தமிழக அரசின் வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை சார்பில், மதுரை மாவட்டத்தில் 26 இடங்களில் “உழவரைத் தேடி” திட்ட முகாம் நாளை (மே 29, வியாழக்கிழமை) நடைபெற உள்ளது. இதில் கால்நடை பராமரிப்பு துறை, கூட்டுறவு துறை அலுவலர்கள், வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் ஆகியோர் உழவர்களை நேரடியாக அவர்கள் கிராமங்களில் சந்தித்து, தேவையான ஆலோசனைகள் மற்றும் பயிற்சி தொழில்நுட்பங்களை வழங்குவர்.
மதுரை மாவட்டத்தில் 13 இடங்களில் வேளாண் உதவி இயக்குநர்கள் மற்றும் 13 இடங்களில் தோட்டக்கலை உதவி இயக்குநர்கள் தலைமையில் முகாம்கள் நடைபெற உள்ளன. விவரமாக, மதுரை கிழக்கு, மேற்கு, திருப்பரங்குன்றம், மேலூர், கொட்டாம்பட்டி, வாடிப்பட்டி, அலங்காநல்லூர், திருமங்கலம், கள்ளிக்குடி, தே.கல்லுப்பட்டி, உசிலம்பட்டி, செல்லம்பட்டி, சேடப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் முகாம்கள் நடைபெறும்.
தோட்டக்கலை உதவி இயக்குநர்கள் தலைமையில் கள்ளந்திரி, ஆலாத்தூர், சூரக்குளம், சித்தாலங்குடி, அச்சங்குளம், மோதகம், நக்கலப்பட்டி, பாலையூர், அம்பலக்காரன்பட்டி, மூடுவார்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் முகாம்கள் நடைபெறும்.
மதுரை மாவட்டத்தில் உள்ள திருப்பரங்குன்றம், நாகமலை புதுக்கோட்டை, வாடிப்பட்டி, ஒத்தக்கடை மற்றும் திருமங்கலம் உள்ளிட்ட 5 சார் பதிவாளர் அலுவலகங்களில்…
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ள முல்லைப் பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நிலவும் கடுமையான வறட்சியால், தேனி, மதுரை,…
மதுரையில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 2026–27 கல்வியாண்டுக்கான டிப்ளமோ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தொடங்கப்பட்டுள்ளது. 1946-ஆம்…
மதுரை வில்லாபுரம் மலர் சந்தையின் பின்புறத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய (TNHB) குடியிருப்புகள் பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி…
மதுரை மாவட்டத்தில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகளை முன்னிட்டு நாளை (ஜூன் 3, 2026) பல்வேறு பகுதிகளில் திட்டமிட்ட மின்தடை…
கோடை விடுமுறை நிறைவடைந்து ஜூன் முதல் வாரத்தில் தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், சென்னை நோக்கி திரும்பும் பயணிகளின்…