மதுரை அருகே கீழடியில் நடைபெற்ற தொல்லியல் அகழ்வாய்வில் தமிழர்களின் பண்பாட்டுத் தொன்மையை வெளிக்கொணரும் முக்கியமான ஆதாரங்கள் வெளியாகின. இந்த ஆய்வின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட அறிக்கை மத்திய தொல்லியல்துறைக்கு சமர்ப்பிக்கப்பட்டது. ஆனால், அந்த அறிக்கையை ஒன்றிய தொல்லியல்துறை ஏற்காமல் திருப்பி அனுப்பியுள்ளது.
இதை எதிர்த்து திமுக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மத்திய அரசின் இந்த அணுகுமுறை, தமிழர்களின் தொன்மையும் பெருமையும் அங்கீகரிக்க அவர்களுக்கு மனம் இல்லை என்பதை காட்டுகிறது என திமுக செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்தார். “இந்தியாவின் பழங்கால வரலாற்றை உணர்த்தும் இந்த அறிக்கையை ஏற்காதது, அரசியல் நோக்கத்துடன் நிறைந்தது,” என்றும் அவர் கூறினார்.
மதுரை மக்களவை உறுப்பினரும் எழுத்தாளருமான சு. வெங்கடேசன், “தமிழர் வரலாற்றுக்கும் கீழடி உண்மைக்கும் எதிரியாக பாஜக செயல்படுகிறது,” எனக் குற்றம்சாட்டினார்.
இதை மறுத்து பதிலளித்த பாஜக தமிழிசை சௌந்தர்ராஜன், “கீழடியில் அகழ்வாய்விற்கு நிதி ஒதுக்கியதும், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேரில் சென்று பார்வையிட்டதும் மத்திய அரசே. சு.வெங்கடேசன் இதனை அரசியல் கருவியாக பயன்படுத்தக்கூடாது,” என தெரிவித்தார்.
இந்த விவகாரம், தமிழர் பண்பாட்டு அடையாளங்களை ஏற்றுக்கொள்ளும் தயார்பாட்டில் மத்திய அரசு எவ்வளவு உண்மையாக இருக்கிறது என்பதைக் கேள்விக்குள்ளாக்கியுள்ளது.
உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில் மகா கும்பாபிஷேக விழாவுக்கான பூர்வாங்க பூஜைகள் நாளை தொடங்கி செப்டம்பர் 11…
மதுரை திருப்பாலை பகுதியில் உள்ள இஸ்கான் ஸ்ரீ ஸ்ரீ கிருஷ்ண பலராமர் திருக்கோவிலில் இன்று, செப்டம்பர் 4, 2026 அன்று,…
மதுரை, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள அரசு கள்ளர் பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், காப்பாளர்கள் மற்றும்…
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில், மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர், கோவில் நிர்வாகம்செப்டம்பர் 11 முதல் 16 வரை மூலவர் தரிசனம்…
ஜல்லிக்கட்டு குறித்து தவெக சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா சட்டப்பேரவையில் தெரிவித்த கருத்துகளைக் கண்டித்தும், தவெக அரசைக் கண்டித்தும் செப்டம்பர் 3-ஆம்…
1995 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சோலமலை பொறியியல் கல்லூரி, தரமான தொழில்நுட்ப மற்றும் மேலாண்மைக் கல்வியை வழங்குவதுடன், மாணவர்களின் திறன்…