கந்தன் மலையாக போற்றப்படும் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில், இவ்வாண்டு கார்த்திகை தீபம் ஏற்ற நீதிமன்ற அனுமதி கிடைத்துள்ளது. அறநிலையத்துறை மறுத்திருந்த நிலையில், மனு தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து மதுரை உயர்நீதிமன்றம் நேரடி அனுமதி வழங்கியது.
மதுரை மாவட்டம் எழுமலையை சேர்ந்த ராம. ரவிக்குமார், மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். மனுவில் அவர் கூறியது:
“மலை உச்சியிலுள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றாமல், பிள்ளையார் கோயிலின் தீப மண்டபத்தில் ஏற்ற முடிவு செய்துள்ளனர்.
இந்த உத்தரவை ரத்து செய்து, மலை உச்சி தீபத்தூணில் திரும்ப தீபம் ஏற்ற அனுமதி வழங்க வேண்டும்.”
அறநிலையத் துறை பாதுகாப்பு காரணங்களால் அனுமதி மறுத்திருந்தது.
நீதிபதி ஜி. ஆர். சுவாமிநாதன் வழக்கை விசாரித்ததன் பின்னர்:
🗨️ “திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபத்தை ஏற்ற அனுமதி வழங்கப்படுகிறது.
காவல்துறை விரைவாகவும், முழுமையாகவும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.”
என்று உத்தரவிட்டார்.
மதுரை மாவட்டத்தில் உள்ள திருப்பரங்குன்றம், நாகமலை புதுக்கோட்டை, வாடிப்பட்டி, ஒத்தக்கடை மற்றும் திருமங்கலம் உள்ளிட்ட 5 சார் பதிவாளர் அலுவலகங்களில்…
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ள முல்லைப் பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நிலவும் கடுமையான வறட்சியால், தேனி, மதுரை,…
மதுரையில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 2026–27 கல்வியாண்டுக்கான டிப்ளமோ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தொடங்கப்பட்டுள்ளது. 1946-ஆம்…
மதுரை வில்லாபுரம் மலர் சந்தையின் பின்புறத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய (TNHB) குடியிருப்புகள் பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி…
மதுரை மாவட்டத்தில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகளை முன்னிட்டு நாளை (ஜூன் 3, 2026) பல்வேறு பகுதிகளில் திட்டமிட்ட மின்தடை…
கோடை விடுமுறை நிறைவடைந்து ஜூன் முதல் வாரத்தில் தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், சென்னை நோக்கி திரும்பும் பயணிகளின்…