தீவிர வெப்ப…
மதுரை மாவட்ட சுகாதாரத் துறையின் கீழ் செயல்படும் மாவட்ட நலவாழ்வுச் சங்கம் மூலம் அரசு சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள…
அரசு மருத்துவமனைகளில் வெளிநோயாளர் (OP) சேவையை பொதுமக்கள் எளிதாக பெறும் வகையில், தமிழ்நாடு அரசு ‘நலம்AI’ (NalamAI) என்ற வாட்ஸ்அப்…
மதுரை மாவட்டத்தில் உள்ள அழகர்மலையில் அமைந்துள்ள அழகர்கோவில் சுந்தரராஜ பெருமாள் திருக்கோவிலின் முன்புறத்தில் உள்ள 18ம் படி கருப்பசாமி சன்னதி,…
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட தோப்பூர் அருகே உள்ள கோ.புதுப்பட்டியில் 220 ஏக்கர் பரப்பளவில் ரூ.2,021.51 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு…