ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22ம் தேதி நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலுக்குப் பதிலளிக்கும் வகையில் மதுரை ஆதீனம் கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளார். இந்த தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததும், 17 பேர் படுகாயமடைந்ததும் நாடெங்கிலும் பெரும் அதிர்வலை உருவாக்கியுள்ளது.
இந்தப் பயங்கரச் சம்பவம் குறித்து வீடியோவொன்றை வெளியிட்ட மதுரை ஆதீனம், தமது ஆவேசப்பூர்வமான பதிலில் கூறியதாவது:
“வன்மையாக கண்டிக்கத்தக்க சம்பவம் இது. ‘நீங்க யாரு’னு கேட்டுக்கேட்டே, சுற்றுலாப் பயணிகளை கொன்றிருக்காங்க. உலக நாடுகள் முழுவதும் இந்தச் சம்பவத்தை வன்மையாகக் கண்டிக்க வேண்டும். ஐநா சபையிலிருந்து பாகிஸ்தானை உடனடியாக நீக்க வேண்டும். விளையாட்டு மட்டுமல்ல, எந்தவித உறவுகளும் பாகிஸ்தானுடன் இருக்கக்கூடாது.”
அதுமட்டுமின்றி, இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி எடுத்துள்ள நடவடிக்கைகளை மதுரை ஆதீனம் பாராட்டினார்.
“இது 60 ஆண்டுகளாக நடந்து கொண்டிருக்கும் விவகாரம். நம் பிரதமர் வந்துதான் இதை முறையாக சரிசெய்து வருகிறார். ஆனால் இதற்கெல்லாம் மூலக்காரணம் சைனாக்காரன் தான். ஆயுதங்களை வழங்குவது சீனாவே. கம்யூனிஸ்ட் நாடான சீனா, யாரும் இருக்கக்கூடாது என படைகள் அனுப்புகிறது.”
அதீனம் மேலும் கூறியதாவது:
“சைனாவும் பாகிஸ்தானும் ஒரே மாதிரியான எதிரிகளைப் போலவே செயல்படுகின்றன. இந்த இரு நாடுகளின் செயல்களை உலக நாடுகள் கண்டித்து, முழுமையாக முறையிட வேண்டும்.”
இந்த தாக்குதலுக்கு எதிராக மதுரை ஆதீனத்தின் இந்த ஆவேசமான பதிலுக்கு சமூக வலைதளங்களில் பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
மதுரை மாவட்டத்தில் உள்ள திருப்பரங்குன்றம், நாகமலை புதுக்கோட்டை, வாடிப்பட்டி, ஒத்தக்கடை மற்றும் திருமங்கலம் உள்ளிட்ட 5 சார் பதிவாளர் அலுவலகங்களில்…
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ள முல்லைப் பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நிலவும் கடுமையான வறட்சியால், தேனி, மதுரை,…
மதுரையில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 2026–27 கல்வியாண்டுக்கான டிப்ளமோ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தொடங்கப்பட்டுள்ளது. 1946-ஆம்…
மதுரை வில்லாபுரம் மலர் சந்தையின் பின்புறத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய (TNHB) குடியிருப்புகள் பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி…
மதுரை மாவட்டத்தில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகளை முன்னிட்டு நாளை (ஜூன் 3, 2026) பல்வேறு பகுதிகளில் திட்டமிட்ட மின்தடை…
கோடை விடுமுறை நிறைவடைந்து ஜூன் முதல் வாரத்தில் தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், சென்னை நோக்கி திரும்பும் பயணிகளின்…