சமீபத்திய

மீனாட்சி அம்மன் கோயிலில் அறங்காவலர் பதவிக்காலம் 2 ஆண்டுகள் நீட்டிப்பு

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அறங்காவலர் குழுவில், ஏற்கெனவே பதவி வகித்து வந்த பழைய உறுப்பினர்களையே தமிழக அரசு மீண்டும் நியமித்துள்ளது. இதன் மூலம், அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்களின் தாயாரான ருக்மணி பழனிவேல்ராஜன் மீண்டும் அறங்காவலர் குழுத் தலைவராக தேர்வாக உள்ளார்.

உலகப் புகழ்பெற்ற இந்த கோயிலின் தக்காராக கடந்த 18 ஆண்டுகள் பணியாற்றிய கருமுத்து தி. கண்ணன் மறைவுக்குப் பிறகு, தற்காலிகமாக இந்துசமய அறநிலையத் துறை அதிகாரி தக்காராக நியமிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து, 2023 நவம்பர் மாதம் ஐந்து பேர் கொண்ட அறங்காவலர் குழு அமைக்கப்பட்டது.

இந்த குழுவில் ருக்மணி பழனிவேல்ராஜன் உள்ளிட்டோர் இடம்பெற்ற நிலையில், அவர்கள் டிசம்பர் மாதம் பதவியேற்றனர். பின்னர், ருக்மணி பழனிவேல்ராஜன் அறங்காவலர் குழுத் தலைவராக பொறுப்பேற்றார்.

தற்போது, மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் கும்பாபிஷேகப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் சூழலில், அறங்காவலர்களின் பதவிக்காலம் முடிவடைந்ததால் புதிய நியமனம் எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில், திமுகவைச் சேர்ந்த பலரும் அறங்காவலர் பதவிக்கு முயற்சி செய்ததாக கூறப்படும் நிலையில், தமிழக அரசு ஏற்கெனவே இருந்த அறங்காவலர்களின் பதவிக்காலத்தை மேலும் இரண்டு ஆண்டுகள் நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவின் மூலம், பழைய அறங்காவலர் குழுவே தொடர்வதுடன், ருக்மணி பழனிவேல்ராஜன் மீண்டும் தலைவராக தேர்வு செய்யப்பட உள்ளார்.

Thoonganagaram Admin

Recent Posts

கொடியேற்றத்துடன் தொடங்கிய கள்ளழகர் ஆடித் திருவிழா

மதுரை மாவட்டத்தில் உள்ள அருள்மிகு ஶ்ரீ கள்ளழகர் சுந்தர்ராஜ பெருமாள் திருக்கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் ஆடித் திருவிழா, இன்று (ஜூலை…

20 மணி நேரங்கள் ago

மதுரையில் 2,000 ஆண்டு தாழிப்பானை கண்டுபிடிப்பு

மதுரை மாவட்டம் பேரையூர் வட்டத்திற்குட்பட்ட பாப்பி நாயக்கன்பட்டி–சங்கரலிங்கபுரம் பகுதியில் உள்ள சல்லுப்பன் கரடு அடிவாரத்தில் சுமார் 2,000 ஆண்டுகள் பழமையானதாகக்…

2 நாட்கள் ago

மதுரையில் ஜூலை 24 விவசாயிகள் குறைதீர் கூட்டம்

மதுரை மாவட்ட விவசாயிகளின் கோரிக்கைகள் மற்றும் விவசாயம் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில், மாவட்ட நிர்வாகம் நடத்தும் மாதாந்திர…

4 நாட்கள் ago

மதுரையில் நாளை திட்டமிட்ட மின்தடை

மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மின் பாதை பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளும் நோக்கில் நாளை (ஜூலை 18) திட்டமிட்ட மின்தடை…

5 நாட்கள் ago

திண்டுக்கல் வழித்தடம் தவிர்த்து ரயில்கள் இயக்கம்

தமிழகத்தின் சேலம் மற்றும் மதுரை ரயில்வே கோட்டங்களுக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் தண்டவாள பராமரிப்பு மற்றும் பொறியியல் பணிகள் மேற்கொள்ளப்பட…

6 நாட்கள் ago

அழகர் கோவிலில் ஆடித் திருவிழா ஜூலை 21ல் தொடக்கம்

மதுரை மாவட்டத்தில் உள்ள அருள்மிகு ஶ்ரீ கள்ளழகர் சுந்தர்ராஜ பெருமாள் திருக்கோவிலில் நடைபெறும் ஆண்டு தோறும் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஆடித்…

7 நாட்கள் ago