சுற்றுலா

காந்தி நினைவு அருங்காட்சியகம்

மதுரை மாநகரின் தவறவிடக் கூடாத இடங்களில் ஒன்றான காந்தி நினைவு அருங்காட்சியகம், ராணி மங்கம்மாளுக்கு சொந்தமான பேரெழில் கொண்ட பழைய அரண்மனையில் அமைந்துள்ளது. இந்த அருங்காட்சியகம், மிக உயரிய சுதந்திரப் போராட்ட தியாகங்களின் பிரதிபலிப்பாகவும், காந்திய இயக்கத்தை பற்றி நமக்கு அறிமுகம் செய்யும் சாளரமாகவும், பண்டைய கால பொருட்களின் புதையல் ஆகவும் செயல்படுகிறது.

மதுரைக்கும் காந்தியடிகளுக்கும் ஒரு துண்டிக்கப்பட முடியாத பிணைப்பு இருக்கிறது. தீண்டாமைக்கு எதிரான இயக்கத்தின் மிகப்பெரும் முக்கியத்துவம் வாய்ந்த அத்தியாயமான மீனாட்சி திருக்கோவிலின் உள்ளே ஹரிஜன மக்களை அனுமதிக்கும் படலம் மதுரையில் நடந்தது. இந்த அருங்காட்சியகம் தன்னகத்தே கொண்டுள்ள அரண்மனையானது, கிறிஸ்துவுக்குப் பிறகு 1670ம் ஆண்டு நாயக்கர் மன்னர்களால் கட்டப்பட்டது. சேவா கிராமத்தில் உள்ள ஒரு குடிசையின் மாதிரியாக இந்த அருங்காட்சியகத்தின் முக்கிய கட்டிடத்தின் முகப்பு அமைக்கப்பட்டுள்ளது. இங்கு உள்ள நூலகத்தில் பல்லாயிரக்கணக்கான புத்தகங்கள் உள்ளன. அவற்றை புரட்டும் பொழுது காந்தியடிகள் எழுதிய பழைய கடிதங்களும் பல ஆவணக் குறும்படங்களின் தொகுப்புகளும் காணப்படுகின்றன.

பிரதான கட்டிடத்தின் தெற்கே அமைந்துள்ள திறந்தவெளி திரையரங்கம் பல்வேறு கலை நிகழ்ச்சிகளுக்கு தாயகமாக விளங்குகிறது. இங்கு நடக்கும் திருவிழாக்களில் பங்கேற்கும்போது, உங்களது பயணத்தை திட்டமிடுவது சிறந்ததாக இருக்கும். ஒவ்வொரு ஆண்டும் காந்தி ஜெயந்தி விழா ஐந்து நாட்கள் கொண்டாடப்படுவதும் இதன் முக்கிய நிகழ்வாகும்.

அருங்காட்சியகத்தில் ஒரு பிரத்தியேகப் பகுதி காந்தியின் வாழ்க்கையின் சிறந்த சில அத்தியாயங்களை ஒதுக்கியுள்ளது. “இந்தியா சுதந்திரத்திற்காக போராடுகிறது” என்ற பகுதி, சுதந்திரப் போராட்ட இயக்கத்தின் ஆணி வேர்களை அழகான படங்கள் மற்றும் ஓவியங்களுடன் விவரிக்கின்றன. இந்த பகுதியை அரண்மனையின் தர்பார் மண்டபம் ஒதுக்கப்பட்டுள்ளது. காந்தியின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் பல புகைப்படங்கள், ஓவியங்கள் மற்றும் சிற்பங்கள் இங்கு பார்வையாளர்களுக்காக வைக்கப்பட்டுள்ளது.

இந்த அருங்காட்சியகத்தின் மூன்றாவது பகுதி, காந்தி தனது வாழ்நாளில் பயன்படுத்திய நூறு அன்றாட சாதனங்களை காட்சிக்கு வைத்துள்ளது. இதில், ஹிட்லருக்கு காந்தி எழுதிய கடிதம் மற்றும் அவர் படுகொலை செய்யப்பட்ட நாளில் அணிந்திருந்த ரத்தம் தோய்ந்த துணியும் போன்ற முக்கிய பொருட்கள் காணப்படுகின்றன.

Thoonganagaram Admin

Share
Published by
Thoonganagaram Admin

Recent Posts

மதுரை மீனாட்சி கோவிலில் நாளை முதல் சிறப்பு பூஜைகள்!

உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில் மகா கும்பாபிஷேக விழாவுக்கான பூர்வாங்க பூஜைகள் நாளை தொடங்கி செப்டம்பர் 11…

25 minutes ago

இன்று மதுரையில் கிருஷ்ண ஜெயந்தி கோலாகலம்!

மதுரை திருப்பாலை பகுதியில் உள்ள இஸ்கான் ஸ்ரீ ஸ்ரீ கிருஷ்ண பலராமர் திருக்கோவிலில் இன்று, செப்டம்பர் 4, 2026 அன்று,…

1 நாள் ago

ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு தேதி வெளியானது

மதுரை, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள அரசு கள்ளர் பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், காப்பாளர்கள் மற்றும்…

3 நாட்கள் ago

கும்பாபிஷேக ஏற்பாடு செப்.11 முதல் மூலவர் தரிசனம் இல்லை!

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில், மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர், கோவில் நிர்வாகம்செப்டம்பர் 11 முதல் 16 வரை மூலவர் தரிசனம்…

4 நாட்கள் ago

செப்.3 காலை 9.30 மணிக்கு அலங்காநல்லூரில் ஆர்ப்பாட்டம்

ஜல்லிக்கட்டு குறித்து தவெக சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா சட்டப்பேரவையில் தெரிவித்த கருத்துகளைக் கண்டித்தும், தவெக அரசைக் கண்டித்தும் செப்டம்பர் 3-ஆம்…

5 நாட்கள் ago

சோலமலை பொறியியல் கல்லூரி (தன்னாட்சி), மதுரை

1995 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சோலமலை பொறியியல் கல்லூரி, தரமான தொழில்நுட்ப மற்றும் மேலாண்மைக் கல்வியை வழங்குவதுடன், மாணவர்களின் திறன்…

7 நாட்கள் ago