தமிழகம் – கேரளா மாநிலங்களை இணைக்கும் முக்கிய நெடுஞ்சாலைத் திட்டமான மதுரை-கொல்லம் நான்கு வழிச்சாலை பணிகளில், முதல் கட்டமாக திருமங்கலம் முதல் வடுகப்பட்டி வரை அமைக்கப்பட்டுள்ள சாலைப்பணி வரும் டிசம்பர் 25-ம் தேதி திறக்கப்படவுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி இதனை மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்க உள்ளார் என தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
கிட்டத்தட்ட ரூ.541 கோடி மதிப்பீட்டில், 36 கிலோமீட்டர் தூரம் கொண்ட சாலைத் திட்டம் கடந்த 2023 பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டது. இதுவரை 92 சதவீதம் பணி நிறைவு பெற்ற நிலையில், மீதமுள்ள பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இத்திட்டத்தின் கீழ், ஏற்கெனவே இருந்த சாலையை நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்ததுடன், வளைவான பகுதிகள் நேர்த்தியுடன் சீரமைக்கப்பட்டுள்ளன.
மொத்தமாக 16 சுரங்கப் பாதைகள் (underpasses) அமைக்கப்படுகின்றன. இதில், ஆலம்பட்டி மற்றும் சுப்புலாபுரம் பகுதிகளில் மக்கள் எதிர்ப்பு காரணமாக சில பகுதிகளில் பணி தாமதமானது. தற்போது, அப்பகுதிகளிலும் 2 சுரங்கப் பாதைகள் உருவாக்கப்பட்டு வருகின்றன.
மொத்தமாக, இந்த நான்கு வழிச்சாலை திட்டம் தமிழ்நாட்டில் மட்டும் 129.92 கி.மீ தூரம் கொண்டதாகும். இதன் மூலம், பொருளாதார மையங்கள் இடையே இணைப்பு மேம்படுவதுடன், தமிழகம் மற்றும் கேரளா மாநிலங்களுக்கு இடையிலான சரக்கு போக்குவரத்து மற்றும் சுற்றுலா என்பனவும் மேம்படவுள்ளன.
முதல் கட்டமாக திருமங்கலம் – வடுகப்பட்டி சாலை டிசம்பர் 25ம் தேதி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
மதுரையில் ஆண்டுதோறும் கோலாகலமாக நடைபெறும் உலகப் புகழ்பெற்ற சித்திரை திருவிழா 2026ஆம் ஆண்டு ஏப்ரல் 19ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி…
பெண்களை அதிகமாக பாதிக்கும் கருப்பை வாய் புற்றுநோயைத் தடுக்கும் நோக்கில், 14 வயதிற்கு மேற்பட்ட பெண் குழந்தைகளுக்கான ஹெச்பிவி (HPV)…
தமிழகத்தில் இன்று (மார்ச் 3) பிற்பகல் 3:20 மணி முதல் மாலை 6:47 மணி வரை நிகழவுள்ள 2026 ஆம்…
மதுரை இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் மாசிப் பெருந்திருவிழாவை முன்னிட்டு முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது. கடந்த…
பிரதமர் நாளை மாலை மதுரையில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நடைபெறும் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்க இருப்பதை முன்னிட்டு, நகரம்…
காவல் துறை எஸ்.ஐ. தேர்வில் தமிழ்ப் பாடத்தில் இருந்து கேள்விகள் கேட்கப்படாதது தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தேர்வு முடிவுகளை…