கோரிப்பாளையம் சந்திப்பு பகுதியில் நடைபெற்று வரும் உயர் நிலைப் பாலத் திருத்தப் பணிகளையொட்டி, வாகனப் போக்குவரத்தில் தற்காலிக மாற்றம் செய்யப்படுவதாக மதுரை மாநகரக் காவல் ஆணையா் அலுவலகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியான செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
கபடி சிலை சுற்றுச்சாலையிலிருந்து கோரிப்பாளையம் நோக்கி வரும் வாகனங்கள், இதுவரை பாலம் ஸ்டேஷன் சாலையின் இடதுபுறம் செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், இடதுபுறத்தில் பாலப்பணிகள் நடைபெற உள்ளதால், ஆகஸ்ட் 14 (வியாழக்கிழமை) முதல் அந்த வழியாகச் செல்வோர் பாலம் ஸ்டேஷன் சாலையின் வலதுபுறம் செல்ல வேண்டும்.
இந்த மாற்றம் பணிகள் முடியும் வரை தற்காலிகமாக அமலில் இருக்கும். பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் இதற்குத் தேவையான ஒத்துழைப்பை வழங்குமாறு காவல் துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
மதுரை மாவட்டத்தில் உள்ள திருப்பரங்குன்றம், நாகமலை புதுக்கோட்டை, வாடிப்பட்டி, ஒத்தக்கடை மற்றும் திருமங்கலம் உள்ளிட்ட 5 சார் பதிவாளர் அலுவலகங்களில்…
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ள முல்லைப் பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நிலவும் கடுமையான வறட்சியால், தேனி, மதுரை,…
மதுரையில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 2026–27 கல்வியாண்டுக்கான டிப்ளமோ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தொடங்கப்பட்டுள்ளது. 1946-ஆம்…
மதுரை வில்லாபுரம் மலர் சந்தையின் பின்புறத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய (TNHB) குடியிருப்புகள் பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி…
மதுரை மாவட்டத்தில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகளை முன்னிட்டு நாளை (ஜூன் 3, 2026) பல்வேறு பகுதிகளில் திட்டமிட்ட மின்தடை…
கோடை விடுமுறை நிறைவடைந்து ஜூன் முதல் வாரத்தில் தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், சென்னை நோக்கி திரும்பும் பயணிகளின்…