திருநெல்வேலி–சென்னை தாம்பரம் இடையே சிறப்பு ரயில் சேவை

madurai_special_trains.jpg

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறை கால பயண நெரிசலை சமாளிக்கும் வகையில், தெற்கு ரயில்வே சார்பில் திருநெல்வேலி – சென்னை தாம்பரம் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி → தாம்பரம் சிறப்பு ரயில் (06166)

இந்த சிறப்பு ரயில், டிசம்பர் 28 மற்றும் ஜனவரி 4 ஆகிய ஞாயிற்றுக்கிழமைகளில்,
திருநெல்வேலியில் இருந்து இரவு 11.30 மணிக்கு புறப்பட்டு,
மறுநாள் காலை 10.55 மணிக்கு தாம்பரம் சென்றடையும்.

இந்த ரயில் விருதுநகர், மதுரை, திண்டுக்கல் வழியாகச் செல்லும்.

தாம்பரம் → திருநெல்வேலி சிறப்பு ரயில் (06165)

மறுமார்க்கமாக, இந்த சிறப்பு ரயில் டிசம்பர் 29 மற்றும் ஜனவரி 5 ஆகிய திங்கட்கிழமைகளில்,
தாம்பரத்தில் இருந்து மாலை 3.30 மணிக்கு புறப்பட்டு,
மறுநாள் அதிகாலை 4.00 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும்.

இந்த ரயில் திண்டுக்கல், மதுரை, விருதுநகர் வழியாக இயக்கப்படும்.

விடுமுறை காலத்தில் தென் தமிழக பகுதிகளுக்கு செல்லும் பயணிகளுக்கு இந்த சிறப்பு ரயில் சேவை பெரும் உதவியாக இருக்கும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.