சமீபத்திய

தேர்தலை தடுக்கும் ரெய்டா? – அமைச்சர் ஐ.பி. போர்க்கொடி!

திமுகவின் மூத்த தலைவரும், ஊரக உள்ளாட்சித் துறை அமைச்சருமான ஐ.பெரியசாமியின் வீடு மற்றும் அவரது தொடர்புடைய பல்வேறு இடங்களில் இன்று காலை முதல் அமலாக்கத்துறை (ED) அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னை, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட இடங்களில் நடைபெறும் இந்த சோதனைகள், 2006-2011 காலகட்டத்தில் வீட்டு வசதித் துறை அமைச்சராக இருந்த போது வருமானத்திற்கு அதிகமான சொத்து குவித்ததாக எதிர்காலத்தில் நிலுவையிலுள்ள வழக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், திண்டுக்கல்லில் தங்கியிருந்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு சோதனை குறித்து அதிகாரிகள் தகவல் அளித்ததாகவும், அவரும் அதை சகஜமாக ஏற்று, அதிகாரிகளுடன் உரையாடியதாக நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அந்த நேரத்தில் அமைச்சர் கூறியதாவது:

“இந்த ரெய்டு எதிர்பார்த்ததுதான். தென் மண்டலத்தில் கட்சிப் பணிகளை சிறப்பாக செய்து, திமுகவை வலிமையாக நிலைநிறுத்தியிருக்கோம். சட்டமன்றத் தேர்தல் அருகில்வரும்போது இப்படி சோதனையா? எங்களோட தேர்தல் வேலையை முடக்கத்தான் முயற்சி. ஆனால் நான் முன்பைப்போலவே செயல்படப் போகிறேன் – இல்லை, இன்னும் வேகமாக. முடங்கி போகமாட்டேன். நீங்க என்ன செய்யனுமோ செய்யலாம்… ஆகட்டும், பார்க்கலாம்!”

இதையடுத்து, அவரது வீட்டில் அங்குலம் அங்குலமாக சோதனை நடைபெறுவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

திமுக வட்டாரங்கள் இந்த சோதனையை அரசியலால் தூண்டப்பட்டது எனக் கண்டிக்கின்றன. சோதனைகள் எவ்வளவு நீடிக்கும் மற்றும் சட்டப்பூர்வ விளைவுகள் என்ன என்பதற்கான தெளிவு எதிர்காலத்தில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Thoonganagaram Admin

Recent Posts

மதுரை மீனாட்சி கோவிலில் நாளை முதல் சிறப்பு பூஜைகள்!

உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில் மகா கும்பாபிஷேக விழாவுக்கான பூர்வாங்க பூஜைகள் நாளை தொடங்கி செப்டம்பர் 11…

3 மணி நேரங்கள் ago

இன்று மதுரையில் கிருஷ்ண ஜெயந்தி கோலாகலம்!

மதுரை திருப்பாலை பகுதியில் உள்ள இஸ்கான் ஸ்ரீ ஸ்ரீ கிருஷ்ண பலராமர் திருக்கோவிலில் இன்று, செப்டம்பர் 4, 2026 அன்று,…

1 நாள் ago

ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு தேதி வெளியானது

மதுரை, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள அரசு கள்ளர் பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், காப்பாளர்கள் மற்றும்…

3 நாட்கள் ago

கும்பாபிஷேக ஏற்பாடு செப்.11 முதல் மூலவர் தரிசனம் இல்லை!

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில், மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர், கோவில் நிர்வாகம்செப்டம்பர் 11 முதல் 16 வரை மூலவர் தரிசனம்…

4 நாட்கள் ago

செப்.3 காலை 9.30 மணிக்கு அலங்காநல்லூரில் ஆர்ப்பாட்டம்

ஜல்லிக்கட்டு குறித்து தவெக சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா சட்டப்பேரவையில் தெரிவித்த கருத்துகளைக் கண்டித்தும், தவெக அரசைக் கண்டித்தும் செப்டம்பர் 3-ஆம்…

5 நாட்கள் ago

சோலமலை பொறியியல் கல்லூரி (தன்னாட்சி), மதுரை

1995 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சோலமலை பொறியியல் கல்லூரி, தரமான தொழில்நுட்ப மற்றும் மேலாண்மைக் கல்வியை வழங்குவதுடன், மாணவர்களின் திறன்…

7 நாட்கள் ago