சமீபத்திய

“மனம் நிம்மதிக்கே வந்தோம்… சட்டவிரோத டிக்கெட்?” – உயர்நீதிமன்றம் அதிரடி!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் சுவாமி தரிசனத்திற்காக சட்டவிரோதமாக டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்ட வழக்கில், அதனை முற்றிலும் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதிகள்,

“பக்தர்கள் கோயிலுக்கு மன நிம்மதியைத் தேடி வருகிறார்கள். அவர்கள் தரிசனத்தில் தொந்தரவு ஏற்படக்கூடிய எந்த விதமான சட்டவிரோதமும் அனுமதிக்கப்பட முடியாது,”
எனக் குறிப்பிட்டனர்.

நீதிமன்றம் மேலும்,

  • அறநிலையத்துறையும் காவல்துறையும் இணைந்து செயல்பட்டு, இந்த விதமான சட்டவிரோதங்களை கட்டுப்படுத்த வேண்டும்.
  • டிக்கெட் விற்பனை செய்பவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
  • பக்தர்கள் அமைதியான முறையில் சாமி தரிசனம் செய்யும் நிலையை உறுதிப்படுத்த வேண்டும்,
    எனவும் தெரிவித்துள்ளது.

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் முருகன் கோயிலில், தரிசனத்திற்காக சட்டப்படி கட்டண வசதிகள் இல்லாமல், சிலர் அனுமதியின்றி பணம் வசூலித்து டிக்கெட்டுகள் வழங்குவதாக புகார் எழுந்த நிலையில், இந்த வழக்கு தொடரப்பட்டது.

Thoonganagaram Admin

Recent Posts

கொடியேற்றத்துடன் தொடங்கிய கள்ளழகர் ஆடித் திருவிழா

மதுரை மாவட்டத்தில் உள்ள அருள்மிகு ஶ்ரீ கள்ளழகர் சுந்தர்ராஜ பெருமாள் திருக்கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் ஆடித் திருவிழா, இன்று (ஜூலை…

18 மணி நேரங்கள் ago

மதுரையில் 2,000 ஆண்டு தாழிப்பானை கண்டுபிடிப்பு

மதுரை மாவட்டம் பேரையூர் வட்டத்திற்குட்பட்ட பாப்பி நாயக்கன்பட்டி–சங்கரலிங்கபுரம் பகுதியில் உள்ள சல்லுப்பன் கரடு அடிவாரத்தில் சுமார் 2,000 ஆண்டுகள் பழமையானதாகக்…

2 நாட்கள் ago

மதுரையில் ஜூலை 24 விவசாயிகள் குறைதீர் கூட்டம்

மதுரை மாவட்ட விவசாயிகளின் கோரிக்கைகள் மற்றும் விவசாயம் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில், மாவட்ட நிர்வாகம் நடத்தும் மாதாந்திர…

4 நாட்கள் ago

மதுரையில் நாளை திட்டமிட்ட மின்தடை

மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மின் பாதை பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளும் நோக்கில் நாளை (ஜூலை 18) திட்டமிட்ட மின்தடை…

5 நாட்கள் ago

திண்டுக்கல் வழித்தடம் தவிர்த்து ரயில்கள் இயக்கம்

தமிழகத்தின் சேலம் மற்றும் மதுரை ரயில்வே கோட்டங்களுக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் தண்டவாள பராமரிப்பு மற்றும் பொறியியல் பணிகள் மேற்கொள்ளப்பட…

6 நாட்கள் ago

அழகர் கோவிலில் ஆடித் திருவிழா ஜூலை 21ல் தொடக்கம்

மதுரை மாவட்டத்தில் உள்ள அருள்மிகு ஶ்ரீ கள்ளழகர் சுந்தர்ராஜ பெருமாள் திருக்கோவிலில் நடைபெறும் ஆண்டு தோறும் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஆடித்…

7 நாட்கள் ago