பாலப்பணிகள் நிறைவடையும் வரை வாகன ஓட்டிகள் மாற்று வழி பயன்படுத்த அறிவுறுத்தல்

madurai_news_18_12_25.jpg

மதுரை கோரிப்பாளையம் பாலத்தில் நடைபெறும் கட்டுமான பணிகளின் காரணமாக, டிசம்பர் 15 இரவு முதல் பணிகள் முடியும் வரை வைகை தென் கரை சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக மாநகர போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது.

பேருந்துகளுக்கான மாற்று வழித்தடம்

மாட்டுத்தாவணியிலிருந்து வைகை தென் கரை சாலை வழியாக சிம்மக்கல் செல்லும் பேருந்துகள்,
கே.கே. நகர் ஆர்ச் – அவுட்போஸ்ட் – கோரிப்பாளையம் – ஏ.வி. பாலம் வழியாக இயக்கப்படும்.

மற்ற வாகனங்களுக்கான மாற்று வழித்தடங்கள்

ஓபுளா படித்துறை பாலம் சந்திப்பிலிருந்து யானைக்கல் தரைப்பாலம் வழியாக எம்.ஜி.ஆர் பாலம் செல்லும் வாகனங்கள்,

  • முனிச்சாலை மெயின் ரோடு – நெல்பேட்டை சிக்னல் சந்திப்பு வழியாக,
  • அல்லது வைகை வடகரை சாலை – தேனி ஆனந்தம் சந்திப்பு வழியாக செல்லலாம்.

எம்.ஜி.ஆர் பாலம் சந்திப்பிலிருந்து யானைக்கல் தரைப்பாலம் வழியாக ஓபுளா படித்துறை செல்லும் வாகனங்கள்,

  • வைகை வடகரை சாலை – தேனி ஆனந்தம் வழியாக,
  • அல்லது யானைக்கல் தரைப்பாலம் – நெல்பேட்டை வழியாக செல்லலாம்.

கட்டுமான பணிகள் தடையின்றி நடைபெறவும், போக்குவரத்து நெரிசலை தவிர்க்கவும் இந்த மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. வாகன ஓட்டிகள் மாற்று வழித்தடங்களை பயன்படுத்தி, போக்குவரத்து காவலர்களின் அறிவுறுத்தல்களை கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.