protest.jpg

மாபெரும் கண்டனத்திற்கு தயாராகுங்கள்! – ஜூன் 18 தமிழரின் உரிமைக்கான எழுச்சி!

தமிழர்களின் தொன்மை மற்றும் அறிவியல் அடிப்படையிலான நம் பாரம்பரியத்தை மறைக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசை கண்டித்துப், தி.மு.க. மாணவர் அணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் ஜூன் 18ஆம் தேதி காலை 10 மணி, மதுரை வீரகனூர் சுற்றுச்சாலையில் நடைபெறுகிறது.

கீழடியில் கண்டுபிடிக்கப்பட்ட தொன்மைகளை அறிவியல்பூர்வமாக நிரூபித்தும், அவற்றை ஏற்று உலகுக்கு அறிவிக்க மத்திய அரசு தவிர்த்து வரும் நிலைப்பாட்டை எதிர்த்து, இந்தக் கண்டனத்தில் பெருந்திரளாகக் கலந்துகொள்ள மாணவர் அணி செயலாளர் இரா. ராஜீவ்காந்தி அழைப்பு விடுத்துள்ளார்.

அமைச்சர் தங்கம் தென்னரசு கூறுவதுபோல், “உண்மையை மறுக்கும் மனங்களை மாற்றுவது நம் கடமை!” என்ற திடமான நம்பிக்கையுடன், இந்த ஆர்ப்பாட்டம் தமிழர்களின் உரிமைகளையும், மரபுகளையும் உலகம் முழுவதும் உரக்க வெளிப்படுத்தும் ஒரு புரட்சி ஆகும்.