alagar_kovil_bus.jpg

அழகர்கோயிலில் இருந்து சோலைமலைக்கு புதிய பேருந்து சேவை பக்தர்களுக்கு புதிய வசதி

மதுரை அழகர்கோயிலில் இருந்து சோலைமலை முருகன் கோயிலும், ராக்காயி அம்மன் கோயிலும் செல்ல பக்தர்களின் வசதிக்காக புதிய பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதற்காக ரூ.1 கோடியே 20 லட்சம் மதிப்பில் நான்கு புதிய பேருந்துகள் கோயில் நிர்வாகத்தின் மூலம் வாங்கப்பட்டுள்ளன.

இந்தப் பேருந்துகளை மதுரை மாவட்டத்தில் நேற்று அமைச்சர் சேகர் பாபு மற்றும் அமைச்சர் பி.மூர்த்தி தொடங்கி வைத்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் சேகர் பாபு கூறியதாவது:
“தமிழ்நாடு சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்ட திட்டத்தின் கீழ், அழகர்கோயில் பக்தர்களுக்காக இந்த நான்கு பேருந்துகள் செயல்பாட்டுக்கு வந்துள்ளன. அடிவாரத்தில் இருந்து மலைக்கு செல்ல பயணிக்க ரூ.10 மட்டுமே வசூலிக்கப்படுகிறது.”

மேலும், வரும் சித்திரை திருவிழாவை முன்னிட்டு அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்த முறையில் பணியாற்றி வருகின்றன. கடந்த வருடங்களில் நிகழ்ந்த சிறிய சிக்கல்களை தவிர்க்கும் வகையில், இந்த ஆண்டு விழா சிறப்பாக நடைபெறும் வகையில் ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. காவல்துறை, வருவாய்த் துறை, மாநகராட்சி, அறநிலையத்துறை மற்றும் சுகாதாரத் துறைகள் இணைந்து கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

இந்த புதிய பேருந்து சேவை, பக்தர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.