சமீபத்திய

“நீதிபதிகளை மிரட்டுகிறார்கள்” – அண்ணாமலை குற்றச்சாட்டு

திருப்பரங்குன்றம் தீப விவகாரம் மற்றும் நீதிமன்ற உத்தரவுகள் தொடர்பாக ஏற்பட்ட சர்ச்சைக்கு நடுவில், நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன் மற்றும் ஆனந்த் வெங்கடேஷ் மீது திமுக மற்றும் இந்தியா கூட்டணி கட்சிகளின் எம்.பி-க்கள் இம்பீச்மெண்ட் நோட்டீஸ் தாக்கல் செய்திருப்பது அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரசியலமைப்புச் சட்டத்தின் படி, மக்களவையில் 100 எம்.பிகள் அல்லது ராஜ்யசபாவில் 50 எம்.பிகள் கையொப்பமிட்டால் நீதிபதிக்கு எதிராக இம்பீச்மெண்ட் செயல்முறை தொடங்க முடியும். இந்தியாவில் இதுவரை எந்த நீதிபதியும் இம்பீச் செய்யப்பட்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதி கோரி ராம ராவிக்குமார் மனு தாக்கல் செய்தபோது, மதுரை கிளை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், மத்திய பாதுகாப்புடன் தீபம் ஏற்ற அனுமதி வழங்கினார். கோயில் நிர்வாகமும், தர்கா நிர்வாகமும் எதிர்ப்பு தெரிவித்தபோதிலும், “இது ஒரு சிறிய சடங்கு; யாருடைய மத உரிமையையும் பாதிக்காது” என்று நீதிபதி விளக்கம் அளித்தார்.

அரசு இந்த உத்தரவை செயல்படுத்தாததால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இதே சூழ்நிலையில், டிசம்பர் 9ஆம் தேதி திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியின் எம்.பிகள் — காங்கிரஸ், சமூக்வாதி, ஆம் ஆத்மி போன்ற கட்சிகளைச் சேர்ந்தவர்களும் உட்பட 107–120 பேர் — மக்களவை ஸ்பீக்கரிடம் இம்பீச்மெண்ட் நோட்டீஸ் தாக்கல் செய்தனர். கனிமொழி, டி.ஆர். பாலு, பிரியங்கா காந்தி, அகிலேஷ் யாதவ், ஓவைசி உள்ளிட்டோர் இதில் கையொப்பமிட்டுள்ளனர்.

இதற்கு பதிலளித்த முன்னாள் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை,
“அரசுக்கு பிடிக்காத தீர்ப்பை வழங்குவதற்காக நீதிபதிகளை இலக்காக்குவது நீதி மன்றத்தின் தன்னாட்சிக்கு நேரடி அச்சுறுத்தல். தீப விவகாரம் மட்டுமில்லை; திமுக அமைச்சர்களுக்கு எதிரான சொத்து மற்றும் ஊழல் வழக்குகளைத் தடுத்து நிறுத்தும் நிலையில் சில நீதிபதிகள் இருப்பதால் அரசே இம்பீச்மெண்ட் மிரட்டலை பயன்படுத்துகிறது,”
என்று குற்றம்சாட்டினார்.

மேலும் அவர்,
“உச்சநீதிமன்றமே எந்த குற்றத்தையும் சுட்டிக்காட்டாத சூழலில், ஏன் இம்பீச்மெண்ட்? இது நீதியரசர்களுக்கு அழுத்தம் கொடுக்க முயற்சிக்கிறதா?”
என்ற கேள்வியையும் எழுப்பினார்.

அதோடு,
“கோட்டின் உத்தரவை பின்பற்றாத துறைகளைக் காப்பாற்றும் நோக்கில் இம்பீச்மெண்ட் நடவடிக்கையை முன்வைக்கிறது திமுக அரசு,”
என்றும் அவர் கருத்து தெரிவித்தார்.

இந்த விவகாரம் தற்போது நாடு முழுவதும் அரசியல் மற்றும் நீதித்துறை வட்டாரங்களில் தீவிர விவாதத்தை உருவாக்கியுள்ளது.

Thoonganagaram Admin

Recent Posts

மதுரை மீனாட்சி கோவிலில் நாளை முதல் சிறப்பு பூஜைகள்!

உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில் மகா கும்பாபிஷேக விழாவுக்கான பூர்வாங்க பூஜைகள் நாளை தொடங்கி செப்டம்பர் 11…

3 மணி நேரங்கள் ago

இன்று மதுரையில் கிருஷ்ண ஜெயந்தி கோலாகலம்!

மதுரை திருப்பாலை பகுதியில் உள்ள இஸ்கான் ஸ்ரீ ஸ்ரீ கிருஷ்ண பலராமர் திருக்கோவிலில் இன்று, செப்டம்பர் 4, 2026 அன்று,…

1 நாள் ago

ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு தேதி வெளியானது

மதுரை, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள அரசு கள்ளர் பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், காப்பாளர்கள் மற்றும்…

3 நாட்கள் ago

கும்பாபிஷேக ஏற்பாடு செப்.11 முதல் மூலவர் தரிசனம் இல்லை!

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில், மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர், கோவில் நிர்வாகம்செப்டம்பர் 11 முதல் 16 வரை மூலவர் தரிசனம்…

4 நாட்கள் ago

செப்.3 காலை 9.30 மணிக்கு அலங்காநல்லூரில் ஆர்ப்பாட்டம்

ஜல்லிக்கட்டு குறித்து தவெக சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா சட்டப்பேரவையில் தெரிவித்த கருத்துகளைக் கண்டித்தும், தவெக அரசைக் கண்டித்தும் செப்டம்பர் 3-ஆம்…

5 நாட்கள் ago

சோலமலை பொறியியல் கல்லூரி (தன்னாட்சி), மதுரை

1995 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சோலமலை பொறியியல் கல்லூரி, தரமான தொழில்நுட்ப மற்றும் மேலாண்மைக் கல்வியை வழங்குவதுடன், மாணவர்களின் திறன்…

7 நாட்கள் ago