மதுரை மாநகரின் தவறவிடக் கூடாத இடங்களில் ஒன்றான காந்தி நினைவு அருங்காட்சியகம், ராணி மங்கம்மாளுக்கு சொந்தமான பேரெழில் கொண்ட பழைய அரண்மனையில் அமைந்துள்ளது. இந்த அருங்காட்சியகம், மிக உயரிய சுதந்திரப் போராட்ட தியாகங்களின் பிரதிபலிப்பாகவும், காந்திய இயக்கத்தை பற்றி நமக்கு அறிமுகம் செய்யும் சாளரமாகவும், பண்டைய கால பொருட்களின் புதையல் ஆகவும் செயல்படுகிறது.
மதுரைக்கும் காந்தியடிகளுக்கும் ஒரு துண்டிக்கப்பட முடியாத பிணைப்பு இருக்கிறது. தீண்டாமைக்கு எதிரான இயக்கத்தின் மிகப்பெரும் முக்கியத்துவம் வாய்ந்த அத்தியாயமான மீனாட்சி திருக்கோவிலின் உள்ளே ஹரிஜன மக்களை அனுமதிக்கும் படலம் மதுரையில் நடந்தது. இந்த அருங்காட்சியகம் தன்னகத்தே கொண்டுள்ள அரண்மனையானது, கிறிஸ்துவுக்குப் பிறகு 1670ம் ஆண்டு நாயக்கர் மன்னர்களால் கட்டப்பட்டது. சேவா கிராமத்தில் உள்ள ஒரு குடிசையின் மாதிரியாக இந்த அருங்காட்சியகத்தின் முக்கிய கட்டிடத்தின் முகப்பு அமைக்கப்பட்டுள்ளது. இங்கு உள்ள நூலகத்தில் பல்லாயிரக்கணக்கான புத்தகங்கள் உள்ளன. அவற்றை புரட்டும் பொழுது காந்தியடிகள் எழுதிய பழைய கடிதங்களும் பல ஆவணக் குறும்படங்களின் தொகுப்புகளும் காணப்படுகின்றன.
பிரதான கட்டிடத்தின் தெற்கே அமைந்துள்ள திறந்தவெளி திரையரங்கம் பல்வேறு கலை நிகழ்ச்சிகளுக்கு தாயகமாக விளங்குகிறது. இங்கு நடக்கும் திருவிழாக்களில் பங்கேற்கும்போது, உங்களது பயணத்தை திட்டமிடுவது சிறந்ததாக இருக்கும். ஒவ்வொரு ஆண்டும் காந்தி ஜெயந்தி விழா ஐந்து நாட்கள் கொண்டாடப்படுவதும் இதன் முக்கிய நிகழ்வாகும்.
அருங்காட்சியகத்தில் ஒரு பிரத்தியேகப் பகுதி காந்தியின் வாழ்க்கையின் சிறந்த சில அத்தியாயங்களை ஒதுக்கியுள்ளது. “இந்தியா சுதந்திரத்திற்காக போராடுகிறது” என்ற பகுதி, சுதந்திரப் போராட்ட இயக்கத்தின் ஆணி வேர்களை அழகான படங்கள் மற்றும் ஓவியங்களுடன் விவரிக்கின்றன. இந்த பகுதியை அரண்மனையின் தர்பார் மண்டபம் ஒதுக்கப்பட்டுள்ளது. காந்தியின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் பல புகைப்படங்கள், ஓவியங்கள் மற்றும் சிற்பங்கள் இங்கு பார்வையாளர்களுக்காக வைக்கப்பட்டுள்ளது.
இந்த அருங்காட்சியகத்தின் மூன்றாவது பகுதி, காந்தி தனது வாழ்நாளில் பயன்படுத்திய நூறு அன்றாட சாதனங்களை காட்சிக்கு வைத்துள்ளது. இதில், ஹிட்லருக்கு காந்தி எழுதிய கடிதம் மற்றும் அவர் படுகொலை செய்யப்பட்ட நாளில் அணிந்திருந்த ரத்தம் தோய்ந்த துணியும் போன்ற முக்கிய பொருட்கள் காணப்படுகின்றன.
மதுரை மாவட்டத்தில் உள்ள திருப்பரங்குன்றம், நாகமலை புதுக்கோட்டை, வாடிப்பட்டி, ஒத்தக்கடை மற்றும் திருமங்கலம் உள்ளிட்ட 5 சார் பதிவாளர் அலுவலகங்களில்…
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ள முல்லைப் பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நிலவும் கடுமையான வறட்சியால், தேனி, மதுரை,…
மதுரையில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 2026–27 கல்வியாண்டுக்கான டிப்ளமோ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தொடங்கப்பட்டுள்ளது. 1946-ஆம்…
மதுரை வில்லாபுரம் மலர் சந்தையின் பின்புறத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய (TNHB) குடியிருப்புகள் பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி…
மதுரை மாவட்டத்தில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகளை முன்னிட்டு நாளை (ஜூன் 3, 2026) பல்வேறு பகுதிகளில் திட்டமிட்ட மின்தடை…
கோடை விடுமுறை நிறைவடைந்து ஜூன் முதல் வாரத்தில் தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், சென்னை நோக்கி திரும்பும் பயணிகளின்…