தைப்பூசம் விழா மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு, பயணிகள் நெரிசலை சமாளிக்கும் வகையில் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் மொத்தம் 1,005 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.
இதுகுறித்து, அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் மேலாண் இயக்குநர் மோகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜனவரி 30 (வெள்ளி), 31 (சனி) மற்றும் பிப்ரவரி 1 (ஞாயிறு) ஆகிய நாட்களில் தைப்பூசம் மற்றும் வார விடுமுறையையொட்டி, சென்னை மற்றும் பிற முக்கிய நகரங்களில் இருந்து தமிழகம் முழுவதும் அதிகளவில் பயணிகள் பயணம் மேற்கொள்ள வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை கருத்தில் கொண்டு, வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
பெங்களூரு, திருப்பூர், ஈரோடு, கோயம்புத்தூர் உள்ளிட்ட இடங்களில் இருந்து தமிழ்நாட்டின் பல பகுதிகளுக்கு 200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.
ஞாயிற்றுக்கிழமை பயணிகள் சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக, தேவைக்கேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.
தைப்பூசம் விழாவையொட்டி, மதுரை சந்திப்பு – பழனி இடையே முன்பதிவு செய்யப்படாத விரைவு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
ரயில் எண் 06145
ரயில் எண் 06146
இந்த ரயில்கள் சோழவந்தான், கொடைக்கானல் சாலை, அம்பதுரை, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் ஆகிய நிலையங்களில் நின்று செல்லும்.
மதுரை மாவட்டத்தில் உள்ள திருப்பரங்குன்றம், நாகமலை புதுக்கோட்டை, வாடிப்பட்டி, ஒத்தக்கடை மற்றும் திருமங்கலம் உள்ளிட்ட 5 சார் பதிவாளர் அலுவலகங்களில்…
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ள முல்லைப் பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நிலவும் கடுமையான வறட்சியால், தேனி, மதுரை,…
மதுரையில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 2026–27 கல்வியாண்டுக்கான டிப்ளமோ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தொடங்கப்பட்டுள்ளது. 1946-ஆம்…
மதுரை வில்லாபுரம் மலர் சந்தையின் பின்புறத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய (TNHB) குடியிருப்புகள் பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி…
மதுரை மாவட்டத்தில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகளை முன்னிட்டு நாளை (ஜூன் 3, 2026) பல்வேறு பகுதிகளில் திட்டமிட்ட மின்தடை…
கோடை விடுமுறை நிறைவடைந்து ஜூன் முதல் வாரத்தில் தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், சென்னை நோக்கி திரும்பும் பயணிகளின்…