மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கரிசல்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடத்திற்கான பூமி பூஜையை முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு இன்று தொடங்கி வைத்தார்.
பூமி பூஜை நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசினார்.
செல்லூர் ராஜு பேட்டி முக்கிய அம்சங்கள்:
- பொள்ளாச்சி வழக்கு குறித்து:
“அதிமுக ஆட்சி காலத்தில் நடந்த சம்பவங்களுக்கு அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முறையாக நடவடிக்கை எடுத்து சிபிஐ-க்கு உத்தரவிட்டார். சிபிஐ-க்கு உத்தரவிட்டு ‘யார் அந்த சார்’ என்பதை எங்கள் ஆட்சியில் கண்டுபிடித்து தண்டனை வழங்கியுள்ளோம். ஆனால் திமுக அரசு எந்த ஒரு சம்பவத்திற்கும் உத்தரவிடாது. திமுக தான் ‘யார் அந்த சார்’ என்பதை மறுக்கிறது.” - திமுக கூட்டணி நிலை பற்றி:
“திமுக கூட்டணி வலுவாக இல்லை என்று யார் சொல்கிறார்கள்? நாங்கள் சொல்லவில்லை. ஏன் வலுவாக உள்ளது என்று சொல்கிறார்கள்? முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சருக்கு செல்வாக்கு உள்ளது. கூட்டணி STRONG ஆக உள்ளது என்பதை ஏன் சொல்லவேண்டும்? அவங்களுக்கு பயம் இருப்பதால் தான் அப்படி சொல்கிறார்கள். மக்களே எஜமானர்கள்.” - அதிமுக-பாஜக கூட்டணி பற்றிய கருத்து:
“அதிமுக தலைமையில் தான் ஆட்சி அமையும் என்று அமித்ஷா, நயினார் நாகேந்திரன் கூறியுள்ளனர்.” - தவெக தலைவர் விஜய் அதிமுக கூட்டணியில் சேராமை குறித்து:
“மக்களோடு கூட்டணி தான் நாங்கள் வைத்துள்ளோம். தேர்தல் நெருங்கும் போது தான் இதைத் தெரிவிப்போம்.”