மதுரை மாவட்டத்தில் நாளை மின்தடை – உங்கள் பகுதி பட்டியலில் உள்ளதா?

power_cut.jpg

மதுரை மாவட்டத்தில் நாளை (சனிக்கிழமை, ஆகஸ்ட் 2) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை 8 மணி நேரம் மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகளை மின்வாரியம் அறிவித்துள்ளது.

பொதுமக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கும் நோக்கில் ஒவ்வொரு மாதமும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதன் ஒரு பகுதியாக, கோ. புதூர் துணை மின் நிலையத்தில் நாளை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், அந்த நிலையத்தின் கீழ் உள்ள பகுதிகளில் மின்தடை அமல்படுத்தப்படுகிறது.

மின்தடை செய்யப்படும் பகுதிகள்:

  • பாரதி உலா ரோடு
  • ஜவஹர் ரோடு
  • பெசன்ட் ரோடு
  • அண்ணா நகர்
  • சொக்கிகுளம்
  • வல்லபாய் ரோடு
  • புல்லபாய் தேசாய் ரோடு
  • ரேஸ் கோர்ஸ் ரோடு
  • கோகலே ரோட்டின் ஒரு பகுதி
  • ராமமூர்த்தி ரோடு
  • லஜபதிராய் ரோடு
  • சப்பாணி கோவில் தெரு
  • பழைய அக்ரஹாரம் தெரு
  • எல்.டி.சி. ரோட்டின் ஒரு பகுதி
  • தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம்
  • வருங்கால வைப்பு நிதி குடியிருப்பு
  • ஏ.ஐ.ஆர். குடியிருப்பு
  • நியூ டி.ஆர்.ஓ. காலனி
  • சிவசக்தி நகர், பாத்திமா நகர்
  • புதூர் வண்டிப்பாதை மெயின் ரோடு
  • கஸ்டம்ஸ் காலனி
  • நியூ நத்தம் ரோடு
  • ஈ.பி. குவார்ட்ஸ் முதல் கண்ணா ஆஸ்பத்திரி வரை
  • ரிசர்வ் லைன் குடியிருப்பு
  • ரேஸ்கோர்ஸ் காலனியின் ஒரு பகுதி
  • கலெக்டர் பங்களா, ஜவஹர்புரம்
  • திருவள்ளுவர் நகர்
  • அழகர்கோவில் ரோடு
  • ஐ.டி.ஐ. பஸ் நிறுத்தம் – தல்லாகுளம் பெருமாள் கோவில் வரை
  • டீன் குவார்ட்ஸ்
  • காமராஜர் நகர் 1 முதல் 4 வரை
  • ஹச்சகாண் ரோடு
  • கமலா 1, 2 தெரு
  • சித்தரஞ்சன் வீதி, வெங்கட்ராமன் வீதி
  • சரோஜினி தெரு
  • லட்சுமி சுந்தரம் மகால்
  • பொதுப்பணித்துறை அலுவலகம்
  • கண்மாய் மேலத்தெரு
  • தல்லாகுளம் மூக்கபிள்ளை தெரு
  • ஆத்திகுளம், குறிஞ்சி நகர்
  • கனகவேல் நகர், பழனிச்சாமி நகர்
  • மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்

⏰ மின்தடை நேரம்: காலை 9.00 மணி – மாலை 5.00 மணி