நிகழ்வுகள்

பாலப்பணிகள் நிறைவடையும் வரை வாகன ஓட்டிகள் மாற்று வழி பயன்படுத்த அறிவுறுத்தல்

மதுரை கோரிப்பாளையம் பாலத்தில் நடைபெறும் கட்டுமான பணிகளின் காரணமாக, டிசம்பர் 15 இரவு முதல் பணிகள் முடியும் வரை வைகை தென் கரை சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக மாநகர போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது.

பேருந்துகளுக்கான மாற்று வழித்தடம்

மாட்டுத்தாவணியிலிருந்து வைகை தென் கரை சாலை வழியாக சிம்மக்கல் செல்லும் பேருந்துகள்,
கே.கே. நகர் ஆர்ச் – அவுட்போஸ்ட் – கோரிப்பாளையம் – ஏ.வி. பாலம் வழியாக இயக்கப்படும்.

மற்ற வாகனங்களுக்கான மாற்று வழித்தடங்கள்

ஓபுளா படித்துறை பாலம் சந்திப்பிலிருந்து யானைக்கல் தரைப்பாலம் வழியாக எம்.ஜி.ஆர் பாலம் செல்லும் வாகனங்கள்,

  • முனிச்சாலை மெயின் ரோடு – நெல்பேட்டை சிக்னல் சந்திப்பு வழியாக,
  • அல்லது வைகை வடகரை சாலை – தேனி ஆனந்தம் சந்திப்பு வழியாக செல்லலாம்.

எம்.ஜி.ஆர் பாலம் சந்திப்பிலிருந்து யானைக்கல் தரைப்பாலம் வழியாக ஓபுளா படித்துறை செல்லும் வாகனங்கள்,

  • வைகை வடகரை சாலை – தேனி ஆனந்தம் வழியாக,
  • அல்லது யானைக்கல் தரைப்பாலம் – நெல்பேட்டை வழியாக செல்லலாம்.

கட்டுமான பணிகள் தடையின்றி நடைபெறவும், போக்குவரத்து நெரிசலை தவிர்க்கவும் இந்த மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. வாகன ஓட்டிகள் மாற்று வழித்தடங்களை பயன்படுத்தி, போக்குவரத்து காவலர்களின் அறிவுறுத்தல்களை கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Thoonganagaram Admin

Recent Posts

மதுரை மீனாட்சி கோவிலில் நாளை முதல் சிறப்பு பூஜைகள்!

உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில் மகா கும்பாபிஷேக விழாவுக்கான பூர்வாங்க பூஜைகள் நாளை தொடங்கி செப்டம்பர் 11…

1 மணி நேரம் ago

இன்று மதுரையில் கிருஷ்ண ஜெயந்தி கோலாகலம்!

மதுரை திருப்பாலை பகுதியில் உள்ள இஸ்கான் ஸ்ரீ ஸ்ரீ கிருஷ்ண பலராமர் திருக்கோவிலில் இன்று, செப்டம்பர் 4, 2026 அன்று,…

1 நாள் ago

ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு தேதி வெளியானது

மதுரை, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள அரசு கள்ளர் பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், காப்பாளர்கள் மற்றும்…

3 நாட்கள் ago

கும்பாபிஷேக ஏற்பாடு செப்.11 முதல் மூலவர் தரிசனம் இல்லை!

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில், மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர், கோவில் நிர்வாகம்செப்டம்பர் 11 முதல் 16 வரை மூலவர் தரிசனம்…

4 நாட்கள் ago

செப்.3 காலை 9.30 மணிக்கு அலங்காநல்லூரில் ஆர்ப்பாட்டம்

ஜல்லிக்கட்டு குறித்து தவெக சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா சட்டப்பேரவையில் தெரிவித்த கருத்துகளைக் கண்டித்தும், தவெக அரசைக் கண்டித்தும் செப்டம்பர் 3-ஆம்…

5 நாட்கள் ago

சோலமலை பொறியியல் கல்லூரி (தன்னாட்சி), மதுரை

1995 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சோலமலை பொறியியல் கல்லூரி, தரமான தொழில்நுட்ப மற்றும் மேலாண்மைக் கல்வியை வழங்குவதுடன், மாணவர்களின் திறன்…

7 நாட்கள் ago