சமீபத்திய

பாரம்பரியமும் பக்தியும் சங்கமிக்கும் தெப்பத் திருவிழா தயாரிப்புப் பணிகள் முழுவீச்சு

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் நடைபெற்று வரும் தெப்பத் திருவிழாவையொட்டி, தெப்பக் குளத்தில் மிதவைத் தெப்பம் அமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலின் தெப்பத் திருவிழா கடந்த 21-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி, தினமும் காலை மற்றும் இரவு நேரங்களில் பிரியாவிடையுடன் சுந்தரேசுவரரும், மீனாட்சி அம்மனும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா வரும் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

விழாவின் 7-ஆம் திருநாளான செவ்வாய்க்கிழமை, யாளி வாகனத்தில் மீனாட்சி அம்மனும், நந்திகேசுவரர் வாகனத்தில் பிரியாவிடையுடன் சுந்தரேசுவரரும் எழுந்தருளி வீதியுலா வந்தனர்.

தெப்பத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, சுவாமி மற்றும் அம்மன் தெப்பத்தில் வலம் வரும் தெப்போத்ஸவம் வருகிற ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 1) நடைபெறவுள்ளது. இதையொட்டி, தெப்பக் குளத்தில் மிதவைத் தெப்பம் அமைக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

சுமார் 300-க்கும் மேற்பட்ட தகர உருளைகள் மற்றும் நூற்றுக்கணக்கான கம்புகளைப் பயன்படுத்தி மிதவைத் தெப்பம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்தப் பணிகளில் சுமார் 30-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

மிதவைத் தெப்பம் அமைக்கும் பணிகள் நிறைவடைந்த பின்னர், அலங்காரத் தட்டிகள் பொருத்துதல், மின்விளக்கு அலங்காரங்கள் மேற்கொள்ளுதல் உள்ளிட்ட பணிகள் நடைபெற உள்ளன. வருகிற இரண்டு நாட்களில் மிதவைத் தெப்பம் அமைக்கும் பணி நிறைவடையும் என்றும், அதன் பின்னர் அலங்காரப் பணிகள் தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Thoonganagaram Admin

Recent Posts

கொடியேற்றத்துடன் தொடங்கிய கள்ளழகர் ஆடித் திருவிழா

மதுரை மாவட்டத்தில் உள்ள அருள்மிகு ஶ்ரீ கள்ளழகர் சுந்தர்ராஜ பெருமாள் திருக்கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் ஆடித் திருவிழா, இன்று (ஜூலை…

18 மணி நேரங்கள் ago

மதுரையில் 2,000 ஆண்டு தாழிப்பானை கண்டுபிடிப்பு

மதுரை மாவட்டம் பேரையூர் வட்டத்திற்குட்பட்ட பாப்பி நாயக்கன்பட்டி–சங்கரலிங்கபுரம் பகுதியில் உள்ள சல்லுப்பன் கரடு அடிவாரத்தில் சுமார் 2,000 ஆண்டுகள் பழமையானதாகக்…

2 நாட்கள் ago

மதுரையில் ஜூலை 24 விவசாயிகள் குறைதீர் கூட்டம்

மதுரை மாவட்ட விவசாயிகளின் கோரிக்கைகள் மற்றும் விவசாயம் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில், மாவட்ட நிர்வாகம் நடத்தும் மாதாந்திர…

4 நாட்கள் ago

மதுரையில் நாளை திட்டமிட்ட மின்தடை

மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மின் பாதை பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளும் நோக்கில் நாளை (ஜூலை 18) திட்டமிட்ட மின்தடை…

5 நாட்கள் ago

திண்டுக்கல் வழித்தடம் தவிர்த்து ரயில்கள் இயக்கம்

தமிழகத்தின் சேலம் மற்றும் மதுரை ரயில்வே கோட்டங்களுக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் தண்டவாள பராமரிப்பு மற்றும் பொறியியல் பணிகள் மேற்கொள்ளப்பட…

6 நாட்கள் ago

அழகர் கோவிலில் ஆடித் திருவிழா ஜூலை 21ல் தொடக்கம்

மதுரை மாவட்டத்தில் உள்ள அருள்மிகு ஶ்ரீ கள்ளழகர் சுந்தர்ராஜ பெருமாள் திருக்கோவிலில் நடைபெறும் ஆண்டு தோறும் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஆடித்…

7 நாட்கள் ago