தமிழக அரசின் வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை சார்பில், மதுரை மாவட்டத்தில் 26 இடங்களில் “உழவரைத் தேடி” திட்ட முகாம் நாளை (மே 29, வியாழக்கிழமை) நடைபெற உள்ளது. இதில் கால்நடை பராமரிப்பு துறை, கூட்டுறவு துறை அலுவலர்கள், வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் ஆகியோர் உழவர்களை நேரடியாக அவர்கள் கிராமங்களில் சந்தித்து, தேவையான ஆலோசனைகள் மற்றும் பயிற்சி தொழில்நுட்பங்களை வழங்குவர்.
மதுரை மாவட்டத்தில் 13 இடங்களில் வேளாண் உதவி இயக்குநர்கள் மற்றும் 13 இடங்களில் தோட்டக்கலை உதவி இயக்குநர்கள் தலைமையில் முகாம்கள் நடைபெற உள்ளன. விவரமாக, மதுரை கிழக்கு, மேற்கு, திருப்பரங்குன்றம், மேலூர், கொட்டாம்பட்டி, வாடிப்பட்டி, அலங்காநல்லூர், திருமங்கலம், கள்ளிக்குடி, தே.கல்லுப்பட்டி, உசிலம்பட்டி, செல்லம்பட்டி, சேடப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் முகாம்கள் நடைபெறும்.
தோட்டக்கலை உதவி இயக்குநர்கள் தலைமையில் கள்ளந்திரி, ஆலாத்தூர், சூரக்குளம், சித்தாலங்குடி, அச்சங்குளம், மோதகம், நக்கலப்பட்டி, பாலையூர், அம்பலக்காரன்பட்டி, மூடுவார்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் முகாம்கள் நடைபெறும்.
உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில் மகா கும்பாபிஷேக விழாவுக்கான பூர்வாங்க பூஜைகள் நாளை தொடங்கி செப்டம்பர் 11…
மதுரை திருப்பாலை பகுதியில் உள்ள இஸ்கான் ஸ்ரீ ஸ்ரீ கிருஷ்ண பலராமர் திருக்கோவிலில் இன்று, செப்டம்பர் 4, 2026 அன்று,…
மதுரை, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள அரசு கள்ளர் பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், காப்பாளர்கள் மற்றும்…
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில், மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர், கோவில் நிர்வாகம்செப்டம்பர் 11 முதல் 16 வரை மூலவர் தரிசனம்…
ஜல்லிக்கட்டு குறித்து தவெக சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா சட்டப்பேரவையில் தெரிவித்த கருத்துகளைக் கண்டித்தும், தவெக அரசைக் கண்டித்தும் செப்டம்பர் 3-ஆம்…
1995 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சோலமலை பொறியியல் கல்லூரி, தரமான தொழில்நுட்ப மற்றும் மேலாண்மைக் கல்வியை வழங்குவதுடன், மாணவர்களின் திறன்…