கோரிப்பாளையம் சந்திப்பு பகுதியில் நடைபெற்று வரும் உயர் நிலைப் பாலத் திருத்தப் பணிகளையொட்டி, வாகனப் போக்குவரத்தில் தற்காலிக மாற்றம் செய்யப்படுவதாக மதுரை மாநகரக் காவல் ஆணையா் அலுவலகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியான செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
கபடி சிலை சுற்றுச்சாலையிலிருந்து கோரிப்பாளையம் நோக்கி வரும் வாகனங்கள், இதுவரை பாலம் ஸ்டேஷன் சாலையின் இடதுபுறம் செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், இடதுபுறத்தில் பாலப்பணிகள் நடைபெற உள்ளதால், ஆகஸ்ட் 14 (வியாழக்கிழமை) முதல் அந்த வழியாகச் செல்வோர் பாலம் ஸ்டேஷன் சாலையின் வலதுபுறம் செல்ல வேண்டும்.
இந்த மாற்றம் பணிகள் முடியும் வரை தற்காலிகமாக அமலில் இருக்கும். பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் இதற்குத் தேவையான ஒத்துழைப்பை வழங்குமாறு காவல் துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
மதுரையில் ஆண்டுதோறும் கோலாகலமாக நடைபெறும் உலகப் புகழ்பெற்ற சித்திரை திருவிழா 2026ஆம் ஆண்டு ஏப்ரல் 19ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி…
பெண்களை அதிகமாக பாதிக்கும் கருப்பை வாய் புற்றுநோயைத் தடுக்கும் நோக்கில், 14 வயதிற்கு மேற்பட்ட பெண் குழந்தைகளுக்கான ஹெச்பிவி (HPV)…
தமிழகத்தில் இன்று (மார்ச் 3) பிற்பகல் 3:20 மணி முதல் மாலை 6:47 மணி வரை நிகழவுள்ள 2026 ஆம்…
மதுரை இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் மாசிப் பெருந்திருவிழாவை முன்னிட்டு முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது. கடந்த…
பிரதமர் நாளை மாலை மதுரையில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நடைபெறும் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்க இருப்பதை முன்னிட்டு, நகரம்…
காவல் துறை எஸ்.ஐ. தேர்வில் தமிழ்ப் பாடத்தில் இருந்து கேள்விகள் கேட்கப்படாதது தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தேர்வு முடிவுகளை…