பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 118-ஆவது ஜெயந்தி மற்றும் 63-ஆவது குருபூஜை விழாவை முன்னிட்டு, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தேவருக்கு மரியாதை செலுத்தினார்.
மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் உருவச் சிலைக்கு வியாழக்கிழமை காலை முதல்வர் ஸ்டாலின் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். பின்னர், தேவரின் உருவப் படத்திற்கும் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இதையடுத்து, தெப்பக்குளம் பகுதியில் உள்ள மருதுபாண்டியர் சிலைகளுக்கும் முதல்வர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பசும்பொனில் நடைபெற்ற தேவர் ஜெயந்தி–குருபூஜை விழா, கடந்த 28ஆம் தேதி ஓதுவார் மங்கல இசை, கணபதி ஹோமம், சிவாசாரியர்களின் வேத மந்திரங்கள் முழங்க தொடங்கியது. விழா மூன்று நாட்களாக அரசு அளவில் நடைபெற்று வருகிறது.
முதல்வரைத் தொடர்ந்து, அமைச்சர்கள் பி. மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன், தங்கம் தென்னரசு, மக்களவை உறுப்பினர் கனிமொழி, சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.
பின்னர், முதல்வர் ஸ்டாலின் ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னுக்கு சாலை வழியாக புறப்பட்டுச் சென்றார். தமிழக முதல்வர் வருகையையொட்டி, போலீசார் கடுமையான பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
மதுரை மாவட்டத்தில் உள்ள அருள்மிகு ஶ்ரீ கள்ளழகர் சுந்தர்ராஜ பெருமாள் திருக்கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் ஆடித் திருவிழா, இன்று (ஜூலை…
மதுரை மாவட்டம் பேரையூர் வட்டத்திற்குட்பட்ட பாப்பி நாயக்கன்பட்டி–சங்கரலிங்கபுரம் பகுதியில் உள்ள சல்லுப்பன் கரடு அடிவாரத்தில் சுமார் 2,000 ஆண்டுகள் பழமையானதாகக்…
மதுரை மாவட்ட விவசாயிகளின் கோரிக்கைகள் மற்றும் விவசாயம் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில், மாவட்ட நிர்வாகம் நடத்தும் மாதாந்திர…
மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மின் பாதை பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளும் நோக்கில் நாளை (ஜூலை 18) திட்டமிட்ட மின்தடை…
தமிழகத்தின் சேலம் மற்றும் மதுரை ரயில்வே கோட்டங்களுக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் தண்டவாள பராமரிப்பு மற்றும் பொறியியல் பணிகள் மேற்கொள்ளப்பட…
மதுரை மாவட்டத்தில் உள்ள அருள்மிகு ஶ்ரீ கள்ளழகர் சுந்தர்ராஜ பெருமாள் திருக்கோவிலில் நடைபெறும் ஆண்டு தோறும் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஆடித்…