தைப்பூசம் விழா மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு, பயணிகள் நெரிசலை சமாளிக்கும் வகையில் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் மொத்தம் 1,005 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.
இதுகுறித்து, அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் மேலாண் இயக்குநர் மோகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜனவரி 30 (வெள்ளி), 31 (சனி) மற்றும் பிப்ரவரி 1 (ஞாயிறு) ஆகிய நாட்களில் தைப்பூசம் மற்றும் வார விடுமுறையையொட்டி, சென்னை மற்றும் பிற முக்கிய நகரங்களில் இருந்து தமிழகம் முழுவதும் அதிகளவில் பயணிகள் பயணம் மேற்கொள்ள வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை கருத்தில் கொண்டு, வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
பெங்களூரு, திருப்பூர், ஈரோடு, கோயம்புத்தூர் உள்ளிட்ட இடங்களில் இருந்து தமிழ்நாட்டின் பல பகுதிகளுக்கு 200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.
ஞாயிற்றுக்கிழமை பயணிகள் சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக, தேவைக்கேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.
தைப்பூசம் விழாவையொட்டி, மதுரை சந்திப்பு – பழனி இடையே முன்பதிவு செய்யப்படாத விரைவு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
ரயில் எண் 06145
ரயில் எண் 06146
இந்த ரயில்கள் சோழவந்தான், கொடைக்கானல் சாலை, அம்பதுரை, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் ஆகிய நிலையங்களில் நின்று செல்லும்.
உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில் மகா கும்பாபிஷேக விழாவுக்கான பூர்வாங்க பூஜைகள் நாளை தொடங்கி செப்டம்பர் 11…
மதுரை திருப்பாலை பகுதியில் உள்ள இஸ்கான் ஸ்ரீ ஸ்ரீ கிருஷ்ண பலராமர் திருக்கோவிலில் இன்று, செப்டம்பர் 4, 2026 அன்று,…
மதுரை, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள அரசு கள்ளர் பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், காப்பாளர்கள் மற்றும்…
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில், மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர், கோவில் நிர்வாகம்செப்டம்பர் 11 முதல் 16 வரை மூலவர் தரிசனம்…
ஜல்லிக்கட்டு குறித்து தவெக சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா சட்டப்பேரவையில் தெரிவித்த கருத்துகளைக் கண்டித்தும், தவெக அரசைக் கண்டித்தும் செப்டம்பர் 3-ஆம்…
1995 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சோலமலை பொறியியல் கல்லூரி, தரமான தொழில்நுட்ப மற்றும் மேலாண்மைக் கல்வியை வழங்குவதுடன், மாணவர்களின் திறன்…