சிவகங்கை மாவட்டம் – மடப்புரம் பத்திரகாளியம்மன் கோயிலில் காவலாளியாக பணியாற்றிய அஜித் குமார் (27), நகை திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட பின்னர், குற்றப் பிரிவு தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில் மரணம் அடைந்தது, தமிழகமெங்கும் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து,
அரசியல், சமூக தரப்புகளின் கண்டனங்களுக்கிடையே, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்த வழக்கை மத்திய புலனாய்வு இயக்கத்திடம் (CBI) ஒப்படைக்க உத்தரவிட்டுள்ளார்.
இதையடுத்து, மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தொடரப்பட்ட வழக்கின் அடிப்படையில்,
மதுரை மாவட்ட கூடுதல் நீதிபதி ஜான்சுந்தர்லால் சுரேஷ் விசாரணைக்கு நியமிக்கப்பட்டு, தற்போது இரண்டாவது நாளாக நேரடி விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
இவர் வரும் ஜூலை 8ஆம் தேதி, விசாரணை அறிக்கையை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவுள்ளார். அதன் பிறகே, வழக்கு அதிகாரப்பூர்வமாக CBI-க்கு ஒப்படைக்கப்படும் என அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தநிலையில், மாநில மனித உரிமை ஆணையம், தாமாக முன்வந்து, அஜித் குமார் மரணத்தைப் பற்றிய சுயமுயற்சி விசாரணை தொடங்கியுள்ளது.
இது தொடர்பாக,
மதுரை மாவட்டத்தின் புகழ்பெற்ற அழகர் கோயில் பகுதியில் ஆண்டுதோறும் நடைபெறும் வைகாசி வசந்த உற்சவம் இந்த ஆண்டு மே 22ஆம்…
மதுரையில் நடைபெற்ற கோயில் தரிசன நிகழ்வில் கலந்து கொண்ட அமைச்சர் நிர்மல் குமார், மகளிர் உரிமைத்தொகை ரூ.2,500 வழங்கும் திட்டம்…
மதுரை மாநகராட்சி 100வது வார்டுக்கு உட்பட்ட சந்தோசம் நகர் பகுதியில் வசித்து வரும் மக்கள், பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள்…
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் பகுதியில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயில் கோயிலில் அமைச்சர் நிர்மல் குமார் வருகையை முன்னிட்டு வழக்கமான…
மதுரை மாநகர் காவல் துறையில் பெண்களின் பாதுகாப்பு மற்றும் சட்டம்-ஒழுங்கை வலுப்படுத்தும் நோக்கில் புதிய “சிங்கப்பெண்” சிறப்பு படை பிரிவு…
அந்நிய செலாவணி வெளியேற்றத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் தங்கம் மற்றும் வெள்ளி இறக்குமதிக்கான சுங்க வரியை மத்திய அரசு திடீரென 15…