தமிழகத்தில் உள்ள அரசு உதவி மற்றும் தனியார் பள்ளிகளில், மாணவர்களை ஏற்றிச் செல்லும் பள்ளி வாகனங்கள் ஏராளமாக இயக்கப்படுகின்றன. இவ்வாகனங்களின் பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்பத் தகுதிகள் மதிப்பீடு செய்யும் நோக்கில், ஆண்டுதோறும் சான்றிதழ் வழங்கும் பரிசோதனைகள் நடத்தப்படுவது வழமை.
இந்த ஆண்டுக்கான ஆய்வுகள் மதுரை ஆயுதப்படை மைதானத்தில் நேற்று நடைபெற்றன. இதில் மதுரை மாவட்ட கலெக்டர் சங்கீதா நேரில் பங்கேற்று, வாகனங்களின் நிலை, தேவையான வசதிகள், மற்றும் பாதுகாப்பு முறைமைகள் குறித்து அதிகாரிகளுக்கு வழிகாட்டுதல் வழங்கினார்.
கல்வியாண்டு தொடங்கவுள்ள நிலையில், பள்ளி மாணவர்கள் பயன்படுத்தவுள்ள வாகனங்கள் பாதுகாப்பானவையாக இருக்க வேண்டும் என்ற நோக்கில், தமிழ்நாடு பள்ளி வாகன சிறப்பு விதி அடிப்படையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் போக்குவரத்துத்துறை, காவல்துறை, வருவாய்த் துறை மற்றும் பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் ஒருங்கிணைந்து பணியாற்றினர்.
மதுரை சித்திரை திருவிழாவின் மூன்றாம் நாள் நிகழ்வுகள் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 21, 2026) கோலாகலமாக நடைபெற்றன. காலை மற்றும் இரவு…
சித்திரை திருவிழாவின் இரண்டாம் நாளான ஏப்ரல் 20, 2026 திங்கட்கிழமை, காலை 7 மணியளவில் தங்கச்சப்பரத்தில் எழுந்தருளிய இறைவன் நான்கு…
மதுரை நகரில் ஆண்டுதோறும் நடைபெறும் சித்திரை திருவிழாவின் முதல் நாள் நிகழ்வுகள் நேற்று (ஏப்ரல் 19, 2026, ஞாயிற்றுக்கிழமை) வெற்றிகரமாக…
மதுரையில் ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்ற கட்டட திறப்பு விழாவை முன்னிட்டு, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் வருகையால் நாளை நகரில்…
நேரலை கண்காணிப்பு · 19–29 ஏப்ரல் 2026 📍 இணையதளம் மூலம் கண்காணிக்க இங்கே கிளிக் செய்யவும் Track Meenakshi…
நேரலை கண்காணிப்பு · 29 ஏப்ரல் – 6 மே 2026 📍 இணையதளம் மூலம் கண்காணிக்க இங்கே கிளிக்…