சமீபத்திய

அவனியாபுரம்–பாலமேடு–அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு தேதிகள் அறிவிப்பு

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி வரும் ஜனவரி 17-ம் தேதி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார் என்று அமைச்சர் பி. மூர்த்தி தெரிவித்தார்.

மதுரை மாவட்டத்தில் உள்ள அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் முறையே ஜனவரி 15, 16, 17 தேதிகளில் நடைபெற உள்ளன. இதற்கான முகூர்த்தக்கால் நடும் விழா நேற்று நடைபெற்றது.

இந்த விழாவில் பங்கேற்ற அமைச்சர் பி. மூர்த்தி, செய்தியாளர்களிடம் கூறுகையில், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிக்கான முன்னேற்பாடுகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும், கடந்த ஆண்டைவிட இவ்வாண்டு போட்டிகள் மேலும் சிறப்பாக நடத்தப்படும் என்றும் தெரிவித்தார். அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை ஜனவரி 17-ம் தேதி முதல்வர் தொடங்கி வைப்பார் என்றார்.

பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியை ஜனவரி 16-ம் தேதி துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இந்த நிகழ்வுகளில் அமைச்சர்கள், முக்கிய பிரமுகர்கள், ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

வழக்கமாக சிறந்த மாடுபிடி வீரருக்கு கார் பரிசாக வழங்கப்பட்டு வந்த நிலையில், இந்த ஆண்டு பாமக மற்றும் விவசாயிகள் கோரிக்கையின் அடிப்படையில் டிராக்டர் பரிசாக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

போட்டிகளுக்கான அனைத்து ஏற்பாடுகளும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறும். எந்தவித பிரச்சினையுமின்றி போட்டிகள் நடைபெற தேவையான பாதுகாப்பு மற்றும் ஒழுங்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

முகூர்த்தக்கால் நடும் நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் பிரவீன்குமார் மற்றும் வெங்கடேசன் எம்எல்ஏ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Thoonganagaram Admin

Recent Posts

மதுரை மீனாட்சி கோவிலில் நாளை முதல் சிறப்பு பூஜைகள்!

உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில் மகா கும்பாபிஷேக விழாவுக்கான பூர்வாங்க பூஜைகள் நாளை தொடங்கி செப்டம்பர் 11…

3 மணி நேரங்கள் ago

இன்று மதுரையில் கிருஷ்ண ஜெயந்தி கோலாகலம்!

மதுரை திருப்பாலை பகுதியில் உள்ள இஸ்கான் ஸ்ரீ ஸ்ரீ கிருஷ்ண பலராமர் திருக்கோவிலில் இன்று, செப்டம்பர் 4, 2026 அன்று,…

1 நாள் ago

ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு தேதி வெளியானது

மதுரை, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள அரசு கள்ளர் பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், காப்பாளர்கள் மற்றும்…

3 நாட்கள் ago

கும்பாபிஷேக ஏற்பாடு செப்.11 முதல் மூலவர் தரிசனம் இல்லை!

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில், மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர், கோவில் நிர்வாகம்செப்டம்பர் 11 முதல் 16 வரை மூலவர் தரிசனம்…

4 நாட்கள் ago

செப்.3 காலை 9.30 மணிக்கு அலங்காநல்லூரில் ஆர்ப்பாட்டம்

ஜல்லிக்கட்டு குறித்து தவெக சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா சட்டப்பேரவையில் தெரிவித்த கருத்துகளைக் கண்டித்தும், தவெக அரசைக் கண்டித்தும் செப்டம்பர் 3-ஆம்…

5 நாட்கள் ago

சோலமலை பொறியியல் கல்லூரி (தன்னாட்சி), மதுரை

1995 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சோலமலை பொறியியல் கல்லூரி, தரமான தொழில்நுட்ப மற்றும் மேலாண்மைக் கல்வியை வழங்குவதுடன், மாணவர்களின் திறன்…

7 நாட்கள் ago