சமீபத்திய

பாகிஸ்தானும் சைனாவும் தீவிரவாதத்தின் முகம் – பஹல்காம் தாக்குதலுக்கு மதுரை ஆதீனம் ஆவேச கண்டனம்!

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22ம் தேதி நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலுக்குப் பதிலளிக்கும் வகையில் மதுரை ஆதீனம் கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளார். இந்த தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததும், 17 பேர் படுகாயமடைந்ததும் நாடெங்கிலும் பெரும் அதிர்வலை உருவாக்கியுள்ளது.

இந்தப் பயங்கரச் சம்பவம் குறித்து வீடியோவொன்றை வெளியிட்ட மதுரை ஆதீனம், தமது ஆவேசப்பூர்வமான பதிலில் கூறியதாவது:

“வன்மையாக கண்டிக்கத்தக்க சம்பவம் இது. ‘நீங்க யாரு’னு கேட்டுக்கேட்டே, சுற்றுலாப் பயணிகளை கொன்றிருக்காங்க. உலக நாடுகள் முழுவதும் இந்தச் சம்பவத்தை வன்மையாகக் கண்டிக்க வேண்டும். ஐநா சபையிலிருந்து பாகிஸ்தானை உடனடியாக நீக்க வேண்டும். விளையாட்டு மட்டுமல்ல, எந்தவித உறவுகளும் பாகிஸ்தானுடன் இருக்கக்கூடாது.”

அதுமட்டுமின்றி, இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி எடுத்துள்ள நடவடிக்கைகளை மதுரை ஆதீனம் பாராட்டினார்.

“இது 60 ஆண்டுகளாக நடந்து கொண்டிருக்கும் விவகாரம். நம் பிரதமர் வந்துதான் இதை முறையாக சரிசெய்து வருகிறார். ஆனால் இதற்கெல்லாம் மூலக்காரணம் சைனாக்காரன் தான். ஆயுதங்களை வழங்குவது சீனாவே. கம்யூனிஸ்ட் நாடான சீனா, யாரும் இருக்கக்கூடாது என படைகள் அனுப்புகிறது.”

அதீனம் மேலும் கூறியதாவது:

“சைனாவும் பாகிஸ்தானும் ஒரே மாதிரியான எதிரிகளைப் போலவே செயல்படுகின்றன. இந்த இரு நாடுகளின் செயல்களை உலக நாடுகள் கண்டித்து, முழுமையாக முறையிட வேண்டும்.”

இந்த தாக்குதலுக்கு எதிராக மதுரை ஆதீனத்தின் இந்த ஆவேசமான பதிலுக்கு சமூக வலைதளங்களில் பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

Thoonganagaram Admin

Recent Posts

மதுரை மீனாட்சி கோவிலில் நாளை முதல் சிறப்பு பூஜைகள்!

உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில் மகா கும்பாபிஷேக விழாவுக்கான பூர்வாங்க பூஜைகள் நாளை தொடங்கி செப்டம்பர் 11…

3 மணி நேரங்கள் ago

இன்று மதுரையில் கிருஷ்ண ஜெயந்தி கோலாகலம்!

மதுரை திருப்பாலை பகுதியில் உள்ள இஸ்கான் ஸ்ரீ ஸ்ரீ கிருஷ்ண பலராமர் திருக்கோவிலில் இன்று, செப்டம்பர் 4, 2026 அன்று,…

1 நாள் ago

ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு தேதி வெளியானது

மதுரை, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள அரசு கள்ளர் பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், காப்பாளர்கள் மற்றும்…

3 நாட்கள் ago

கும்பாபிஷேக ஏற்பாடு செப்.11 முதல் மூலவர் தரிசனம் இல்லை!

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில், மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர், கோவில் நிர்வாகம்செப்டம்பர் 11 முதல் 16 வரை மூலவர் தரிசனம்…

4 நாட்கள் ago

செப்.3 காலை 9.30 மணிக்கு அலங்காநல்லூரில் ஆர்ப்பாட்டம்

ஜல்லிக்கட்டு குறித்து தவெக சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா சட்டப்பேரவையில் தெரிவித்த கருத்துகளைக் கண்டித்தும், தவெக அரசைக் கண்டித்தும் செப்டம்பர் 3-ஆம்…

5 நாட்கள் ago

சோலமலை பொறியியல் கல்லூரி (தன்னாட்சி), மதுரை

1995 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சோலமலை பொறியியல் கல்லூரி, தரமான தொழில்நுட்ப மற்றும் மேலாண்மைக் கல்வியை வழங்குவதுடன், மாணவர்களின் திறன்…

7 நாட்கள் ago