ஜூலை 14 குடமுழுக்கு விழா யாகசாலை பூஜைகள் தொடக்கம், முன்னேற்பாடுகள் தீவிரம் – மூலஸ்தான வழிபாடு தற்காலிகமாக நிறுத்தம்

thiruparankundram.jpg

மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஜூலை 14ம் தேதி நடைபெற உள்ள குடமுழுக்கு விழாவையொட்டி, யாகசாலை பூஜைகள் இன்று (ஜூலை 10) மாலை 5 மணிக்கு ஆரம்பமாகின்றன. இப்பூஜைகள் ஜூலை 13ம் தேதி இரவு 9 மணி வரை, தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் நடைபெறவுள்ளது.

யாகசாலை பூஜைகள் நடைபெறும் காலத்தில், அதாவது ஜூலை 10 மாலை முதல் ஜூலை 13 வரை, கோயிலின் குன்றத்தில் அமைந்துள்ள தற்காலிக மூலஸ்தானத்திற்கு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

விழா ஏற்பாடுகள் சிறப்பாக நடைபெற கோயில் நிர்வாகம் பக்தர்களிடம் முழுமையான ஒத்துழைப்பை கேட்டுக்கொண்டுள்ளது.