சமீபத்திய

மீனாட்சி அம்மன் கோயிலில் அறங்காவலர் பதவிக்காலம் 2 ஆண்டுகள் நீட்டிப்பு

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அறங்காவலர் குழுவில், ஏற்கெனவே பதவி வகித்து வந்த பழைய உறுப்பினர்களையே தமிழக அரசு மீண்டும் நியமித்துள்ளது. இதன் மூலம், அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்களின் தாயாரான ருக்மணி பழனிவேல்ராஜன் மீண்டும் அறங்காவலர் குழுத் தலைவராக தேர்வாக உள்ளார்.

உலகப் புகழ்பெற்ற இந்த கோயிலின் தக்காராக கடந்த 18 ஆண்டுகள் பணியாற்றிய கருமுத்து தி. கண்ணன் மறைவுக்குப் பிறகு, தற்காலிகமாக இந்துசமய அறநிலையத் துறை அதிகாரி தக்காராக நியமிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து, 2023 நவம்பர் மாதம் ஐந்து பேர் கொண்ட அறங்காவலர் குழு அமைக்கப்பட்டது.

இந்த குழுவில் ருக்மணி பழனிவேல்ராஜன் உள்ளிட்டோர் இடம்பெற்ற நிலையில், அவர்கள் டிசம்பர் மாதம் பதவியேற்றனர். பின்னர், ருக்மணி பழனிவேல்ராஜன் அறங்காவலர் குழுத் தலைவராக பொறுப்பேற்றார்.

தற்போது, மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் கும்பாபிஷேகப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் சூழலில், அறங்காவலர்களின் பதவிக்காலம் முடிவடைந்ததால் புதிய நியமனம் எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில், திமுகவைச் சேர்ந்த பலரும் அறங்காவலர் பதவிக்கு முயற்சி செய்ததாக கூறப்படும் நிலையில், தமிழக அரசு ஏற்கெனவே இருந்த அறங்காவலர்களின் பதவிக்காலத்தை மேலும் இரண்டு ஆண்டுகள் நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவின் மூலம், பழைய அறங்காவலர் குழுவே தொடர்வதுடன், ருக்மணி பழனிவேல்ராஜன் மீண்டும் தலைவராக தேர்வு செய்யப்பட உள்ளார்.

Thoonganagaram Admin

Recent Posts

மதுரை மீனாட்சி கோவிலில் நாளை முதல் சிறப்பு பூஜைகள்!

உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில் மகா கும்பாபிஷேக விழாவுக்கான பூர்வாங்க பூஜைகள் நாளை தொடங்கி செப்டம்பர் 11…

2 மணி நேரங்கள் ago

இன்று மதுரையில் கிருஷ்ண ஜெயந்தி கோலாகலம்!

மதுரை திருப்பாலை பகுதியில் உள்ள இஸ்கான் ஸ்ரீ ஸ்ரீ கிருஷ்ண பலராமர் திருக்கோவிலில் இன்று, செப்டம்பர் 4, 2026 அன்று,…

1 நாள் ago

ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு தேதி வெளியானது

மதுரை, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள அரசு கள்ளர் பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், காப்பாளர்கள் மற்றும்…

3 நாட்கள் ago

கும்பாபிஷேக ஏற்பாடு செப்.11 முதல் மூலவர் தரிசனம் இல்லை!

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில், மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர், கோவில் நிர்வாகம்செப்டம்பர் 11 முதல் 16 வரை மூலவர் தரிசனம்…

4 நாட்கள் ago

செப்.3 காலை 9.30 மணிக்கு அலங்காநல்லூரில் ஆர்ப்பாட்டம்

ஜல்லிக்கட்டு குறித்து தவெக சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா சட்டப்பேரவையில் தெரிவித்த கருத்துகளைக் கண்டித்தும், தவெக அரசைக் கண்டித்தும் செப்டம்பர் 3-ஆம்…

5 நாட்கள் ago

சோலமலை பொறியியல் கல்லூரி (தன்னாட்சி), மதுரை

1995 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சோலமலை பொறியியல் கல்லூரி, தரமான தொழில்நுட்ப மற்றும் மேலாண்மைக் கல்வியை வழங்குவதுடன், மாணவர்களின் திறன்…

7 நாட்கள் ago