மதுரையில் வேளாண் வணிகத்தில் 4 ஆண்டுகளில் ரூ.568 கோடிக்கு உற்பத்தி – 2.34 கோடி நுகர்வோர் பயன் பெற்ற தகவல் வெளியீடு
மதுரை மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில், வேளாண் வணிகத்துறை வாயிலாக விவசாயிகள் உற்பத்தி செய்த ரூ.568.48 கோடி மதிப்பிலான காய், கனிகள் 2.34 கோடி பொதுமக்களுக்கு நேரடியாக விற்பனை செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட வேளாண் வணிகத்துறை தெரிவித்துள்ளது.
உழவர் சந்தைகள் மூலம் நேரடி விற்பனை
மொத்தமாக 1.36 லட்சம் மெட்ரிக் டன் காய்கறி, பழங்கள் 5.16 லட்சம் விவசாயிகளால் உழவர் சந்தை வாயிலாக விற்பனை செய்யப்பட்டு, நுகர்வோர்களுக்கு நேரடி நலன் வழங்கப்பட்டது.
அமைக்கப்பட்ட உலர் களங்கள் மற்றும் தரம் பிரிப்பு கூடங்கள்
- கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட 5 கிராமங்களில் ரூ.52.5 கோடியில் உலர் களங்கள் நிறுவப்பட்டுள்ளன.
- மேலும் 13 கிராமங்களில் ரூ.442 கோடி மதிப்பில் தரம் பிரிப்பு கூடங்கள் உலர் வசதியுடன் கட்டப்பட்டுள்ளன.
சிறுதானிய பதப்படுத்தும் மையங்கள்
- சிறுதானிய இயக்கத்தின் கீழ் 2 முக்கிய சிறுதானிய பதப்படுத்தும் மையங்களுக்கு ரூ.23.5 லட்சம் மானியம் வழங்கப்பட்டுள்ளது.
தொழில் முனைவோர் மேம்பாடு
- நீர்ப்பாசன வேளாண்மை நவீன மயமாக்கல் திட்டத்தின் கீழ், 21 தொழில் முனைவோருக்கு ரூ.87.5 லட்சம் மானியம் வழங்கப்பட்டுள்ளது.
உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு உதவி
- தொழில் விரிவாக்கத்துக்காக மூன்று உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு ரூ.1.5 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது.
அக்மார்க் தரச்சான்று
- 13,421 குவிண்டால் உணவுப் பொருட்கள் தரம் பரிசோதிக்கப்பட்டு, தரமான பொருட்களுக்கு அக்மார்க் சான்று வழங்கப்பட்டுள்ளது. இதில் அதிகளவில்:
- அரிசி – 9,22,528 குவிண்டால்
- பருப்பு மாவு – 2,46,545 குவிண்டால்
- தேன், நெய், நல்லெண்ணெய், சீயக்காய் தூள் உள்ளிட்ட பல உணவுப் பொருட்களும் பரிசோதிக்கப்பட்டுள்ளன.
பொருளீட்டுக்கடன் மற்றும் மின் வேளாண் சந்தை வருவாய்
- 510 விவசாயிகளுக்கு ரூ.10.38 கோடி,
28 வியாபாரிகளுக்கு ரூ.65.58 கோடி பொருளீட்டுக் கடன் வழங்கப்பட்டுள்ளது. - மின்னணு தேசிய வேளாண் சந்தை (e-NAM) வாயிலாக 13,193 மெ.டன் விளைபொருட்கள் ரூ.22.75 கோடிக்கு விற்பனையாகி, 5,579 விவசாயிகள் அதிக லாபம் பெற்றுள்ளனர்.