மதுரை மாவட்டம் மேலூர் அரசு கல்லூரி மாணவிகளுக்கான சமூகநீதி விடுதியில் தட்டச்சுப் பயிற்சிக்கு கிடைக்கும் வெற்றியை அடிப்படையாகக் கொண்டு, மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லூரி மாணவிகள் விடுதிகளுக்கும் இந்தத் திட்டம் விரிவுபடுத்தப்படும் என்று மதுரை மாவட்ட ஆட்சியர் கே. ஜே. பிரவீன்குமார் தெரிவித்தார்.
மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்தில் உள்ள அரசு கல்லூரி மாணவிகளுக்கான சமூகநீதி விடுதியில், புதன்கிழமை நடைபெற்ற நிகழ்வில், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் சார்பில் தட்டச்சுப் பயிற்சி வகுப்பு தொடங்கி வைக்கப்பட்டது.
அப்போது பேசிய ஆட்சியர் பிரவீன்குமார் கூறியதாவது:
“மாணவிகள் கடந்த வாரம் விடுத்த கோரிக்கையை ஏற்று, இந்த விடுதியில் தமிழ் மற்றும் ஆங்கில தட்டச்சுப் பயிற்சி பெற தேவையான நடவடிக்கைகள் விரைந்து மேற்கொள்ளப்பட்டன. கல்லூரியில் இருக்கும் காலத்திலேயே தட்டச்சுப் பயிற்சி பெறுவது சிறப்பானது.
தங்கியிருக்கும் இடத்திலேயே இந்தப் பயிற்சி கிடைப்பது அனைவருக்கும் சாதாரண வாய்ப்பு அல்ல. எனவே, இந்த வாய்ப்பை மாணவிகள் சிறப்பாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்,” என்றார்.
மேலும் அவர் தெரிவித்தது:
“மேலூர் விடுதியில் கிடைக்கும் வெற்றியை அடிப்படையாகக் கொண்டு, மாவட்டத்தில் உள்ள அனைத்து சமூகநீதி பெண்கள் விடுதிகளிலும் தட்டச்சுப் பயிற்சி வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.”
இந்த நிகழ்வில்,
மதுரை மாவட்டத்தில் உள்ள அருள்மிகு ஶ்ரீ கள்ளழகர் சுந்தர்ராஜ பெருமாள் திருக்கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் ஆடித் திருவிழா, இன்று (ஜூலை…
மதுரை மாவட்டம் பேரையூர் வட்டத்திற்குட்பட்ட பாப்பி நாயக்கன்பட்டி–சங்கரலிங்கபுரம் பகுதியில் உள்ள சல்லுப்பன் கரடு அடிவாரத்தில் சுமார் 2,000 ஆண்டுகள் பழமையானதாகக்…
மதுரை மாவட்ட விவசாயிகளின் கோரிக்கைகள் மற்றும் விவசாயம் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில், மாவட்ட நிர்வாகம் நடத்தும் மாதாந்திர…
மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மின் பாதை பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளும் நோக்கில் நாளை (ஜூலை 18) திட்டமிட்ட மின்தடை…
தமிழகத்தின் சேலம் மற்றும் மதுரை ரயில்வே கோட்டங்களுக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் தண்டவாள பராமரிப்பு மற்றும் பொறியியல் பணிகள் மேற்கொள்ளப்பட…
மதுரை மாவட்டத்தில் உள்ள அருள்மிகு ஶ்ரீ கள்ளழகர் சுந்தர்ராஜ பெருமாள் திருக்கோவிலில் நடைபெறும் ஆண்டு தோறும் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஆடித்…