சுற்றுலா

காந்தி நினைவு அருங்காட்சியகம்

மதுரை மாநகரின் தவறவிடக் கூடாத இடங்களில் ஒன்றான காந்தி நினைவு அருங்காட்சியகம், ராணி மங்கம்மாளுக்கு சொந்தமான பேரெழில் கொண்ட பழைய அரண்மனையில் அமைந்துள்ளது. இந்த அருங்காட்சியகம், மிக உயரிய சுதந்திரப் போராட்ட தியாகங்களின் பிரதிபலிப்பாகவும், காந்திய இயக்கத்தை பற்றி நமக்கு அறிமுகம் செய்யும் சாளரமாகவும், பண்டைய கால பொருட்களின் புதையல் ஆகவும் செயல்படுகிறது.

மதுரைக்கும் காந்தியடிகளுக்கும் ஒரு துண்டிக்கப்பட முடியாத பிணைப்பு இருக்கிறது. தீண்டாமைக்கு எதிரான இயக்கத்தின் மிகப்பெரும் முக்கியத்துவம் வாய்ந்த அத்தியாயமான மீனாட்சி திருக்கோவிலின் உள்ளே ஹரிஜன மக்களை அனுமதிக்கும் படலம் மதுரையில் நடந்தது. இந்த அருங்காட்சியகம் தன்னகத்தே கொண்டுள்ள அரண்மனையானது, கிறிஸ்துவுக்குப் பிறகு 1670ம் ஆண்டு நாயக்கர் மன்னர்களால் கட்டப்பட்டது. சேவா கிராமத்தில் உள்ள ஒரு குடிசையின் மாதிரியாக இந்த அருங்காட்சியகத்தின் முக்கிய கட்டிடத்தின் முகப்பு அமைக்கப்பட்டுள்ளது. இங்கு உள்ள நூலகத்தில் பல்லாயிரக்கணக்கான புத்தகங்கள் உள்ளன. அவற்றை புரட்டும் பொழுது காந்தியடிகள் எழுதிய பழைய கடிதங்களும் பல ஆவணக் குறும்படங்களின் தொகுப்புகளும் காணப்படுகின்றன.

பிரதான கட்டிடத்தின் தெற்கே அமைந்துள்ள திறந்தவெளி திரையரங்கம் பல்வேறு கலை நிகழ்ச்சிகளுக்கு தாயகமாக விளங்குகிறது. இங்கு நடக்கும் திருவிழாக்களில் பங்கேற்கும்போது, உங்களது பயணத்தை திட்டமிடுவது சிறந்ததாக இருக்கும். ஒவ்வொரு ஆண்டும் காந்தி ஜெயந்தி விழா ஐந்து நாட்கள் கொண்டாடப்படுவதும் இதன் முக்கிய நிகழ்வாகும்.

அருங்காட்சியகத்தில் ஒரு பிரத்தியேகப் பகுதி காந்தியின் வாழ்க்கையின் சிறந்த சில அத்தியாயங்களை ஒதுக்கியுள்ளது. “இந்தியா சுதந்திரத்திற்காக போராடுகிறது” என்ற பகுதி, சுதந்திரப் போராட்ட இயக்கத்தின் ஆணி வேர்களை அழகான படங்கள் மற்றும் ஓவியங்களுடன் விவரிக்கின்றன. இந்த பகுதியை அரண்மனையின் தர்பார் மண்டபம் ஒதுக்கப்பட்டுள்ளது. காந்தியின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் பல புகைப்படங்கள், ஓவியங்கள் மற்றும் சிற்பங்கள் இங்கு பார்வையாளர்களுக்காக வைக்கப்பட்டுள்ளது.

இந்த அருங்காட்சியகத்தின் மூன்றாவது பகுதி, காந்தி தனது வாழ்நாளில் பயன்படுத்திய நூறு அன்றாட சாதனங்களை காட்சிக்கு வைத்துள்ளது. இதில், ஹிட்லருக்கு காந்தி எழுதிய கடிதம் மற்றும் அவர் படுகொலை செய்யப்பட்ட நாளில் அணிந்திருந்த ரத்தம் தோய்ந்த துணியும் போன்ற முக்கிய பொருட்கள் காணப்படுகின்றன.

Thoonganagaram Admin

Share
Published by
Thoonganagaram Admin

Recent Posts

மாசி வீதிகள் முழுவதும் பக்தர்கள் – கைலாச காட்சியில் திருவிழா களைகட்டியத்து

மதுரை சித்திரை திருவிழாவின் மூன்றாம் நாள் நிகழ்வுகள் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 21, 2026) கோலாகலமாக நடைபெற்றன. காலை மற்றும் இரவு…

8 மணி நேரங்கள் ago

சித்திரை விழா இரண்டாம் நாள் வெகு சிறப்பு

சித்திரை திருவிழாவின் இரண்டாம் நாளான ஏப்ரல் 20, 2026 திங்கட்கிழமை, காலை 7 மணியளவில் தங்கச்சப்பரத்தில் எழுந்தருளிய இறைவன் நான்கு…

1 நாள் ago

கொடியேற்றம், சிம்ஹாசனம், வாகன சேவை–முதல் நாள் கோலாகலம்

மதுரை நகரில் ஆண்டுதோறும் நடைபெறும் சித்திரை திருவிழாவின் முதல் நாள் நிகழ்வுகள் நேற்று (ஏப்ரல் 19, 2026, ஞாயிற்றுக்கிழமை) வெற்றிகரமாக…

2 நாட்கள் ago

மதுரையில் நாளை போக்குவரத்து மாற்றம்

மதுரையில் ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்ற கட்டட திறப்பு விழாவை முன்னிட்டு, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் வருகையால் நாளை நகரில்…

4 நாட்கள் ago

Track Meenakshi Amman – மதுரை சித்திரை திருவிழா 2026 | மீனாட்சி அம்மன் & சுந்தரேஸ்வரர் வீதி உலா Live Tracking

நேரலை கண்காணிப்பு · 19–29 ஏப்ரல் 2026 📍 இணையதளம் மூலம் கண்காணிக்க இங்கே கிளிக் செய்யவும் Track Meenakshi…

5 நாட்கள் ago

Track Alagar | மதுரை சித்திரை திருவிழா 2026 – கள்ளழகர் இருக்கும் இடம் Live Tracking

நேரலை கண்காணிப்பு · 29 ஏப்ரல் – 6 மே 2026 📍 இணையதளம் மூலம் கண்காணிக்க இங்கே கிளிக்…

5 நாட்கள் ago