மதுரை மாவட்டம் மேலூர் அரசு கல்லூரி மாணவிகளுக்கான சமூகநீதி விடுதியில் தட்டச்சுப் பயிற்சிக்கு கிடைக்கும் வெற்றியை அடிப்படையாகக் கொண்டு, மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லூரி மாணவிகள் விடுதிகளுக்கும் இந்தத் திட்டம் விரிவுபடுத்தப்படும் என்று மதுரை மாவட்ட ஆட்சியர் கே. ஜே. பிரவீன்குமார் தெரிவித்தார்.
மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்தில் உள்ள அரசு கல்லூரி மாணவிகளுக்கான சமூகநீதி விடுதியில், புதன்கிழமை நடைபெற்ற நிகழ்வில், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் சார்பில் தட்டச்சுப் பயிற்சி வகுப்பு தொடங்கி வைக்கப்பட்டது.
அப்போது பேசிய ஆட்சியர் பிரவீன்குமார் கூறியதாவது:
“மாணவிகள் கடந்த வாரம் விடுத்த கோரிக்கையை ஏற்று, இந்த விடுதியில் தமிழ் மற்றும் ஆங்கில தட்டச்சுப் பயிற்சி பெற தேவையான நடவடிக்கைகள் விரைந்து மேற்கொள்ளப்பட்டன. கல்லூரியில் இருக்கும் காலத்திலேயே தட்டச்சுப் பயிற்சி பெறுவது சிறப்பானது.
தங்கியிருக்கும் இடத்திலேயே இந்தப் பயிற்சி கிடைப்பது அனைவருக்கும் சாதாரண வாய்ப்பு அல்ல. எனவே, இந்த வாய்ப்பை மாணவிகள் சிறப்பாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்,” என்றார்.
மேலும் அவர் தெரிவித்தது:
“மேலூர் விடுதியில் கிடைக்கும் வெற்றியை அடிப்படையாகக் கொண்டு, மாவட்டத்தில் உள்ள அனைத்து சமூகநீதி பெண்கள் விடுதிகளிலும் தட்டச்சுப் பயிற்சி வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.”
இந்த நிகழ்வில்,
மதுரை சித்திரை திருவிழாவின் மூன்றாம் நாள் நிகழ்வுகள் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 21, 2026) கோலாகலமாக நடைபெற்றன. காலை மற்றும் இரவு…
சித்திரை திருவிழாவின் இரண்டாம் நாளான ஏப்ரல் 20, 2026 திங்கட்கிழமை, காலை 7 மணியளவில் தங்கச்சப்பரத்தில் எழுந்தருளிய இறைவன் நான்கு…
மதுரை நகரில் ஆண்டுதோறும் நடைபெறும் சித்திரை திருவிழாவின் முதல் நாள் நிகழ்வுகள் நேற்று (ஏப்ரல் 19, 2026, ஞாயிற்றுக்கிழமை) வெற்றிகரமாக…
மதுரையில் ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்ற கட்டட திறப்பு விழாவை முன்னிட்டு, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் வருகையால் நாளை நகரில்…
நேரலை கண்காணிப்பு · 19–29 ஏப்ரல் 2026 📍 இணையதளம் மூலம் கண்காணிக்க இங்கே கிளிக் செய்யவும் Track Meenakshi…
நேரலை கண்காணிப்பு · 29 ஏப்ரல் – 6 மே 2026 📍 இணையதளம் மூலம் கண்காணிக்க இங்கே கிளிக்…