மதுரை மாவட்டத்தில் மாணவர்களின் கல்வி மற்றும் உடல்நலனுக்காக தமிழ்நாடு அரசு மேற்கொண்டுள்ள முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் மென்மேலும் விரிவடைந்து வருகிறது.
முதற்கட்டமாக 15.09.2022 அன்று துவங்கப்பட்ட இந்தத் திட்டம், முதலில் 1,545 அரசு தொடக்கப் பள்ளிகளில், 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் 1.14 லட்சம் மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் பணியை தொடங்கியது. மாணவர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற இந்தத் திட்டம், தொடர்ச்சியாக விரிவாக்கத்துடன் முன்னேறி வருகிறது.
🔸 25.08.2023: திருக்குவளையில் (முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த ஊர்) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் திட்டத்தை விரிவுபடுத்தி, 30,992 மாணவர்கள் பயனடைய ஏற்பாடு செய்தார்.
🔸 தற்போது 4-வது கட்ட morning breakfast திட்டத்தின் கீழ் மதுரை மாநகராட்சியில் உணவு தயாரிக்கும் சமையலறைகள் மற்றும் பள்ளிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. கே.ஜே. பிரவீன் குமார் நேரில் ஆய்வு செய்தார்.
📌 மதுரை மாநகராட்சியில்
✅ மொத்தம் 21,596 புதிய மாணவ, மாணவியர்கள் இனி காலை உணவுத் திட்டத்தில் பயனடைய உள்ளனர்.
🌟 மதுரை மாவட்டம் முழுவதும் 1,125 பள்ளிகள்
🌟 பயனடையும் மாணவர்கள்: 60,574 மாணவர்கள்
இந்தக் காலை உணவுத் திட்டம், மாணவர்களின் ஆரோக்கியத்தையும் கல்விப் பயணத்தையும் முன்னேற்றும் நோக்கத்தில் மிகச் சிறப்பாக செயல்படுகிறது. பசிக்காக அல்ல, படிக்கக்காக பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு இது ஒரு சிறந்த ஆதரவாகும்.
மதுரை மாவட்டம் — பள்ளி வாசலில் பசிக்கெதிரான ஒரு புதிய விடியலைப் பதிவு செய்கிறது!
மதுரை சித்திரை திருவிழாவின் மூன்றாம் நாள் நிகழ்வுகள் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 21, 2026) கோலாகலமாக நடைபெற்றன. காலை மற்றும் இரவு…
சித்திரை திருவிழாவின் இரண்டாம் நாளான ஏப்ரல் 20, 2026 திங்கட்கிழமை, காலை 7 மணியளவில் தங்கச்சப்பரத்தில் எழுந்தருளிய இறைவன் நான்கு…
மதுரை நகரில் ஆண்டுதோறும் நடைபெறும் சித்திரை திருவிழாவின் முதல் நாள் நிகழ்வுகள் நேற்று (ஏப்ரல் 19, 2026, ஞாயிற்றுக்கிழமை) வெற்றிகரமாக…
மதுரையில் ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்ற கட்டட திறப்பு விழாவை முன்னிட்டு, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் வருகையால் நாளை நகரில்…
நேரலை கண்காணிப்பு · 19–29 ஏப்ரல் 2026 📍 இணையதளம் மூலம் கண்காணிக்க இங்கே கிளிக் செய்யவும் Track Meenakshi…
நேரலை கண்காணிப்பு · 29 ஏப்ரல் – 6 மே 2026 📍 இணையதளம் மூலம் கண்காணிக்க இங்கே கிளிக்…