மதுரை மாவட்டம் அழகர்கோவிலில் நடைபெற்று வரும் அருள்மிகு சுந்தரராஜப் பெருமாள் ஆடித் திருவிழாவின் 9-ஆம் நாள் நிகழ்ச்சிகள் இன்று (29.07.2026) ஆடி பௌர்ணமியை முன்னிட்டு சிறப்பாக நடைபெறுகின்றன. இன்று காலை திருத்தேர் எழுந்தருளல் மற்றும் காலை 7.05 மணி முதல் 7.25 மணி வரை திருத்தேர் வடம் பிடித்தல் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருத்தேரை இழுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து இன்று மாலை ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே திறக்கப்படும் அருள்மிகு பதினெட்டாம்படி கருப்பசாமி சன்னதி கதவு திறக்கப்பட்டு, படி பூஜை, தீபாராதனை மற்றும் சந்தனம் சாத்துதல் உள்ளிட்ட சிறப்பு வழிபாடுகள் நடைபெற உள்ளன. இரவில் அருள்மிகு சுந்தரராஜப் பெருமாள் புஷ்ப பல்லக்கில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். ஆடி பௌர்ணமியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் கோவிலில் குவிந்துள்ளதால் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
அழகர்கோவில், சுந்தரராஜப் பெருமாள், பதினெட்டாம்படி கருப்பசாமி, இந்து சமய அறநிலையத் துறை, மதுரை
திருத்தேர் இன்று நடைபெற்றது, காலை 7.05–7.25 மணி வடம் பிடித்தல், மாலை சன்னதி கதவு திறப்பு, இரவில் புஷ்ப பல்லக்கு புறப்பாடு
ஆடி பௌர்ணமி சிறப்பு வழிபாடுகள், படி பூஜை, தீபாராதனை, சந்தனம் சாத்துதல், பக்தர்கள் திரளான பங்கேற்பு
ஜூலை 30-ஆம் தேதி தீர்த்தவாரி மற்றும் சப்தவர்ணம், ஜூலை 31-ஆம் தேதி உற்சவ சாந்தி, ஆகஸ்ட் 12-ஆம் தேதி ஆடி அமாவாசை கருட வாகன புறப்பாடு
ஆடி பௌர்ணமி சிறப்பு நிகழ்வுகளில் பங்கேற்கும் பக்தர்கள் கோவில் நிர்வாகம் மற்றும் காவல்துறையினர் வழங்கும் வழிகாட்டுதல்களை பின்பற்றி ஒழுங்குடன் தரிசனம் செய்யுமாறு அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
மதுரை மாவட்டம் அழகர்கோவிலில் நடைபெற்று வரும் ஆடித் திருவிழா பக்தர்கள் திரளான பங்கேற்புடன் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இன்று (28.07.2026)…
மதுரை, கோவை மெட்ரோ திட்டம் மீண்டும் நிராகரிப்பு சென்னை: மதுரை மற்றும் கோவையில் மெட்ரோ ரயில் திட்டங்களை செயல்படுத்தும் அளவுக்கு…
தமிழகத்தில் சுற்றுலாப் பயணிகள் வருகை மற்றும் அதிகம் கவரும் சுற்றுலாத் தலங்களைக் கொண்ட மாவட்டங்களின் பட்டியலில் மதுரை 2-ஆம் இடத்தைப்…
2010-ஆம் ஆண்டு தற்போதைய ஒருங்கிணைந்த முனையக் கட்டிடம் திறக்கப்பட்ட பிறகு, முதன்முறையாக மதுரை பன்னாட்டு விமான நிலையத்தில் பெரிய அளவிலான…
தமிழக அரசு பள்ளி மாணவர்களின் சீருடையில் மாற்றம் மேற்கொள்வது குறித்து முதலமைச்சர் விஜய் விரைவில் அறிவிப்பு வெளியிடுவார் என பள்ளிக்…
மதுரை மாவட்டத்தில் உள்ள அருள்மிகு ஶ்ரீ கள்ளழகர் சுந்தர்ராஜ பெருமாள் திருக்கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் ஆடித் திருவிழா, இன்று (ஜூலை…