பிரதமர் நாளை மாலை மதுரையில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நடைபெறும் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்க இருப்பதை முன்னிட்டு, நகரம் முழுவதும் விரிவான பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. காலை 6 மணி முதல் இரவு வரை பல முக்கிய சாலைகளில் வாகன இயக்கம் தடைசெய்யப்பட்டுள்ளதுடன், கனரக மற்றும் பொதுப் போக்குவரத்திற்கான மாற்று வழித்தடங்களும் வகுக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு ஏற்பாடுகள் காரணமாக விமான நிலையம் தொடங்கி கூட்டம் நடைபெறும் பகுதி வரை முழுமையான கண்காணிப்பு அமல்படுத்தப்படுகிறது.
பாதிக்கப்படும் பகுதிகள் மற்றும் மாற்று வழித்தடங்கள்:
அருப்புக்கோட்டை ரிங் ரோடு சந்திப்பு முதல் விரகனூர் ரவுண்டானா வரை, மதுரை விமான நிலையம்–பெருங்குடி சந்திப்பு முதல் அவனியாபுரம் பைபாஸ் மற்றும் திருப்பரங்குன்றம் சாலை வரை, கப்பலூர் பாலம் சந்திப்பு, நாகமலைபுதுக்கோட்டை, சமயநல்லூர், தனிச்சியம் பிரிவு, மேலூர், அலங்காநல்லூர், சத்திரப்பட்டி, அழகர்கோவில், பூவந்தி, திருப்புவனம் உள்ளிட்ட பகுதிகள்.
கனரக சரக்கு வாகனங்கள் காலை 6 மணி முதல் அருப்புக்கோட்டை ரிங் ரோடு மற்றும் கப்பலூர் பாலம் வழியாக செல்ல தடை; தென் மாவட்டங்களுக்கு செல்லும் வாகனங்கள் அழகர்கோவில்–அலங்காநல்லூர்–சமயநல்லூர் வழியாக மாற்று இயக்கம்; கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர் நோக்கி செல்லும் வாகனங்களுக்கு திருமங்கலம்–நாகமலைபுதுக்கோட்டை வழித்தடம்.
திருச்சி, சென்னை நோக்கி செல்லும் சரக்கு வாகனங்களுக்கு மேலூர்–அழகர்கோவில்–சத்திரப்பட்டி மாற்று சாலை; சிவகங்கை, ராமநாதபுரம் பகுதிகளுக்கு பூவந்தி–திருப்புவனம் வழித்தடம்; தேனி, திண்டுக்கல் மாவட்ட வாகனங்களுக்கு தனிச்சியம் பிரிவு–அலங்காநல்லூர் வழியாக இயக்கம்.
மாட்டுத்தாவணி மற்றும் பெரியார் பஸ் ஸ்டாண்ட் பகுதிகளில் இருந்து செல்லும் அரசு, தனியார் பேருந்துகள் கே.கே.நகர், ஆவின் சந்திப்பு, கபடி ரவுண்டானா, பாத்திமா கல்லூரி, சமயநல்லூர் வழியாக மாற்று பாதை; கூட்டத்திற்கு வரும் வாகனங்கள் ஒத்தக்கடை ரிங்ரோடு, சிவகங்கை ரோடு, மண்டேலாநகர் வழியாக அமிக்கா ஓட்டல் அருகே நிறுத்தம்.
பாதுகாப்பு காரணங்களால் அறிவிக்கப்பட்டுள்ள இந்த மாற்றங்களை பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டும் என நகர காவல்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில் மகா கும்பாபிஷேக விழாவுக்கான பூர்வாங்க பூஜைகள் நாளை தொடங்கி செப்டம்பர் 11…
மதுரை திருப்பாலை பகுதியில் உள்ள இஸ்கான் ஸ்ரீ ஸ்ரீ கிருஷ்ண பலராமர் திருக்கோவிலில் இன்று, செப்டம்பர் 4, 2026 அன்று,…
மதுரை, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள அரசு கள்ளர் பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், காப்பாளர்கள் மற்றும்…
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில், மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர், கோவில் நிர்வாகம்செப்டம்பர் 11 முதல் 16 வரை மூலவர் தரிசனம்…
ஜல்லிக்கட்டு குறித்து தவெக சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா சட்டப்பேரவையில் தெரிவித்த கருத்துகளைக் கண்டித்தும், தவெக அரசைக் கண்டித்தும் செப்டம்பர் 3-ஆம்…
1995 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சோலமலை பொறியியல் கல்லூரி, தரமான தொழில்நுட்ப மற்றும் மேலாண்மைக் கல்வியை வழங்குவதுடன், மாணவர்களின் திறன்…