மதுரை மாவட்டத்தில் மாணவர்களின் கல்வி மற்றும் உடல்நலனுக்காக தமிழ்நாடு அரசு மேற்கொண்டுள்ள முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் மென்மேலும் விரிவடைந்து வருகிறது.
முதற்கட்டமாக 15.09.2022 அன்று துவங்கப்பட்ட இந்தத் திட்டம், முதலில் 1,545 அரசு தொடக்கப் பள்ளிகளில், 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் 1.14 லட்சம் மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் பணியை தொடங்கியது. மாணவர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற இந்தத் திட்டம், தொடர்ச்சியாக விரிவாக்கத்துடன் முன்னேறி வருகிறது.
🔸 25.08.2023: திருக்குவளையில் (முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த ஊர்) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் திட்டத்தை விரிவுபடுத்தி, 30,992 மாணவர்கள் பயனடைய ஏற்பாடு செய்தார்.
🔸 தற்போது 4-வது கட்ட morning breakfast திட்டத்தின் கீழ் மதுரை மாநகராட்சியில் உணவு தயாரிக்கும் சமையலறைகள் மற்றும் பள்ளிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. கே.ஜே. பிரவீன் குமார் நேரில் ஆய்வு செய்தார்.
📌 மதுரை மாநகராட்சியில்
✅ மொத்தம் 21,596 புதிய மாணவ, மாணவியர்கள் இனி காலை உணவுத் திட்டத்தில் பயனடைய உள்ளனர்.
🌟 மதுரை மாவட்டம் முழுவதும் 1,125 பள்ளிகள்
🌟 பயனடையும் மாணவர்கள்: 60,574 மாணவர்கள்
இந்தக் காலை உணவுத் திட்டம், மாணவர்களின் ஆரோக்கியத்தையும் கல்விப் பயணத்தையும் முன்னேற்றும் நோக்கத்தில் மிகச் சிறப்பாக செயல்படுகிறது. பசிக்காக அல்ல, படிக்கக்காக பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு இது ஒரு சிறந்த ஆதரவாகும்.
மதுரை மாவட்டம் — பள்ளி வாசலில் பசிக்கெதிரான ஒரு புதிய விடியலைப் பதிவு செய்கிறது!
மதுரை மாவட்டத்தில் உள்ள திருப்பரங்குன்றம், நாகமலை புதுக்கோட்டை, வாடிப்பட்டி, ஒத்தக்கடை மற்றும் திருமங்கலம் உள்ளிட்ட 5 சார் பதிவாளர் அலுவலகங்களில்…
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ள முல்லைப் பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நிலவும் கடுமையான வறட்சியால், தேனி, மதுரை,…
மதுரையில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 2026–27 கல்வியாண்டுக்கான டிப்ளமோ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தொடங்கப்பட்டுள்ளது. 1946-ஆம்…
மதுரை வில்லாபுரம் மலர் சந்தையின் பின்புறத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய (TNHB) குடியிருப்புகள் பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி…
மதுரை மாவட்டத்தில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகளை முன்னிட்டு நாளை (ஜூன் 3, 2026) பல்வேறு பகுதிகளில் திட்டமிட்ட மின்தடை…
கோடை விடுமுறை நிறைவடைந்து ஜூன் முதல் வாரத்தில் தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், சென்னை நோக்கி திரும்பும் பயணிகளின்…