கந்தன் மலையாக போற்றப்படும் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில், இவ்வாண்டு கார்த்திகை தீபம் ஏற்ற நீதிமன்ற அனுமதி கிடைத்துள்ளது. அறநிலையத்துறை மறுத்திருந்த நிலையில், மனு தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து மதுரை உயர்நீதிமன்றம் நேரடி அனுமதி வழங்கியது.
மதுரை மாவட்டம் எழுமலையை சேர்ந்த ராம. ரவிக்குமார், மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். மனுவில் அவர் கூறியது:
“மலை உச்சியிலுள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றாமல், பிள்ளையார் கோயிலின் தீப மண்டபத்தில் ஏற்ற முடிவு செய்துள்ளனர்.
இந்த உத்தரவை ரத்து செய்து, மலை உச்சி தீபத்தூணில் திரும்ப தீபம் ஏற்ற அனுமதி வழங்க வேண்டும்.”
அறநிலையத் துறை பாதுகாப்பு காரணங்களால் அனுமதி மறுத்திருந்தது.
நீதிபதி ஜி. ஆர். சுவாமிநாதன் வழக்கை விசாரித்ததன் பின்னர்:
🗨️ “திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபத்தை ஏற்ற அனுமதி வழங்கப்படுகிறது.
காவல்துறை விரைவாகவும், முழுமையாகவும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.”
என்று உத்தரவிட்டார்.
மதுரை மாவட்டத்தில் உள்ள அருள்மிகு ஶ்ரீ கள்ளழகர் சுந்தர்ராஜ பெருமாள் திருக்கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் ஆடித் திருவிழா, இன்று (ஜூலை…
மதுரை மாவட்டம் பேரையூர் வட்டத்திற்குட்பட்ட பாப்பி நாயக்கன்பட்டி–சங்கரலிங்கபுரம் பகுதியில் உள்ள சல்லுப்பன் கரடு அடிவாரத்தில் சுமார் 2,000 ஆண்டுகள் பழமையானதாகக்…
மதுரை மாவட்ட விவசாயிகளின் கோரிக்கைகள் மற்றும் விவசாயம் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில், மாவட்ட நிர்வாகம் நடத்தும் மாதாந்திர…
மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மின் பாதை பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளும் நோக்கில் நாளை (ஜூலை 18) திட்டமிட்ட மின்தடை…
தமிழகத்தின் சேலம் மற்றும் மதுரை ரயில்வே கோட்டங்களுக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் தண்டவாள பராமரிப்பு மற்றும் பொறியியல் பணிகள் மேற்கொள்ளப்பட…
மதுரை மாவட்டத்தில் உள்ள அருள்மிகு ஶ்ரீ கள்ளழகர் சுந்தர்ராஜ பெருமாள் திருக்கோவிலில் நடைபெறும் ஆண்டு தோறும் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஆடித்…