மதுரை அழகர் கோயிலில் வைகாசி வசந்தோத்சவம் – ஜூன் 2 முதல் 10 நாள் ஆனந்த தரிசனம்!

kallalagar.jpg

பழமை வாய்ந்த கள்ளழகர் கோயிலில், ஆண்டுதோறும் நடைபெறும் வைகாசி வசந்த உற்சவ விழா, இந்த ஆண்டு ஜூன் 2ஆம் தேதி முதல் ஜூன் 11ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

10 நாட்கள் நடைபெறும் இந்த விசேஷத்தில், சுந்தரராஜ பெருமாள் தம் தேவியர்களுடன் புறப்பாடாகி, கோயிலில் அமைந்துள்ள வசந்த மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு தரிசனம் அளிக்கிறார்.

விழாவின் சிறப்பம்சங்கள்:

  • ஒவ்வொரு நாளும் பக்தர்கள் பெருமளவில் கலந்து கொண்டு, பெருமாளின் அழகிய அலங்காரம், சுவாமி சேவைகள், மற்றும் திருவிழா புறப்பாடுகள் ஆகியவற்றை பார்த்து பக்தி பூர்வமாக வழிபட வாய்ப்பு பெறுகின்றனர்.
  • விழா நாட்களில் கோயில் வளாகம் பூ அலங்காரங்களால் அலங்கரிக்கபட்டு, மங்கல இசைகள், வேத பாராயணங்கள், மற்றும் சமய நிகழ்வுகள் நடைபெறுகின்றன.

ஏற்பாடுகள்:

விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் அழகர் கோயில் நிர்வாகமும், அறங்காவலர் குழுவும் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன. பக்தர்கள் பாதுகாப்பாகவும், அமைதியாகவும் திருவிழாவில் கலந்துகொள்ளும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.