கோரிப்பாளையம் சந்திப்பு பகுதியில் நடைபெற்று வரும் உயர் நிலைப் பாலத் திருத்தப் பணிகளையொட்டி, வாகனப் போக்குவரத்தில் தற்காலிக மாற்றம் செய்யப்படுவதாக மதுரை மாநகரக் காவல் ஆணையா் அலுவலகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியான செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
கபடி சிலை சுற்றுச்சாலையிலிருந்து கோரிப்பாளையம் நோக்கி வரும் வாகனங்கள், இதுவரை பாலம் ஸ்டேஷன் சாலையின் இடதுபுறம் செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், இடதுபுறத்தில் பாலப்பணிகள் நடைபெற உள்ளதால், ஆகஸ்ட் 14 (வியாழக்கிழமை) முதல் அந்த வழியாகச் செல்வோர் பாலம் ஸ்டேஷன் சாலையின் வலதுபுறம் செல்ல வேண்டும்.
இந்த மாற்றம் பணிகள் முடியும் வரை தற்காலிகமாக அமலில் இருக்கும். பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் இதற்குத் தேவையான ஒத்துழைப்பை வழங்குமாறு காவல் துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில் மகா கும்பாபிஷேக விழாவுக்கான பூர்வாங்க பூஜைகள் நாளை தொடங்கி செப்டம்பர் 11…
மதுரை திருப்பாலை பகுதியில் உள்ள இஸ்கான் ஸ்ரீ ஸ்ரீ கிருஷ்ண பலராமர் திருக்கோவிலில் இன்று, செப்டம்பர் 4, 2026 அன்று,…
மதுரை, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள அரசு கள்ளர் பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், காப்பாளர்கள் மற்றும்…
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில், மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர், கோவில் நிர்வாகம்செப்டம்பர் 11 முதல் 16 வரை மூலவர் தரிசனம்…
ஜல்லிக்கட்டு குறித்து தவெக சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா சட்டப்பேரவையில் தெரிவித்த கருத்துகளைக் கண்டித்தும், தவெக அரசைக் கண்டித்தும் செப்டம்பர் 3-ஆம்…
1995 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சோலமலை பொறியியல் கல்லூரி, தரமான தொழில்நுட்ப மற்றும் மேலாண்மைக் கல்வியை வழங்குவதுடன், மாணவர்களின் திறன்…