மதுரை மாட்டுத்தாவணி பஸ்ஸ்டாண்டிற்கு ரூ.16.50 கோடி – மறு வடிவமைப்பு பணிகள் விரைவில் தொடக்கம்!

mgr_bustand.jpg

மதுரை மாட்டுத்தாவணி பஸ்ஸ்டாண்டு ரூ.16.50 கோடியில் மறு வடிவமைப்பு – நிர்வாக அனுமதி வழங்கியது அரசு!

மதுரை மாட்டுத்தாவணி எம்ஜிஆர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம், தமிழ்நாட்டின் மிக முக்கியமான போக்குவரத்து மையமாக செயல்படுகிறது. தினசரி ஆயிரக்கணக்கான பயணிகள் பயன்படுத்தும் இந்த பேருந்து நிலையத்தில் வசதிகளை மேம்படுத்த தமிழ்நாடு அரசு ரூ.16.50 கோடி நிதி ஒதுக்கியதுடன் நிர்வாக அனுமதியும் வழங்கியுள்ளது.

🔹 முக்கிய அம்சங்கள்:

  • 8 பிளாட்பாரங்கள் கொண்ட மாட்டுத்தாவணி பஸ்ஸ்டாண்டின் மேல் கூரைகள் மற்றும் தரைப்பகுதி முழுமையாக சீரமைக்கப்படும்.
  • எந்த கட்டிடங்களையும் இடிக்காமல், புதுமையான வடிவமைப்புடன் அழகு மற்றும் பயண வசதிகள் அதிகரிக்கப்பட உள்ளன.
  • பெருந்து நிறுத்தும் பகுதிகள் (பஸ்பே), நுழைவுவாயில் வளைவுகள், பயணிகளுக்கான இருக்கைகள் என அனைத்து அமைப்புகளும் மேம்படுத்தப்படும்.
  • தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது, சீரமைப்பு பணிகள் நடைபெறும் நேரத்தில் பொதுமக்கள் பாதிக்கப்படாத வகையில் ஏற்பாடு செய்யப்படும்.

மாநகராட்சி கமிஷனர் சித்ரா விஜயன் தலைமையிலான குழுவின் மேற்பார்வையில் இப்பணிகள் நடைபெறவுள்ளன. கடந்த 2023 டிசம்பரில் ₹1.8 கோடியில் சீரமைப்புகள் நடந்து முடிந்த நிலையில், தற்போது ஒரு பெரிய கட்டமைப்பு மேம்பாடு திட்டமாக இது செயல்படுகிறது.

விரைவில் டெண்டர் அறிவிப்பு வெளியானதும் பணிகள் தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.