மதுரை அருகேயுள்ள எலியார்பத்தி, புதூர் மற்றும் பாண்டியபுரம் சுங்கச்சாவடிகளில், சாலை பராமரிப்பு சரியாக செய்யப்படவில்லை என்ற காரணத்தால், சுங்கக் கட்டணம் வசூலிக்க முடியாது என மதுரை உயர்நீதிமன்ற கிளை இடைக்கால தடை விதித்துள்ளது.
🛣️ பாதுகாப்பற்ற சாலைகள் – முறையற்ற வசூல்!
2011 ஆம் ஆண்டு முதல் இந்த சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்கப்ட்டு வருகிறதாம். ஆனால், கடந்த பல ஆண்டுகளாக சாலைகளில் எந்தவிதமான பராமரிப்பும் நடைபெறவில்லையென்றும், நிலுவையிலுள்ள குழி மற்றும் சீர்கேடுகளால் பயணிகள் அவதிப்படுகிறார்களென்றும் வழக்கு தொடரப்பட்டது.
⚖️ நீதிமன்ற உத்தரவு
மனுவை பரிசீலித்த மதுரை உயர்நீதிமன்ற கிளை,
- மதுரை – தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் நடைபெற்று வரும் பணிகள் குறித்த முழுமையான அறிக்கையை அதிகாரிகள் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டது.
- அதுவரை, மேற்கண்ட சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்க கூடாது என இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.
🛑 பொதுமக்கள் மகிழ்ச்சி
இந்த தீர்ப்பை சாலை பயணிகள் மற்றும் பொதுமக்கள் வரவேற்று வருகிறார்கள். பராமரிப்பு இல்லாத சாலைகளுக்காக கட்டணம் வசூலிக்கப்படுவது என்பது அநீதி எனக் கண்டித்தனர்.
