மதுரை மாவட்டத்தில் மாணவர்களின் கல்வி மற்றும் உடல்நலனுக்காக தமிழ்நாடு அரசு மேற்கொண்டுள்ள முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் மென்மேலும் விரிவடைந்து வருகிறது.
முதற்கட்டமாக 15.09.2022 அன்று துவங்கப்பட்ட இந்தத் திட்டம், முதலில் 1,545 அரசு தொடக்கப் பள்ளிகளில், 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் 1.14 லட்சம் மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் பணியை தொடங்கியது. மாணவர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற இந்தத் திட்டம், தொடர்ச்சியாக விரிவாக்கத்துடன் முன்னேறி வருகிறது.
🔸 25.08.2023: திருக்குவளையில் (முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த ஊர்) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் திட்டத்தை விரிவுபடுத்தி, 30,992 மாணவர்கள் பயனடைய ஏற்பாடு செய்தார்.
🔸 தற்போது 4-வது கட்ட morning breakfast திட்டத்தின் கீழ் மதுரை மாநகராட்சியில் உணவு தயாரிக்கும் சமையலறைகள் மற்றும் பள்ளிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. கே.ஜே. பிரவீன் குமார் நேரில் ஆய்வு செய்தார்.
📌 மதுரை மாநகராட்சியில்
✅ மொத்தம் 21,596 புதிய மாணவ, மாணவியர்கள் இனி காலை உணவுத் திட்டத்தில் பயனடைய உள்ளனர்.
🌟 மதுரை மாவட்டம் முழுவதும் 1,125 பள்ளிகள்
🌟 பயனடையும் மாணவர்கள்: 60,574 மாணவர்கள்
இந்தக் காலை உணவுத் திட்டம், மாணவர்களின் ஆரோக்கியத்தையும் கல்விப் பயணத்தையும் முன்னேற்றும் நோக்கத்தில் மிகச் சிறப்பாக செயல்படுகிறது. பசிக்காக அல்ல, படிக்கக்காக பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு இது ஒரு சிறந்த ஆதரவாகும்.
மதுரை மாவட்டம் — பள்ளி வாசலில் பசிக்கெதிரான ஒரு புதிய விடியலைப் பதிவு செய்கிறது!
மதுரை மாவட்டத்தில் உள்ள அருள்மிகு ஶ்ரீ கள்ளழகர் சுந்தர்ராஜ பெருமாள் திருக்கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் ஆடித் திருவிழா, இன்று (ஜூலை…
மதுரை மாவட்டம் பேரையூர் வட்டத்திற்குட்பட்ட பாப்பி நாயக்கன்பட்டி–சங்கரலிங்கபுரம் பகுதியில் உள்ள சல்லுப்பன் கரடு அடிவாரத்தில் சுமார் 2,000 ஆண்டுகள் பழமையானதாகக்…
மதுரை மாவட்ட விவசாயிகளின் கோரிக்கைகள் மற்றும் விவசாயம் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில், மாவட்ட நிர்வாகம் நடத்தும் மாதாந்திர…
மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மின் பாதை பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளும் நோக்கில் நாளை (ஜூலை 18) திட்டமிட்ட மின்தடை…
தமிழகத்தின் சேலம் மற்றும் மதுரை ரயில்வே கோட்டங்களுக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் தண்டவாள பராமரிப்பு மற்றும் பொறியியல் பணிகள் மேற்கொள்ளப்பட…
மதுரை மாவட்டத்தில் உள்ள அருள்மிகு ஶ்ரீ கள்ளழகர் சுந்தர்ராஜ பெருமாள் திருக்கோவிலில் நடைபெறும் ஆண்டு தோறும் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஆடித்…