கந்தன் மலையாக போற்றப்படும் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில், இவ்வாண்டு கார்த்திகை தீபம் ஏற்ற நீதிமன்ற அனுமதி கிடைத்துள்ளது. அறநிலையத்துறை மறுத்திருந்த நிலையில், மனு தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து மதுரை உயர்நீதிமன்றம் நேரடி அனுமதி வழங்கியது.
மதுரை மாவட்டம் எழுமலையை சேர்ந்த ராம. ரவிக்குமார், மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். மனுவில் அவர் கூறியது:
“மலை உச்சியிலுள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றாமல், பிள்ளையார் கோயிலின் தீப மண்டபத்தில் ஏற்ற முடிவு செய்துள்ளனர்.
இந்த உத்தரவை ரத்து செய்து, மலை உச்சி தீபத்தூணில் திரும்ப தீபம் ஏற்ற அனுமதி வழங்க வேண்டும்.”
அறநிலையத் துறை பாதுகாப்பு காரணங்களால் அனுமதி மறுத்திருந்தது.
நீதிபதி ஜி. ஆர். சுவாமிநாதன் வழக்கை விசாரித்ததன் பின்னர்:
🗨️ “திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபத்தை ஏற்ற அனுமதி வழங்கப்படுகிறது.
காவல்துறை விரைவாகவும், முழுமையாகவும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.”
என்று உத்தரவிட்டார்.
மதுரை சித்திரை திருவிழாவின் மூன்றாம் நாள் நிகழ்வுகள் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 21, 2026) கோலாகலமாக நடைபெற்றன. காலை மற்றும் இரவு…
சித்திரை திருவிழாவின் இரண்டாம் நாளான ஏப்ரல் 20, 2026 திங்கட்கிழமை, காலை 7 மணியளவில் தங்கச்சப்பரத்தில் எழுந்தருளிய இறைவன் நான்கு…
மதுரை நகரில் ஆண்டுதோறும் நடைபெறும் சித்திரை திருவிழாவின் முதல் நாள் நிகழ்வுகள் நேற்று (ஏப்ரல் 19, 2026, ஞாயிற்றுக்கிழமை) வெற்றிகரமாக…
மதுரையில் ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்ற கட்டட திறப்பு விழாவை முன்னிட்டு, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் வருகையால் நாளை நகரில்…
நேரலை கண்காணிப்பு · 19–29 ஏப்ரல் 2026 📍 இணையதளம் மூலம் கண்காணிக்க இங்கே கிளிக் செய்யவும் Track Meenakshi…
நேரலை கண்காணிப்பு · 29 ஏப்ரல் – 6 மே 2026 📍 இணையதளம் மூலம் கண்காணிக்க இங்கே கிளிக்…