விடுபட்ட மகளிருக்கு விரைவில் ரூ.1000 உரிமைத்தொகை – அமைச்சர் கூறிய புதிய தகவல்!

₹1000 Women's Aid

மதுரை மாவட்டம் மேலூர் நகராட்சிக்கு உட்பட்ட கருத்தப்புளியம்பட்டி பகுதியில், தமிழ்நாடு இளைஞர்நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை சார்பில் புதிய சிறு விளையாட்டு அரங்கம் அமைக்கும் பணிகள் இன்று பூமி பூஜையுடன் துவங்கின.

இந்த நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தமிழ்நாட்டில் தகுதி பெற்றுள்ள, ஆனால் விடுபட்ட அனைத்து மகளிருக்கும் ரூ.1000 கலைஞர் உரிமைத்தொகை விரைவில் வழங்கப்படும் என உறுதி அளித்தார்.

மேலும், மேலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் விளையாட்டு வீரர்களுக்காக சிறப்பு அரங்கம் அமைக்கப்படுவதால், இளைஞர்களின் திறமை வளர்ச்சிக்கு இது உறுதுணையாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா, நகராட்சி உறுப்பினர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.