கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தை சேர்ந்த விஜயகுமாரி, சென்னை உயர்நீதிமன்றம் மதுரைக்கிளையில் சொத்து ஆவணங்கள் மாயமானதைப் பற்றி வழக்கு தொடர்ந்தார்.
வழக்கில் கூறியபடி, விஜயகுமாரியின் உறவினர் புஷ்பத்திற்கு விருதுநகர் மாவட்டம் மீஞ்சூர் கிராமத்தில் 5 ஏக்கர் நிலம் இருந்தது. அவர் மரணம் அடைந்த பிறகு, அந்த நிலத்தை அவரது மகன் விஜய் ஆண்டனி தனது பெயருக்கு மாற்ற முயற்சி செய்தார். ஆனால் சொத்து ஆவணங்கள் காணாமல் போனதால், அந்த ஆவணங்களை மீட்டெடுக்க விருதுநகர் மாவட்ட பொது தகவல் அதிகாரியிடம் தகவல் அறியும் உரிமை (RTI) சட்டத்தின் கீழ் விண்ணப்பித்தார். பதில் மறுக்கப்பட்டதால், மாவட்ட ஆட்சியர் மற்றும் தமிழ்நாடு மாநில தகவல் ஆணைய அதிகாரிகளிடம் கூட விண்ணப்பித்தார்.
தாசில்தார் அலுவலகத்தில் ஆவணங்களை ஆய்வு செய்ய உத்தரவுக்குப் பிறகும், விஜய் ஆண்டனிக்கு உரிய ஆவணங்கள் வழங்கப்படவில்லை. இதனால் தமிழ்நாடு மாநில தகவல் ஆணையரின் உத்தரவு புறக்கணிக்கப்பட்டதாகவும் மனுவில் கூறப்பட்டது.
சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி பாலாஜி வழக்கை விசாரித்த போது, அரசு தரப்பின் வழக்கறிஞர் பொதுப் பதிவுகள் குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே பராமரிக்கப்படுவதாக தெரிவித்தார்.
ஆனால் நீதிபதி பாலாஜி உத்தரவாக,
“நில ஒதுக்கீடு சம்பந்தமான ஆவணங்கள் தொலைந்துவிட்டன அல்லது அழிக்கப்பட்டன என்பதை ஏற்க முடியாது. சொத்து ஆவணங்கள் நிரந்தர பதிவாகும். அதனால் மனுதாரருக்கு பதிவுகளை வழங்காமல் இருக்க அதிகாரிகள் சாக்குப்போக்கு கூறுவது சரியல்ல. சம்பந்தப்பட்ட ஆவணங்களை தயார் செய்து, 8 வாரங்களுக்குள் மனுதாரருக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.”
இந்த உத்தரவு தமிழக அரசு மற்றும் அதிகாரிகளுக்கு நெருக்கடி அளித்துள்ளது.
சுருக்கமாக:
உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில் மகா கும்பாபிஷேக விழாவுக்கான பூர்வாங்க பூஜைகள் நாளை தொடங்கி செப்டம்பர் 11…
மதுரை திருப்பாலை பகுதியில் உள்ள இஸ்கான் ஸ்ரீ ஸ்ரீ கிருஷ்ண பலராமர் திருக்கோவிலில் இன்று, செப்டம்பர் 4, 2026 அன்று,…
மதுரை, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள அரசு கள்ளர் பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், காப்பாளர்கள் மற்றும்…
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில், மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர், கோவில் நிர்வாகம்செப்டம்பர் 11 முதல் 16 வரை மூலவர் தரிசனம்…
ஜல்லிக்கட்டு குறித்து தவெக சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா சட்டப்பேரவையில் தெரிவித்த கருத்துகளைக் கண்டித்தும், தவெக அரசைக் கண்டித்தும் செப்டம்பர் 3-ஆம்…
1995 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சோலமலை பொறியியல் கல்லூரி, தரமான தொழில்நுட்ப மற்றும் மேலாண்மைக் கல்வியை வழங்குவதுடன், மாணவர்களின் திறன்…