சமீபத்திய

மே 29 அன்று மதுரையில் உழவருக்கான வேளாண்மை முகாம்கள்

தமிழக அரசின் வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை சார்பில், மதுரை மாவட்டத்தில் 26 இடங்களில் “உழவரைத் தேடி” திட்ட முகாம் நாளை (மே 29, வியாழக்கிழமை) நடைபெற உள்ளது. இதில் கால்நடை பராமரிப்பு துறை, கூட்டுறவு துறை அலுவலர்கள், வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் ஆகியோர் உழவர்களை நேரடியாக அவர்கள் கிராமங்களில் சந்தித்து, தேவையான ஆலோசனைகள் மற்றும் பயிற்சி தொழில்நுட்பங்களை வழங்குவர்.

மதுரை மாவட்டத்தில் 13 இடங்களில் வேளாண் உதவி இயக்குநர்கள் மற்றும் 13 இடங்களில் தோட்டக்கலை உதவி இயக்குநர்கள் தலைமையில் முகாம்கள் நடைபெற உள்ளன. விவரமாக, மதுரை கிழக்கு, மேற்கு, திருப்பரங்குன்றம், மேலூர், கொட்டாம்பட்டி, வாடிப்பட்டி, அலங்காநல்லூர், திருமங்கலம், கள்ளிக்குடி, தே.கல்லுப்பட்டி, உசிலம்பட்டி, செல்லம்பட்டி, சேடப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் முகாம்கள் நடைபெறும்.

தோட்டக்கலை உதவி இயக்குநர்கள் தலைமையில் கள்ளந்திரி, ஆலாத்தூர், சூரக்குளம், சித்தாலங்குடி, அச்சங்குளம், மோதகம், நக்கலப்பட்டி, பாலையூர், அம்பலக்காரன்பட்டி, மூடுவார்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் முகாம்கள் நடைபெறும்.

Thoonganagaram Admin

Recent Posts

கொடியேற்றத்துடன் தொடங்கிய கள்ளழகர் ஆடித் திருவிழா

மதுரை மாவட்டத்தில் உள்ள அருள்மிகு ஶ்ரீ கள்ளழகர் சுந்தர்ராஜ பெருமாள் திருக்கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் ஆடித் திருவிழா, இன்று (ஜூலை…

21 மணி நேரங்கள் ago

மதுரையில் 2,000 ஆண்டு தாழிப்பானை கண்டுபிடிப்பு

மதுரை மாவட்டம் பேரையூர் வட்டத்திற்குட்பட்ட பாப்பி நாயக்கன்பட்டி–சங்கரலிங்கபுரம் பகுதியில் உள்ள சல்லுப்பன் கரடு அடிவாரத்தில் சுமார் 2,000 ஆண்டுகள் பழமையானதாகக்…

2 நாட்கள் ago

மதுரையில் ஜூலை 24 விவசாயிகள் குறைதீர் கூட்டம்

மதுரை மாவட்ட விவசாயிகளின் கோரிக்கைகள் மற்றும் விவசாயம் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில், மாவட்ட நிர்வாகம் நடத்தும் மாதாந்திர…

4 நாட்கள் ago

மதுரையில் நாளை திட்டமிட்ட மின்தடை

மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மின் பாதை பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளும் நோக்கில் நாளை (ஜூலை 18) திட்டமிட்ட மின்தடை…

5 நாட்கள் ago

திண்டுக்கல் வழித்தடம் தவிர்த்து ரயில்கள் இயக்கம்

தமிழகத்தின் சேலம் மற்றும் மதுரை ரயில்வே கோட்டங்களுக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் தண்டவாள பராமரிப்பு மற்றும் பொறியியல் பணிகள் மேற்கொள்ளப்பட…

6 நாட்கள் ago

அழகர் கோவிலில் ஆடித் திருவிழா ஜூலை 21ல் தொடக்கம்

மதுரை மாவட்டத்தில் உள்ள அருள்மிகு ஶ்ரீ கள்ளழகர் சுந்தர்ராஜ பெருமாள் திருக்கோவிலில் நடைபெறும் ஆண்டு தோறும் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஆடித்…

7 நாட்கள் ago