கோரிப்பாளையம் சந்திப்பு பகுதியில் நடைபெற்று வரும் உயர் நிலைப் பாலத் திருத்தப் பணிகளையொட்டி, வாகனப் போக்குவரத்தில் தற்காலிக மாற்றம் செய்யப்படுவதாக மதுரை மாநகரக் காவல் ஆணையா் அலுவலகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியான செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
கபடி சிலை சுற்றுச்சாலையிலிருந்து கோரிப்பாளையம் நோக்கி வரும் வாகனங்கள், இதுவரை பாலம் ஸ்டேஷன் சாலையின் இடதுபுறம் செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், இடதுபுறத்தில் பாலப்பணிகள் நடைபெற உள்ளதால், ஆகஸ்ட் 14 (வியாழக்கிழமை) முதல் அந்த வழியாகச் செல்வோர் பாலம் ஸ்டேஷன் சாலையின் வலதுபுறம் செல்ல வேண்டும்.
இந்த மாற்றம் பணிகள் முடியும் வரை தற்காலிகமாக அமலில் இருக்கும். பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் இதற்குத் தேவையான ஒத்துழைப்பை வழங்குமாறு காவல் துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
மதுரை சித்திரை திருவிழாவின் மூன்றாம் நாள் நிகழ்வுகள் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 21, 2026) கோலாகலமாக நடைபெற்றன. காலை மற்றும் இரவு…
சித்திரை திருவிழாவின் இரண்டாம் நாளான ஏப்ரல் 20, 2026 திங்கட்கிழமை, காலை 7 மணியளவில் தங்கச்சப்பரத்தில் எழுந்தருளிய இறைவன் நான்கு…
மதுரை நகரில் ஆண்டுதோறும் நடைபெறும் சித்திரை திருவிழாவின் முதல் நாள் நிகழ்வுகள் நேற்று (ஏப்ரல் 19, 2026, ஞாயிற்றுக்கிழமை) வெற்றிகரமாக…
மதுரையில் ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்ற கட்டட திறப்பு விழாவை முன்னிட்டு, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் வருகையால் நாளை நகரில்…
நேரலை கண்காணிப்பு · 19–29 ஏப்ரல் 2026 📍 இணையதளம் மூலம் கண்காணிக்க இங்கே கிளிக் செய்யவும் Track Meenakshi…
நேரலை கண்காணிப்பு · 29 ஏப்ரல் – 6 மே 2026 📍 இணையதளம் மூலம் கண்காணிக்க இங்கே கிளிக்…