மதுரை மாவட்டம் மேலூர் அரசு கல்லூரி மாணவிகளுக்கான சமூகநீதி விடுதியில் தட்டச்சுப் பயிற்சிக்கு கிடைக்கும் வெற்றியை அடிப்படையாகக் கொண்டு, மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லூரி மாணவிகள் விடுதிகளுக்கும் இந்தத் திட்டம் விரிவுபடுத்தப்படும் என்று மதுரை மாவட்ட ஆட்சியர் கே. ஜே. பிரவீன்குமார் தெரிவித்தார்.
மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்தில் உள்ள அரசு கல்லூரி மாணவிகளுக்கான சமூகநீதி விடுதியில், புதன்கிழமை நடைபெற்ற நிகழ்வில், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் சார்பில் தட்டச்சுப் பயிற்சி வகுப்பு தொடங்கி வைக்கப்பட்டது.
அப்போது பேசிய ஆட்சியர் பிரவீன்குமார் கூறியதாவது:
“மாணவிகள் கடந்த வாரம் விடுத்த கோரிக்கையை ஏற்று, இந்த விடுதியில் தமிழ் மற்றும் ஆங்கில தட்டச்சுப் பயிற்சி பெற தேவையான நடவடிக்கைகள் விரைந்து மேற்கொள்ளப்பட்டன. கல்லூரியில் இருக்கும் காலத்திலேயே தட்டச்சுப் பயிற்சி பெறுவது சிறப்பானது.
தங்கியிருக்கும் இடத்திலேயே இந்தப் பயிற்சி கிடைப்பது அனைவருக்கும் சாதாரண வாய்ப்பு அல்ல. எனவே, இந்த வாய்ப்பை மாணவிகள் சிறப்பாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்,” என்றார்.
மேலும் அவர் தெரிவித்தது:
“மேலூர் விடுதியில் கிடைக்கும் வெற்றியை அடிப்படையாகக் கொண்டு, மாவட்டத்தில் உள்ள அனைத்து சமூகநீதி பெண்கள் விடுதிகளிலும் தட்டச்சுப் பயிற்சி வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.”
இந்த நிகழ்வில்,
உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில் மகா கும்பாபிஷேக விழாவுக்கான பூர்வாங்க பூஜைகள் நாளை தொடங்கி செப்டம்பர் 11…
மதுரை திருப்பாலை பகுதியில் உள்ள இஸ்கான் ஸ்ரீ ஸ்ரீ கிருஷ்ண பலராமர் திருக்கோவிலில் இன்று, செப்டம்பர் 4, 2026 அன்று,…
மதுரை, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள அரசு கள்ளர் பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், காப்பாளர்கள் மற்றும்…
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில், மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர், கோவில் நிர்வாகம்செப்டம்பர் 11 முதல் 16 வரை மூலவர் தரிசனம்…
ஜல்லிக்கட்டு குறித்து தவெக சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா சட்டப்பேரவையில் தெரிவித்த கருத்துகளைக் கண்டித்தும், தவெக அரசைக் கண்டித்தும் செப்டம்பர் 3-ஆம்…
1995 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சோலமலை பொறியியல் கல்லூரி, தரமான தொழில்நுட்ப மற்றும் மேலாண்மைக் கல்வியை வழங்குவதுடன், மாணவர்களின் திறன்…