மதுரை மாவட்டம், அழகர் மலை கள்ளழகர் கோவிலில் வருகிற ஜூலை 24-ஆம் தேதி ஆடி அமாவாசை விழா சிறப்பாக நடைபெறவுள்ளது. விழாவையொட்டி, அழகர் மலை உச்சியில் உள்ள நூபுரகங்கை தீர்த்தத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடலில் ஈடுபடுவார்கள்.
அந்நாளில் தீர்த்தமாடுவது பாக்கியங்களை அதிகரிக்கும் என மக்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது. தீர்த்தமாடிய பின்பு, பக்தர்கள் அங்குள்ள ராக்காயி அம்மன் சன்னதியில் தரிசனம் செய்து வழிபாடுகளை மேற்கொள்வார்கள்.
விழா நாளில் ராக்காயி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற உள்ளது. பக்தர்கள் நீராட வசதியாக நூபுரகங்கை தீர்த்த தொட்டி அடிவாரத்தில் மரத்தடுப்புகள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
அதையடுத்து, அன்று இரவு அழகர் மலை அடிவாரத்தில் உள்ள பதினெட்டாம்படி கருப்பண சுவாமி கோவிலில் சந்தனம் சாத்து பணி நடைபெறும். பின்னர், கருட வாகனத்தில் கள்ளழகர் பெருமாள் எழுந்தருளி புறப்பாடு கண்டு மக்கள் புன்னகையுடன் பக்தி பரவசத்தில் மூழ்குவார்கள்.
இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழுவும், கோவில் நிர்வாகத்தினரும் ஒருங்கிணைத்து செய்து வருகின்றனர்.
மதுரை மாவட்டத்தில் உள்ள அருள்மிகு ஶ்ரீ கள்ளழகர் சுந்தர்ராஜ பெருமாள் திருக்கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் ஆடித் திருவிழா, இன்று (ஜூலை…
மதுரை மாவட்டம் பேரையூர் வட்டத்திற்குட்பட்ட பாப்பி நாயக்கன்பட்டி–சங்கரலிங்கபுரம் பகுதியில் உள்ள சல்லுப்பன் கரடு அடிவாரத்தில் சுமார் 2,000 ஆண்டுகள் பழமையானதாகக்…
மதுரை மாவட்ட விவசாயிகளின் கோரிக்கைகள் மற்றும் விவசாயம் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில், மாவட்ட நிர்வாகம் நடத்தும் மாதாந்திர…
மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மின் பாதை பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளும் நோக்கில் நாளை (ஜூலை 18) திட்டமிட்ட மின்தடை…
தமிழகத்தின் சேலம் மற்றும் மதுரை ரயில்வே கோட்டங்களுக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் தண்டவாள பராமரிப்பு மற்றும் பொறியியல் பணிகள் மேற்கொள்ளப்பட…
மதுரை மாவட்டத்தில் உள்ள அருள்மிகு ஶ்ரீ கள்ளழகர் சுந்தர்ராஜ பெருமாள் திருக்கோவிலில் நடைபெறும் ஆண்டு தோறும் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஆடித்…