சமீபத்திய

கள்ளழகர் கோயிலில் ஆடிப்பெருந்திருவிழா – 51 அடி உயரத் தேர் இழுக்கும் ஆயிரக்கணக்கான பக்தர்கள்

மதுரை அருகே உள்ள அழகர்கோயில் கள்ளழகர் கோயிலில் நடைபெறும் ஆடிப்பெருந்திருவிழா சிறப்பு வாய்ந்ததாகும். இவ்வாண்டிற்கான ஆடித்திருவிழா, கடந்த ஆகஸ்ட் 1-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழா நாட்களில் சுந்தரராஜப் பெருமாள், அன்னம், சிம்மம், அனுமார், கருட, சேஷ, யானை, புஷ்ப சப்பரம் மற்றும் குதிரை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளினார்.

முக்கிய நிகழ்ச்சி – தேரோட்டம்
விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் இன்று காலை 8.40 மணிக்கு மேல் நடைபெற உள்ளது. ஐந்து நிலைகளுடன், 51 அடி உயரம் கொண்ட இந்த தேரில் 300-க்கும் மேற்பட்ட சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேரை இழுக்கும் பணிக்காக புதிய வடம் இணைக்கப்பட்டுள்ளது.

வசதிகள் மற்றும் பாதுகாப்பு
ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு எதிர்பார்க்கப்படுவதால், கோயில் நிர்வாகம் தண்ணீர் தொட்டிகள், வாகன நிறுத்துமிடம், தற்காலிக கழிப்பிடம், மருத்துவ முகாம் மற்றும் தீயணைப்பு வசதிகள் உள்ளிட்ட ஏற்பாடுகளை செய்துள்ளது. பாதுகாப்பு பணிகளில் சுமார் 1,000 போலீசார் ஈடுபட உள்ளனர்.

Thoonganagaram Admin

Recent Posts

2026 மதுரை சித்திரை திருவிழா முழு அட்டவணை வெளியீடு

மதுரையில் ஆண்டுதோறும் கோலாகலமாக நடைபெறும் உலகப் புகழ்பெற்ற சித்திரை திருவிழா 2026ஆம் ஆண்டு ஏப்ரல் 19ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி…

3 நாட்கள் ago

பெண்களை காக்க மதுரையில் புதிய சுகாதார திட்டம்

பெண்களை அதிகமாக பாதிக்கும் கருப்பை வாய் புற்றுநோயைத் தடுக்கும் நோக்கில், 14 வயதிற்கு மேற்பட்ட பெண் குழந்தைகளுக்கான ஹெச்பிவி (HPV)…

4 நாட்கள் ago

பக்தர்கள் கவனம் சந்திர கிரகணம் காரணமாக கோயில்கள் இன்று நடை அடைப்பு

தமிழகத்தில் இன்று (மார்ச் 3) பிற்பகல் 3:20 மணி முதல் மாலை 6:47 மணி வரை நிகழவுள்ள 2026 ஆம்…

5 நாட்கள் ago

மாசித் திருவிழா தேரோட்டம் கோலாகலம்

மதுரை இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் மாசிப் பெருந்திருவிழாவை முன்னிட்டு முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது. கடந்த…

6 நாட்கள் ago

பிரதமரின் வருகையையொட்டி மதுரையில் நாளை போக்குவரத்து மாற்றம்

பிரதமர் நாளை மாலை மதுரையில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நடைபெறும் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்க இருப்பதை முன்னிட்டு, நகரம்…

1 வாரம் ago

இரண்டரை மாதத்தில் அரசு வேலை இபிஎஸ் உறுதி

காவல் துறை எஸ்.ஐ. தேர்வில் தமிழ்ப் பாடத்தில் இருந்து கேள்விகள் கேட்கப்படாதது தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தேர்வு முடிவுகளை…

1 வாரம் ago