தமிழக அரசின் வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை சார்பில், மதுரை மாவட்டத்தில் 26 இடங்களில் “உழவரைத் தேடி” திட்ட முகாம் நாளை (மே 29, வியாழக்கிழமை) நடைபெற உள்ளது. இதில் கால்நடை பராமரிப்பு துறை, கூட்டுறவு துறை அலுவலர்கள், வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் ஆகியோர் உழவர்களை நேரடியாக அவர்கள் கிராமங்களில் சந்தித்து, தேவையான ஆலோசனைகள் மற்றும் பயிற்சி தொழில்நுட்பங்களை வழங்குவர்.
மதுரை மாவட்டத்தில் 13 இடங்களில் வேளாண் உதவி இயக்குநர்கள் மற்றும் 13 இடங்களில் தோட்டக்கலை உதவி இயக்குநர்கள் தலைமையில் முகாம்கள் நடைபெற உள்ளன. விவரமாக, மதுரை கிழக்கு, மேற்கு, திருப்பரங்குன்றம், மேலூர், கொட்டாம்பட்டி, வாடிப்பட்டி, அலங்காநல்லூர், திருமங்கலம், கள்ளிக்குடி, தே.கல்லுப்பட்டி, உசிலம்பட்டி, செல்லம்பட்டி, சேடப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் முகாம்கள் நடைபெறும்.
தோட்டக்கலை உதவி இயக்குநர்கள் தலைமையில் கள்ளந்திரி, ஆலாத்தூர், சூரக்குளம், சித்தாலங்குடி, அச்சங்குளம், மோதகம், நக்கலப்பட்டி, பாலையூர், அம்பலக்காரன்பட்டி, மூடுவார்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் முகாம்கள் நடைபெறும்.