டிரெண்டிங் செய்திகள்

அழகர் கோவிலில் ஆடித் திருவிழா ஜூலை 21ல் தொடக்கம்

aadi_festival.jpg

மதுரை மாவட்டத்தில் உள்ள அருள்மிகு ஶ்ரீ கள்ளழகர் சுந்தர்ராஜ பெருமாள் திருக்கோவிலில் நடைபெறும் ஆண்டு தோறும் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஆடித் திருவிழா, 2026 ஜூலை 21-ஆம் தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தொடர்ந்து ஒன்பது நாட்கள் பல்வேறு வாகன சேவைகள், சிறப்பு அலங்காரங்கள் மற்றும் ஆன்மிக நிகழ்வுகளுடன் விழா நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்வாக ஜூலை 28-ஆம் தேதி கள்ளழகர் குதிரை வாகனத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சியும், ஜூலை 29-ஆம் தேதி திருத்தேர் உற்சவமும் நடைபெற உள்ளன. இந்நிகழ்வுகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்ய உள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தேதிதிருவிழா நிகழ்ச்சி
21.07.2026காலை கொடியேற்றம்
21.07.2026மாலை அன்ன வாகனத்தில் புறப்பாடு
22.07.2026சிம்ம வாகனத்தில் நரசிம்ம அவதாரம்
23.07.2026அனுமந்த வாகனத்தில் புறப்பாடு
24.07.2026கருட வாகனத்தில் புறப்பாடு
25.07.2026காலை மறவர் மண்டபம் புறப்பாடு மற்றும் சுந்தரராஜன் பட்டியில் அழகர் திருமஞ்சனம்
25.07.2026இரவு சேஷ வாகனத்தில் புறப்பாடு
26.07.2026மோகினி அவதாரத்தில் புறப்பாடு
26.07.2026இரவு யானை வாகனத்தில் புறப்பாடு
27.07.2026காலை வெண்ணெய் தாழி சேவை
27.07.2026மாலை புஷ்ப சப்பரத்தில் புறப்பாடு
28.07.2026கள்ளழகர் குதிரை வாகனத்தில் புறப்பாடு
29.07.2026திருத்தேர்

திருவிழாவில் பங்கேற்கும் பக்தர்கள் கோவில் நிர்வாகம் அறிவிக்கும் வழிகாட்டுதல்களை பின்பற்றி ஒழுங்காக தரிசனம் செய்யுமாறு அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.