மதுரை மாநகராட்சியில் ஏற்பட்ட கட்சி உள்போரால், அங்கு இடம்பெறும் பரபரப்பான மாற்றங்கள் அரசியல் வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மேயர் இந்திராணி பொன் வசந்தின் கணவர் பொன் வசந்த், திமுகவில் இருந்து நீக்கப்பட்டதை அடுத்து, முதல்வர் மு.க. ஸ்டாலின், மாநகராட்சியின் அனைத்து மண்டலத் தலைவர்களும் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என கடுமையான உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மதுரை மாநகராட்சியின் மேயர் பதவி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், நிதியமைச்சர் ப. தியாகராஜனின் ஆதரவாளரான 57-வது வார்டு திமுக கவுன்சிலர் இந்திராணி பொன் வசந்த், மேயராக தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து, நிஜ மேயர் பதவியில் இருந்தாலும், நிழல் மேயராக பொன் வசந்த் செயல்பட்டு வந்ததாக பல்வேறு புகார்கள் எழுந்தன.
அரசு ஒப்பந்தங்கள், கடை அனுமதிகள் உள்ளிட்ட முக்கிய முடிவுகளில் அவரின் தலையீடு அதிகமாக இருப்பதாகவும், அவர் தான் நகராட்சி நிர்வாகத்தை இயக்குகிறார் என்ற புகார்கள் தலைமைக்கு சென்றன. இது மட்டுமின்றி, திமுக உறுப்பினர்களே அவருக்கு எதிராக ஆர்பாட்டத்தில் ஈடுபட்டது கட்சிக்குள்ளேயே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், மே 29ம் தேதி திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்ட அறிவிப்பில்,
“57வது வார்டைச் சேர்ந்த பொன் வசந்த், கழகக் கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வந்ததால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளிலிருந்து தற்காலிகமாக நீக்கப்படுகிறார்”
என்று அறிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, முதல்வர் மு.க. ஸ்டாலின், திமுக நிர்வாகிகளுடனான “உடன்பிறப்பே வா” ஒன்-டூ-ஒன் சந்திப்பின் போது,
“தேவையான இடங்களில் தயவு தாட்சண்யமின்றி பதவியைப் பறிப்பேன்”
எனக் கடுமையாக எச்சரித்ததாக தெரிகிறது.
இதன் பின், மதுரை மாநகராட்சியின் அனைத்து மண்டலத் தலைவர்களும் ராஜினாமா செய்யும் வகையில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில், திமுகவின்
🔍 சுருக்கமாக:
உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில் மகா கும்பாபிஷேக விழாவுக்கான பூர்வாங்க பூஜைகள் நாளை தொடங்கி செப்டம்பர் 11…
மதுரை திருப்பாலை பகுதியில் உள்ள இஸ்கான் ஸ்ரீ ஸ்ரீ கிருஷ்ண பலராமர் திருக்கோவிலில் இன்று, செப்டம்பர் 4, 2026 அன்று,…
மதுரை, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள அரசு கள்ளர் பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், காப்பாளர்கள் மற்றும்…
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில், மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர், கோவில் நிர்வாகம்செப்டம்பர் 11 முதல் 16 வரை மூலவர் தரிசனம்…
ஜல்லிக்கட்டு குறித்து தவெக சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா சட்டப்பேரவையில் தெரிவித்த கருத்துகளைக் கண்டித்தும், தவெக அரசைக் கண்டித்தும் செப்டம்பர் 3-ஆம்…
1995 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சோலமலை பொறியியல் கல்லூரி, தரமான தொழில்நுட்ப மற்றும் மேலாண்மைக் கல்வியை வழங்குவதுடன், மாணவர்களின் திறன்…