சுற்றுலா

காந்தி நினைவு அருங்காட்சியகம்

மதுரை மாநகரின் தவறவிடக் கூடாத இடங்களில் ஒன்றான காந்தி நினைவு அருங்காட்சியகம், ராணி மங்கம்மாளுக்கு சொந்தமான பேரெழில் கொண்ட பழைய அரண்மனையில் அமைந்துள்ளது. இந்த அருங்காட்சியகம், மிக உயரிய சுதந்திரப் போராட்ட தியாகங்களின் பிரதிபலிப்பாகவும், காந்திய இயக்கத்தை பற்றி நமக்கு அறிமுகம் செய்யும் சாளரமாகவும், பண்டைய கால பொருட்களின் புதையல் ஆகவும் செயல்படுகிறது.

மதுரைக்கும் காந்தியடிகளுக்கும் ஒரு துண்டிக்கப்பட முடியாத பிணைப்பு இருக்கிறது. தீண்டாமைக்கு எதிரான இயக்கத்தின் மிகப்பெரும் முக்கியத்துவம் வாய்ந்த அத்தியாயமான மீனாட்சி திருக்கோவிலின் உள்ளே ஹரிஜன மக்களை அனுமதிக்கும் படலம் மதுரையில் நடந்தது. இந்த அருங்காட்சியகம் தன்னகத்தே கொண்டுள்ள அரண்மனையானது, கிறிஸ்துவுக்குப் பிறகு 1670ம் ஆண்டு நாயக்கர் மன்னர்களால் கட்டப்பட்டது. சேவா கிராமத்தில் உள்ள ஒரு குடிசையின் மாதிரியாக இந்த அருங்காட்சியகத்தின் முக்கிய கட்டிடத்தின் முகப்பு அமைக்கப்பட்டுள்ளது. இங்கு உள்ள நூலகத்தில் பல்லாயிரக்கணக்கான புத்தகங்கள் உள்ளன. அவற்றை புரட்டும் பொழுது காந்தியடிகள் எழுதிய பழைய கடிதங்களும் பல ஆவணக் குறும்படங்களின் தொகுப்புகளும் காணப்படுகின்றன.

பிரதான கட்டிடத்தின் தெற்கே அமைந்துள்ள திறந்தவெளி திரையரங்கம் பல்வேறு கலை நிகழ்ச்சிகளுக்கு தாயகமாக விளங்குகிறது. இங்கு நடக்கும் திருவிழாக்களில் பங்கேற்கும்போது, உங்களது பயணத்தை திட்டமிடுவது சிறந்ததாக இருக்கும். ஒவ்வொரு ஆண்டும் காந்தி ஜெயந்தி விழா ஐந்து நாட்கள் கொண்டாடப்படுவதும் இதன் முக்கிய நிகழ்வாகும்.

அருங்காட்சியகத்தில் ஒரு பிரத்தியேகப் பகுதி காந்தியின் வாழ்க்கையின் சிறந்த சில அத்தியாயங்களை ஒதுக்கியுள்ளது. “இந்தியா சுதந்திரத்திற்காக போராடுகிறது” என்ற பகுதி, சுதந்திரப் போராட்ட இயக்கத்தின் ஆணி வேர்களை அழகான படங்கள் மற்றும் ஓவியங்களுடன் விவரிக்கின்றன. இந்த பகுதியை அரண்மனையின் தர்பார் மண்டபம் ஒதுக்கப்பட்டுள்ளது. காந்தியின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் பல புகைப்படங்கள், ஓவியங்கள் மற்றும் சிற்பங்கள் இங்கு பார்வையாளர்களுக்காக வைக்கப்பட்டுள்ளது.

இந்த அருங்காட்சியகத்தின் மூன்றாவது பகுதி, காந்தி தனது வாழ்நாளில் பயன்படுத்திய நூறு அன்றாட சாதனங்களை காட்சிக்கு வைத்துள்ளது. இதில், ஹிட்லருக்கு காந்தி எழுதிய கடிதம் மற்றும் அவர் படுகொலை செய்யப்பட்ட நாளில் அணிந்திருந்த ரத்தம் தோய்ந்த துணியும் போன்ற முக்கிய பொருட்கள் காணப்படுகின்றன.

Thoonganagaram Admin

Share
Published by
Thoonganagaram Admin

Recent Posts

கொடியேற்றத்துடன் தொடங்கிய கள்ளழகர் ஆடித் திருவிழா

மதுரை மாவட்டத்தில் உள்ள அருள்மிகு ஶ்ரீ கள்ளழகர் சுந்தர்ராஜ பெருமாள் திருக்கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் ஆடித் திருவிழா, இன்று (ஜூலை…

18 மணி நேரங்கள் ago

மதுரையில் 2,000 ஆண்டு தாழிப்பானை கண்டுபிடிப்பு

மதுரை மாவட்டம் பேரையூர் வட்டத்திற்குட்பட்ட பாப்பி நாயக்கன்பட்டி–சங்கரலிங்கபுரம் பகுதியில் உள்ள சல்லுப்பன் கரடு அடிவாரத்தில் சுமார் 2,000 ஆண்டுகள் பழமையானதாகக்…

2 நாட்கள் ago

மதுரையில் ஜூலை 24 விவசாயிகள் குறைதீர் கூட்டம்

மதுரை மாவட்ட விவசாயிகளின் கோரிக்கைகள் மற்றும் விவசாயம் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில், மாவட்ட நிர்வாகம் நடத்தும் மாதாந்திர…

4 நாட்கள் ago

மதுரையில் நாளை திட்டமிட்ட மின்தடை

மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மின் பாதை பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளும் நோக்கில் நாளை (ஜூலை 18) திட்டமிட்ட மின்தடை…

5 நாட்கள் ago

திண்டுக்கல் வழித்தடம் தவிர்த்து ரயில்கள் இயக்கம்

தமிழகத்தின் சேலம் மற்றும் மதுரை ரயில்வே கோட்டங்களுக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் தண்டவாள பராமரிப்பு மற்றும் பொறியியல் பணிகள் மேற்கொள்ளப்பட…

6 நாட்கள் ago

அழகர் கோவிலில் ஆடித் திருவிழா ஜூலை 21ல் தொடக்கம்

மதுரை மாவட்டத்தில் உள்ள அருள்மிகு ஶ்ரீ கள்ளழகர் சுந்தர்ராஜ பெருமாள் திருக்கோவிலில் நடைபெறும் ஆண்டு தோறும் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஆடித்…

7 நாட்கள் ago