திருவிழாக்கள்

சித்திரைத் திருவிழா

மலையத்துவஜன் பாண்டிய மன்னனுக்கும், காஞ்சனாமாலை அரசிக்கும் குழந்தை இல்லாமல் மிகவும் கவலையாக இருந்தது. இதனால், அவர்கள் சிவபெருமானிடம் குழந்தை பெற வேண்டி ஆராதனை செய்தனர். சிவபெருமானின் அருளால், மீனாட்சி யாகசாலையில் அக்னியில் தோன்றி அவதரித்தார். இதனால், “அங்கயர் கன்னி” என்ற பெயரும் பெற்றார்.

மீனாட்சி அம்மனுக்கு பிறப்பிலேயே மூன்று மார்புகள் காணப்பட்டன. மணம் முடிப்பவரை அவை மறைந்து விடுவதாக கூறப்படுகிறது. கயிலை மலையில் சிவபெருமானை பார்த்தவுடன், அந்த மத்திய மார்பு மறைந்து விடுகிறது. இதனை உணர்ந்த மீனாட்சி, சிவபெருமானுக்கு காதல் கொள்கிறார், இதன் பின்னர் சிவபெருமானும் சுந்தரேஸ்வரராக அவளை மணம் முடிக்கிறார்.

மீனாட்சி அம்மனின் திருமேனி சிலை மரகதக் கல்லால் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இக்கோவிலின் அமைப்பைத் தேவந்திரன் செய்ததாகவும், குலசேகர பாண்டியர் கட்டியதாகவும் கூறப்படுகிறது. இக்கோவிலில் முதலில் மீனாட்சி அம்மனுக்கு பூஜைகள் நடத்தப்படுகின்றன, அதன் பின்னர் சுந்தரேஸ்வரருக்கு பூஜைகள் நடைபெறுகின்றன.

மதுரையை ஆண்ட திருமலை நாயக்கர் ஆட்சிக் காலத்தில், கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபோகம் சித்திரை மாதத்தில் நடைபெற்றது. கள்ளழகர், மதுரையில் சோழவந்தான் அருகில் உள்ள தேனூர் பகுதியில் முதலில் ஆற்றில் இறங்கினார். அங்கு தவளை முனிவருக்கு சாபம் விமோசனம் வழங்கினார் என்பதுதான் வரலாற்றின் பகுதி.

பாண்டியர் ஆட்சிக் காலத்தில், மீனாட்சி கல்யாணமும், பட்டாபிஷேகமும் வெவ்வேறு மாதங்களில் நடந்ததாக கூறப்படுகிறது. மீனாட்சி திருக்கல்யாணம் தைப்பூசத்தில், பட்டாபிஷேகம் மற்றும் தேரோட்டம் மாசி மாதத்திலும் நடைபெற்றது.

சைவ சமயத்தினர், மீனாட்சி திருக்கல்யாணத்தை கொண்டாடினார்கள், அதேபோன்று வைணவ சமயத்தினரும் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபோகத்தை கொண்டாடினார்கள்.

திருமலை நாயக்கர், வைணவ சமயத்தை பின்பற்றினாலும், மீனாட்சி அம்மனின் மீது மிகுந்த பக்தி கொண்டவர். அவர் மதுரைக்கு பல திருப்பணிகளைச் செய்து கொடுத்தார், ஒரு பெரிய தேரை கொடுத்தார். இந்த தேரை இழுக்க மக்கள் சிரமப்பட்டனர், இதனால் அடுத்த ஊர்களில் இருந்து மக்கள் வரவேற்கப்பட்டனர்.

திருமலை நாயக்கர், மீனாட்சி திருக்கல்யாணம், பட்டாபிஷேகம், தேரோட்டம் மற்றும் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபோகத்தை ஒன்றிணைத்து சித்திரை திருவிழாவை மிகுந்த பெருமையுடன் கொண்டாடினார். இவ்வாறு, அவர் சமய வேறுபாடுகளை கண்டு மக்களை ஒன்று சேர்க்கும் வழி முறைகளை உருவாக்கினார்.

Thoonganagaram Admin

Recent Posts

அஜித் குமாரின் தாயார் மோகினி மணி காலமானார்

தமிழ் திரைப்பட உலகின் முன்னணி நடிகரான Ajith Kumar அவர்களின் தாயார் Mohini Mani (85) வயது முதிர்வு காரணமான…

4 மணி நேரங்கள் ago

10 ஆண்டுகளாக கோரிக்கை இன்னும் தீர்வின்றி கண்மாய்கள்

மதுரை மாநகரில் கலெக்டர் இல்லம் அருகே அமைந்துள்ள பெரிய புளியங்குளம் மற்றும் ஆத்திகுளம் கண்மாய்கள் கழிவுநீர் கலப்பு, குப்பைக் கொட்டுதல்…

5 மணி நேரங்கள் ago

டெல்லியில் மதுரை மெட்ரோ குறித்து முக்கிய ஆலோசனை

தமிழகத்தின் வளர்ச்சிக்குத் தேவையான முக்கிய உட்கட்டமைப்பு மற்றும் மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு மத்திய நிதி ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று…

2 நாட்கள் ago

மீனாட்சி கோயிலில் கல்தூண் பகுதி இடிந்து பரபரப்பு

மதுரை நகரில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயில் வளாகத்தில் உள்ள முக்குறுணி விநாயகர் சன்னதியிலிருந்து சுவாமி…

3 நாட்கள் ago

தவெகவில் இணைந்தார் டாக்டர் சரவணன்

சென்னையில் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், அதிமுக மாநில மருத்துவ அணி இணைச் செயலாளரும் மதுரையின் முக்கிய அரசியல்…

4 நாட்கள் ago

மதுரையில் கரப்பான்பூச்சி பேரணி பரபரப்பு

மதுரையில் வேலையில்லா இளைஞர்கள் பேரணி பரபரப்பு மதுரையில் ‘கரப்பான்பூச்சி ஜனதா கட்சி’ என்ற சமூக வலைதள இயக்கத்தை ஆதரித்து படித்த…

5 நாட்கள் ago