சமீபத்திய

மதுரை கோரிப்பாளையத்தில் தேவர் சிலைக்கு ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 118-ஆவது ஜெயந்தி மற்றும் 63-ஆவது குருபூஜை விழாவை முன்னிட்டு, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தேவருக்கு மரியாதை செலுத்தினார்.

மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் உருவச் சிலைக்கு வியாழக்கிழமை காலை முதல்வர் ஸ்டாலின் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். பின்னர், தேவரின் உருவப் படத்திற்கும் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இதையடுத்து, தெப்பக்குளம் பகுதியில் உள்ள மருதுபாண்டியர் சிலைகளுக்கும் முதல்வர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பசும்பொனில் நடைபெற்ற தேவர் ஜெயந்தி–குருபூஜை விழா, கடந்த 28ஆம் தேதி ஓதுவார் மங்கல இசை, கணபதி ஹோமம், சிவாசாரியர்களின் வேத மந்திரங்கள் முழங்க தொடங்கியது. விழா மூன்று நாட்களாக அரசு அளவில் நடைபெற்று வருகிறது.

முதல்வரைத் தொடர்ந்து, அமைச்சர்கள் பி. மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன், தங்கம் தென்னரசு, மக்களவை உறுப்பினர் கனிமொழி, சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.

பின்னர், முதல்வர் ஸ்டாலின் ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னுக்கு சாலை வழியாக புறப்பட்டுச் சென்றார். தமிழக முதல்வர் வருகையையொட்டி, போலீசார் கடுமையான பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Thoonganagaram Admin

Recent Posts

மதுரை மீனாட்சி கோவிலில் நாளை முதல் சிறப்பு பூஜைகள்!

உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில் மகா கும்பாபிஷேக விழாவுக்கான பூர்வாங்க பூஜைகள் நாளை தொடங்கி செப்டம்பர் 11…

3 மணி நேரங்கள் ago

இன்று மதுரையில் கிருஷ்ண ஜெயந்தி கோலாகலம்!

மதுரை திருப்பாலை பகுதியில் உள்ள இஸ்கான் ஸ்ரீ ஸ்ரீ கிருஷ்ண பலராமர் திருக்கோவிலில் இன்று, செப்டம்பர் 4, 2026 அன்று,…

1 நாள் ago

ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு தேதி வெளியானது

மதுரை, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள அரசு கள்ளர் பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், காப்பாளர்கள் மற்றும்…

3 நாட்கள் ago

கும்பாபிஷேக ஏற்பாடு செப்.11 முதல் மூலவர் தரிசனம் இல்லை!

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில், மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர், கோவில் நிர்வாகம்செப்டம்பர் 11 முதல் 16 வரை மூலவர் தரிசனம்…

4 நாட்கள் ago

செப்.3 காலை 9.30 மணிக்கு அலங்காநல்லூரில் ஆர்ப்பாட்டம்

ஜல்லிக்கட்டு குறித்து தவெக சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா சட்டப்பேரவையில் தெரிவித்த கருத்துகளைக் கண்டித்தும், தவெக அரசைக் கண்டித்தும் செப்டம்பர் 3-ஆம்…

5 நாட்கள் ago

சோலமலை பொறியியல் கல்லூரி (தன்னாட்சி), மதுரை

1995 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சோலமலை பொறியியல் கல்லூரி, தரமான தொழில்நுட்ப மற்றும் மேலாண்மைக் கல்வியை வழங்குவதுடன், மாணவர்களின் திறன்…

7 நாட்கள் ago